<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19366730</id><updated>2012-01-07T14:09:59.571-06:00</updated><title type='text'>நிறங்கள்</title><subtitle type='html'>வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>95</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4635974870203576753</id><published>2011-12-30T22:23:00.002-06:00</published><updated>2011-12-30T22:34:18.330-06:00</updated><title type='text'>எல்லோர்க்கும் அன்புடன்....</title><content type='html'>எல்லோர்க்கும் அன்புடன் என்று இதைத் தொடங்கவேண்டுமா? அல்லது "ஏன் இந்தப்பக்கம் தலையே காட்டவில்லை என்று கைநீட்டி அழைத்த கயல்விழிமுத்துலட்சுமிக்கு அன்புடன் என இதைத் தொடங்க வேண்டுமா என்று தெரியவில்லை. அவர் அனுப்பிய கடிதத்தின் பின் தான் நெடுநாட்கள் கிடப்பில் போட்டிருந்த வலைப்பக்கம் பற்றிய ஞாபகம் தட்டியது. மரங்களின் மௌனத்தை ரசித்தபடி தரையில் தலைகிடத்தியிருக்கும் பட்டம் ஒரு திடீர் அசைவில் எழுந்தாடுவதுபோல் வாழ்வின் கணங்களும், எழுத்தும் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு நாட்களில் புத்தாண்டு தொடங்குகிறது. இதையெல்லாம் சலனமின்றிக் கடந்துகொண்டிருந்த மனதில் வழமைக்கு மாற்றாய் எண்ணப் பின்னல்கள். பழைய வரவு செலவுக் கணக்கென்று பார்த்தால் மகிழ்ச்சி, வருத்தம், நண்பர்கள், பகைவர்கள், லட்சியம், அலட்சியம்  என்று சகலவற்றிலும் கொஞ்சம் சம்பாதித்தோம், கொஞ்சம் இழந்தோம் என்று கடந்த ஆண்டைச் சுருட்டி வைத்துவிடலாம்தான். ஆனாலும் பன்னிரண்டுக்கொரு முறை தலைநீட்டும் குறிஞ்சியாக மூச்சுமுட்டும் லௌகீகப் பயணத்தில் கொஞ்சமே கொஞ்சமேனும் மானுட சீவிதத்தில் நிறைவு கொள்ளும்படியான செயல்களை அடையாளம் கண்டு இணைந்துகொள்ள வைத்த வகையில் 2011 ஒரு நல்ல ஆண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;இனிவரும் ஆன்டு தனக்குள் என்னென்ன ஒளித்துவைத்திருக்கிறதென்பது போகப்போகப் புலனாகும். ஒரு மயிலின் விரிக்காத தோகையைப்போல் அது இப்போது வெறுமனே நீண்டு கிடக்கிறது. இதுவரை பார்த்திருக்காத ஒரு பூவின் நிறத்தை, அறிந்திருக்காத தொடுகையை, கேட்டு மறந்துபோன பாட்டொன்றின் மெட்டை, புதிய காதலொன்றின் மலர்ச்சியை, வடிவமற்ற வெளியொன்றின் தொடக்கத்தை, எங்கோ விட்டுப்போனதொன்றின் தொடர்ச்சியை இப்படி எதையும் இனிவரும் ஆண்டும் வழங்கலாம். கேட்டதைக் கொடுக்கும்படியான ஆண்டாகவோ அல்லது கொடுத்ததை ஏற்கும்படியான மனம் தரும் ஆண்டாகவோ 2012 எல்லோர்க்கும் அமையட்டும். எனக்கு எப்போதேனுமேனும் இங்கே எழுத வந்துபோகும்படியான ஆண்டாகவும் 2012 அமையட்டும்:))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4635974870203576753?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4635974870203576753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4635974870203576753' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4635974870203576753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4635974870203576753'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2011/12/blog-post.html' title='எல்லோர்க்கும் அன்புடன்....'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4244365444377387392</id><published>2011-02-09T00:13:00.002-06:00</published><updated>2011-02-09T00:21:28.864-06:00</updated><title type='text'>நான் யார் தெரியுமா?</title><content type='html'>இன்று எதேச்சையாக எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது தோழி சொன்னாள், வெளியே எங்கள் குடியிருப்புக்குச் சொந்தமான பூங்காவில் விளையாடுகிற இங்கிருக்கிற இந்தியக் குழந்தைகள்  தங்களுக்குள் குழு அமைத்துக் கொள்வதும், வலுவான குழு வலுவற்ற தனிக் குழந்தைகள் அல்லது குழுவை அவமானப்படுத்துவதுமாக நடந்துகொள்வதை.&lt;br /&gt;அவர்களுக்குப் பெரியவர்கள் மீதும் எந்த ஒரு மரியாதையோ, மதிப்போவும் இல்லாதிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டு ஒரு உதாரணம் சொன்னாள், தன் ஒரு வயதுப் பெண் குழந்தையை அதே பூங்காவில் விளையாடவிட்டுக் கொண்டிருந்தபோது அருகே இருந்த ஒரு ஐந்து வயது இந்தியச் சிறுவன் இவள் கண் எதிரிலேயே இவள் குழந்தையின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறான். இவள் "அப்படிச் செய்யக்கூடாது, பாப்பாவின் கண்களில் மண் விழும்" என்று சொல்லியிருக்கிறாள். மீண்டும் அந்தச் சிறுவன் நிறுத்தாமல் அதைச் செய்யவே "நீ நிறுத்த வேண்டும்" என்று தன் குரலில் கொஞ்சம் கடுமையைக் கூட்டியிருக்கிறாள். அதற்கு அந்தச் சிறுவனின் பதில் "என்னைப் பார்த்துச் சத்தம் போடுகிறீர்களா? நான் யார் தெரியுமா? என் கடைசிப் பெயர் என்ன தெரியுமா?" என்று அவனும் கடுமையான மொழியிலேயே பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். கேட்க அதிர்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் இந்தக் குழந்தைகளின் மனதிலும் பரவும் வன்முறை பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கைகளினும் மேலாகப் பயங்களும் கவ்வ ஆரம்பிக்கின்றன. ஏழு வயதைத் தொட்டிருக்கும் மகன் என் துணையின்றி மெல்ல மெல்லத் தானாகத் தன் நட்புகளைத் தேடிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். தானே பொறுப்பேற்றுத் தேர்வு செய்தாலும் பிறகு நட்பின் பிரச்சினைகளைக் கையாளத் தெரியாமல் அவன் குழப்பங்கள் கொள்ளும்போது கூட நிற்கிறோம்.  வீட்டில் அவனினும் ஐந்து வயது இளைய குழந்தையிடம் அவன் நாளும் காட்டியாகவேண்டிய பொறுமையிலிருந்தும், புத்தகங்கள் இன்னபிற நடைமுறை நிகழ்வுகள் சார்ந்த வகுப்புகளிலிருந்தும் ஆரோக்கியமான, அனுசரனையான உறவுகளைப் பிறரிடம் பேணுவது பற்றிய அறிவை ஓரளவு பெற்றே இருக்கிறான். ஆனாலும் கைகளில் கத்தியிலாவிட்டாலும், கவசங்களேனும் இல்லாமல் நிற்க பிஞ்சுகளுக்கும் முடியாதுதான் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையாகத் தேர்வு செய்த நண்பன் ஒருவன் நாட்கள் செல்லச் செல்ல இவனைத் தனக்குக் கீழே ஏவும் எல்லாவற்றையும் செய்பவனாக ஆக்கப் பார்ப்பதாக உணர ஆரம்பித்தான். தன்னைப் பற்றிய பெருமைகளை முன்வைப்பதில் சளைக்காதவனாகவும், மற்ற குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் "அதுக்கு இப்ப என்ன?" என்று நக்கலைப் பதிலளிப்பவனுமாகத் தன் நண்பன் இருப்பதை உணர்ந்த தருணத்தில் "இப்படிப் பேசுவது மற்றவருக்கு நீ மரியாதை தருவதாக இல்லை" என்று தனக்குத் தெரிந்ததைக் கூறியுமிருக்கிறான். அதற்கு நண்பனின் பதில் "மரியாதைன்னா என்ன?".&lt;br /&gt;இவனிடமிருந்து எல்லாப் பொருட்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புபவனாகவும் அதேசமயம் தன் பொருள் ஏதையும் இவன் தொட்டாலும் "எங்க அம்மா யாருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு(இந்திய அம்மாதான்) சொல்லியிருக்காங்க, ஏன்னா என்னோடது புதுசு, அதோ அங்க நிக்கறாம்பாரு... அவன் தன் பொருளை எல்லோருக்கும் கொடுப்பான், அதப் போயி எடுத்துக்க" என்று அறிவுரை சொல்பவனுமாக நண்பர் போய்க்கொண்டிருக்கவே ஒரு கட்டத்தில் "இந்த நட்பிலிருந்து நான் எப்படி வெளிவருவது?" என்ற ஆலோசனைக்காக எங்களிடம் வந்து நின்றான். நட்பை ஆரம்பிப்பது எளிதானதாகவும், முறிப்பது கடினமானதுமாகவே இருந்து விடுகிறது எல்லா வயதிலும். பிறகு அவன் ஆசிரியை, முதல்வர் உள்ளிட்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்தோம் பிரித்து விடுவதே சிறந்தது என்று. ஒரு நட்பின் வெற்றிடத்தை இன்னொரு நட்பால் காற்றுபோல வந்து நிரப்பிவிட்டுக் கொண்டேவும் இருக்கிறது காலம் எல்லோருக்கும். இது பலருக்கும் ஏற்படுகிற அனுபவம்தான். ஆனாலும் கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மாசுமற்ற மனங்களிலும் கழுவ முடியாத கறைகள் எங்கிருந்து வந்து படிகின்றன? புத்தகங்களும், பாடங்களும் பள்ளிகளில் அடுத்தவன் மேலான அன்பை வலியுறுத்திக் கொண்டிருக்கக் கண்களுக்குப் புலப்படாத கத்திகளோடு கல்விச்சாலைகளிலும் பிஞ்சுகள் ஏன்? நம் வீடுகளும், குடும்பங்களும் குழந்தைகள் என்ற பெயரில் எவற்றை உற்பத்தி செய்கின்றன? அவர்களின் மனதிலும் நம் மன அழுக்குகளைக் கொட்டி கொட்டியே நாம் குழந்தைகளுக்குப் பதிலாகக் குப்பைத் தொட்டிகளையா வளர்த்துக் கொண்டு வருகிறோம்? யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும் பல விசயங்களைக் கூப்பிட்டுச் சொல்கிறது நிகழ்காலம். முதன்முதலாக மகனை இரண்டு வயதில் நூலகத்தின் விளையாடும் இடத்தில் விட்டிருந்தபோது இவனினும் கொஞ்சம் பெரிய பெண்குழந்தை ஒன்று இவனுக்குப் பொம்மைகளைத் தராமல் எடுத்து வைத்துக்கொண்டது. இதைத் தூர இருந்து கவனித்த முடியும், முகமும் ஒரே வெளிர் நிறமான பாட்டி வந்து அந்தப் பேத்திக் குழந்தைக்குச் சொன்னாள், "அவனை உனக்குத் தெரியாது என்றோ நண்பன் இல்லை என்றோ பகிரமறுப்பது மோசமான செயல், நீ அவனோடு சேர்ந்துதான் விளையாட வேண்டும்" என்று. அந்தக் குழந்தையும் செய்தது. இதோ ஆறு வயது இந்திய தேவதை தன் தோழியிடம் கூறிக்கொண்டு விலகி நடந்துகொண்டிருக்கிறாள் "she doesn`t belong to us" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;பல் இனம், பல் கலாச்சாரம் சூழ்ந்த வாழ்வியல் சூழலிலும் நாம் நம் இந்தியக் குழந்தைகளைத் தனித்துத் தெரியும்படியாகவேதான் வளர்த்து வருகிறோமோ என்றும் சில நேரங்களில் எண்ணத்தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4244365444377387392?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4244365444377387392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4244365444377387392' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4244365444377387392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4244365444377387392'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2011/02/blog-post.html' title='நான் யார் தெரியுமா?'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-3603962419465592243</id><published>2010-12-21T17:12:00.002-06:00</published><updated>2010-12-21T17:26:08.839-06:00</updated><title type='text'>பாதை</title><content type='html'>வலையில் எழுதுவது நிர்ப்பந்தங்களற்றுப் போனதால் சில மாதங்கள் பக்கத்தையே திறந்து பார்க்கவில்லை. நண்பர்கள் ஜோதிஜி, இரா.தங்கபாண்டியன், போலூர் தயாநிதி, விஜி ஆகியோரின் பின்னூட்டங்கள் நாள்கணக்கில் காத்திருந்தன போலும், இன்றுதான் பிரசுரித்தேன். மன்னிக்கக் கோருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஏதோ ஒரு பொழுதில் தோன்றிய இந்த ஒற்றையடிப்பாதைக்காய்ப் பக்கத்தைத் திறந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடந்து நடந்து புற்களைக் கொன்று&lt;br /&gt;போட்ட ஒற்றையடிப்பாதை &lt;br /&gt;தனித்துக் கிடக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் படர்கின்றன புற்களின் வேர்கள்&lt;br /&gt;கால் அழுத்தமற்ற ஆசுவாசத்தோடு&lt;br /&gt;&lt;br /&gt;கொன்றை மரம்கூட&lt;br /&gt;பூக்களை உதிர்த்திருக்கிறது&lt;br /&gt;கொண்டாட்டச் சிவப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல ஊர்ந்து நகர்கின்றது&lt;br /&gt;இரைவிழுங்கிய நாகம்&lt;br /&gt;தன் உடல்தடத்தைப் பதித்தபடி&lt;br /&gt;சந்தடியின்மையில் பெருமூச்செறிந்து&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் முழுதும் அழிந்திடாத&lt;br /&gt;பாதை காத்திருக்கிறது&lt;br /&gt;காலடி ஓசைகளைக் கனவினில் சுமந்து&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலென்ன?&lt;br /&gt;திசைகளை அழித்த கால்களுக்கில்லை&lt;br /&gt;இனியெப்போதும்&lt;br /&gt;நினைவுகள் கனக்கும் பாதையின் பாரம்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-3603962419465592243?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/3603962419465592243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=3603962419465592243' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/3603962419465592243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/3603962419465592243'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/12/blog-post.html' title='பாதை'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4928290853853319499</id><published>2010-08-23T18:43:00.002-05:00</published><updated>2010-08-23T18:59:33.223-05:00</updated><title type='text'>ஒரு பிரபலமற்ற பதிவரின் நூல்வெளியீடு</title><content type='html'>தமிழ்மணம் நிர்வாகக்குழுவில் பங்கேற்றும் தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டும் பணியாற்றி வரும் நண்பர்களில் ஒருவர் இரா. செல்வராசு. பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதிவருபவரும் அவர். வலைப்பதிவுகள் என்பவை சிறந்த மாற்று ஊடகங்களாக அறிமுகமானவை. ஆனால் சமீபகாலமாக வலைப்பக்கங்களும் பலநேரங்களில் வணிக, வியாபாரத் தந்திர ஊடகங்களைப்போலவே ஆகிவிட்டனவோ எனக் கருதுமளவு அவற்றின் உள்ளடக்கங்களும், செயல்பாடுகளும் ஆகிக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களுக்கொருமுறை அவியலாகவும், குவியலாகவும், தாளிப்புகளாகவும் எப்படியேனும் அதிக பார்வைகள் கிடைக்க வேண்டுமே என ஏ ஜோக்குகள் உள்ளிட்ட தகிடுதத்த வேலைகளோடு கனஜோராக வலைப்பதிவு வியாபாரம் நடந்தேறிக்கொண்டுள்ளன. வாசகர் பரிந்துரை எனும் மோசடிகளில் ஈடுபடுவதிலும்கூட யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லை. வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து மின் அரட்டை வழியாகவோ, தொலைபேசி வழியாகவோ அல்லது அடுத்தடுத்த சந்திப்புகள் வழியாகவோ கூட்டமொன்றைச் சேர்த்து விட்டால் அல்லது சேர்ந்துவிட்டால் நிரந்தர வாசகர் பரிந்துரைதான் என்ன எழுதினாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகப் பெரிதாகிக் கொண்டிருக்கும் வலைச்சமுத்திரத்தில் ஆரம்ப காலம் முதல் ஏதோ ஒரு வகையிலும், நேர்மையாகவும் இச்சமுத்திர உருவாக்கத்திற்காய் அப்போதைய ஒன்றுமற்ற மணல்வெளியில் உண்மையான அர்ப்பணிப்போடு சொட்டுச் சொட்டாய்ச் சுரந்தவர்கள் இப்போது அதன் அடியாழத்தில் வெளித் தெரியாதவர்களாய்க் கரைந்தபடி இதன் நீரோட்டம். வலைப்பதிவுகளில் ஆரம்பம் முதல் இயங்கிவரும் இரா.செல்வராசும்கூட அப்படிப்பட்ட ஒருவராய் அடியாழம் அமிழ்ந்தவராய், இப்போதும் எப்போதாவது அவர் எழுதினாலும்கூட வாசகர் பரிந்துரை ஓடங்களில் மிதக்காதவராய் இப்பரப்பில் இருந்துவருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது கல்யாணமாகி 4 மாசமாச்சே, உன் மருமகளுக்கு இன்னும் விசேசமில்லையா?" என்று பேசுவது போல் "வலைப்பதிவுக்கு வந்து ஒருவருசமாச்சே இன்னும் புஸ்தகம் போடலையா?" என்று கேட்கும் சூழலே உருவாகி, பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் அன்றாடம் சந்தித்துக் கொள்கிற, வியாபாரம் பேசிக்கொள்கிற நிலையே உருவாகிவிட்ட &lt;br /&gt;இந்தப் பின்னுக்கும் பின்னவீனத்துவ காலம் வந்துதான் "நாமும் நம் எழுத்தைத் தொகுப்பாக்கலாமா? அவை அதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கின்றனவா? இது தமிழுக்கும், தமிழ் வாசகனுக்கும் சிறிதேனும் பயன் தருமா?" என்றெல்லாம் மிகுந்த தன்னடக்கத்தோடு யோசித்து யோசித்து ஒருவழியாக தனது எட்டாண்டுக்கும் மேலான எழுத்து அனுபவத்திற்குப் பிறகு ஒரு தொகுப்பு வெளியிடும் முடிவை இரா. செல்வராசு எடுத்திருக்கிறார். "மெல்லச் சுழலுது காலம்" என்ற தலைப்பில் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகளாய் "வடலி" பதிப்பகம் மூலம் வரும் அவரது நூல்  ஆகஸ்டு 26 அன்று ஈரோடு கொங்கு கலை மன்றத்தின் சக்தி மசாலா அரங்கில் மாலை 4 மணியளவில் வெளியீட்டு விழா காண இருக்கிறது. விருப்பமுள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். தமிழ்மண நிறுவனர் காசி அவர்களால் வெளியிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு ஆண்டுகளாய் இங்கே எழுதியும் தன்னைப் பிரபல பதிவராய் ஆக்கிக்கொள்ளத் தெரியாத இரா.செல்வராசு தன் நூலுக்கு ஒரு அணிந்துரை பெற்றுக்கொள்ளவும்கூட இன்னொரு பிரபல பதிவரை அணுகாத தவறையும் செய்திருக்கிறார்:)) &lt;br /&gt;&lt;br /&gt;கீழே அத்தொகுப்புக் குறித்த ஒரு வாசகப் பார்வையாக ஒரு பிரபலமற்ற பதிவர் எழுதிய கட்டுரை:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                            &lt;strong&gt;வாழ்வின் மொழி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து ஒரு தவம் என்றும், எழுத்து ஒரு வேள்வி என்றும் புகழின் வெளிச்சத்தில் நிற்கிற எழுத்தாளன் ஒருவன் கூறுகையில் அவனை இப்போது அதாவது ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் அவன்மீது அடிக்கப்படுகிற காலகட்டத்தில் கூடிநிற்கிற கூட்டமும் ஆமோதித்து ஆரவாரித்தபடி இருக்கும். ஆனால் அவனே கையிலிருந்த காசு முழுதும் தபால்தலையாக்கித் தன் படைப்புகளை விடாது ஊடகங்களுக்கு அனுப்புவதும், பின்பு அவை பிரசுரமாகாமலே திருப்பி அனுப்பப்படுவதுமான காலமொன்றில் அக்கம்பக்கத்தினரால்கூட உதாசீனப்படுத்தப்பட்டவனாக இருந்திருப்பான். நல்லெழுத்து, வல்லெழுத்து என்று பின்னால் உச்சியில் வைக்கப்படுகிற பல எழுத்துக்களுக்கும்கூட துவக்ககால இலக்கணம் இப்படியாக இருந்துமிருக்கிறது. எழுத்துக்களுக்கான கதவுகளும், வாசல்களும் அவ்வளவு எளிதில் தமிழ்ச்சூழலில் திறந்திருக்கப்பட்டதில்லை. எழுத நினைப்பவனுக்கு எழுதமுடிவது மட்டுமல்ல, நல்ல படைப்புகளை, நூல்களை வாசிக்க நினைக்கும் தாகம் உள்ளவனுக்கு அவற்றை வாங்கிப் படிக்கிற வசதியும்கூடப் பலநேரங்களில் கைகூடிவிடுவதில்லைதான். ஒரு அரசுப்பள்ளியில் அது இலவசமானது என்பதாலேயே சேரமுடிந்து கல்வியில் மேலேறிக்கொண்டிருந்த எனக்கு எப்படியோ தொற்றிக்கொண்ட வாசிப்புமோகத்தின்பொருட்டுத் தேடியலைந்த புத்தகங்கள் வாங்கிப்படிக்க முடிந்ததில்லை. அந்தச் சோர்ந்து கிடந்த சிறு உள்ளூர் நூலகச் சுவர்களில் ஒட்டியிருந்த புத்தகங்கள் தாண்டி அப்போது வேறெதையும் வாசிக்க வாய்ப்பிருந்ததில்லை. எத்தனையோ பேருக்கும் இதுதான் நிலையென்றும் இருந்திருக்கலாம். எழுத நினைத்தும் எழுதப்படாத கதைகளும், வாசிக்க நினைத்தும் வாசிக்கப்படாத எழுத்துக்களும் வடிக்கும் பள்ளங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருக்கும் சொல்ல இருக்கும் கதைகள் குறைந்துபோவதில்லை. ஒரு அம்மிக்கல் கொத்த வருபவரும், கோடாலிக்கொண்டை முடிந்த ரப்பர்வளையல் பெண்ணும் பேசிக்கொண்டிருக்கும் உரையாடல்கூட அத்தனை உணர்வுகளோடும், நுணுக்கங்களோடும் ஒரு சிறுகதையைக் காற்றில் எழுதிச்செல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இப்படிச் சாமானியர்களின் வாழ்வும், அனுபவமும், ஆதங்கங்களும், அக்கறையும் அவர்களாலேயே அவர்களின் மொழியிலேயே எழுத்தில் பதிவுசெய்யப்படப் போதிய வாய்ப்புகள் அற்ற குறையை இந்த நூற்றாண்டில் இணையம் கொஞ்சம் போக்கியிருக்கிறது. கணினியில் தமிழும், அத்தமிழில் படைப்புகளும் செய்வது இலகுவான காலம்தொட்டே எழுதிவந்தவர்களில் ஒருவராக இந்நூலாசிரியர் செல்வராசு இருந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழனும், தாயகத் தமிழனும் ஒரு சிறு பெட்டி வழியே தம் மொழியில் எழுதிப் பரவசமடைகிற தருணங்கள் அழகானவை. அதிலும் வேர்விட்டு விலகி வேறொரு தேசத்தில் விழுதூன்ற வரும் தமிழருக்கு இவ்விணைய எழுத்து ஊடகங்கள் அற்புதமானவை. அப்படியான விரிவெளி வழியேதான் செல்வராசு அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. தனக்கென்று ஒரு மொழியும், நடையும், இயல்பும் கொண்டு எழுதிவந்த இவரிடம் அவரின் மண்வாசனை எழுத்துக்கள் இழுத்துச் சென்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இணைய ஊடகத்தின் இன்னொரு சிறப்பம்சம் எழுதுபவர்களுக்கும், வாசகர்களுக்குமான இடைவெளியற்ற தன்மை. எழுதிப் பிரசுரிக்கும் பத்தாவது நிமிடத்தில் உலகின் வேறொரு மூலையிலிருக்கும் தமிழர் வாசித்து முடித்துக் கருத்து பரிமாற்றமோ, உரையாடலோ நிகழ்த்திவிடமுடியும் எழுதியவருடன். அதேசமயம் அந்த உரையாடல் பயனுள்ளதாக இருக்கும் ஒன்றாக வேண்டுமென்றால் எழுதுபவரும், வாசிப்பவரும் கருத்துரீதியான முரண்பாடுகளையும் தாண்டி உரையாடலுக்கான நெகிழ்வுத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே சாத்தியம். அப்படியொரு நெகிழ்வுத்தன்மையை எப்போதும் கொண்டிருப்பவர் செல்வராசு. அது அவர் எழுத்தில் ஒலிக்கும் வாழ்வுமீதான தீராக்காதலின் இன்னொரு பரிமாணம். பேரண்டம் என்பதை பெரியதொரு அன்புப் பிண்டமாய் உருவகப்படுத்தினால் அதிலிருந்து தெறித்து விழுந்த சிறு பகுதியாய் தனிமனித வாழ்வைக் கொள்ளலாம். ஒரு வலைபின்னும் சிலந்தியைப் போல் ஒவ்வொரு மனித உயிரும்கூடத் தன்னைச் சுற்றித் தனக்கென்று மனிதர்களைச் சேர்த்துவைத்துக்கொள்ளவே என்றும் பிரியப்படுகிறது. இதன் சூட்சுமங்களைத் தன் அனுபவங்களையே சோதனைக்கூடமாக்கித் தெளிவுபடுத்திக்கொண்டே செல்கின்றன இந்நூலாசிரியரின் வாழ்வியல் குறிப்புகள். சுற்றியுள்ள மனிதர்கள் வேறுவேறானாலும் அடிப்படையில் ஆதாரமான முடிச்சுகள் பொதுவென்றே இருப்பதால் ஆசிரியரின் அனுபவங்களோடு தானும் ஒருவராய்ப் பயணிப்பது படிக்கும் எல்லோருக்குமே சாத்தியம்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன மழை பெய்து முடித்திருக்கிறது. அந்த வரிசையில் உள்ள அத்தனைவீடுகளிலும் கதவுகள் சாத்தியிருக்க ஒருத்தி மட்டும் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து நிலம் ஏந்தியிருக்கும் மழையின் ஒவ்வொரு துளி ஈரத்திலும் கைதொட்டும் கால் வைத்தும் பேரானந்தம் சுகிப்பவளாய் ஓடிக்கொண்டிருக்கிறாள். இதை அப்படியே வாழ்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அவசரகதியில் ராட்சத சக்கரங்களுடன் அனாயாசமாகத் திசைமாற்றி வைத்துவிடும் வாழ்வை அதற்கு வெளியே வந்து அதைப் பார்த்துக் கைதட்டியும், கொட்டியும் சிரிக்குமொரு மனநிலை வாய்த்துவிட்டால் பிறகு அது பேரானந்தப் பெருவாழ்வுதான். அதன் சக்கரங்கள் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் நாம் அதன்மீது சவாரி செய்யலாம். வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வையும் நினைவுகளில் தேக்கிப் பின் நிதானமாய் அசைபோடும் செல்வராசின் இத்தொகுப்பு பலருக்கும் அவர்கள் சுவைத்த அல்லது சுவைக்க மறந்த கணங்களைத் திரும்பப் பெற்றுக்கொடுக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;தான் குழந்தையாய்த் தவழ்ந்த தன் ஆத்தாவின்(அம்மாவின் அம்மா) கைரேகைகளின் வளைவுகளைக்கூடப் பத்திரமாக எழுத்தில் சேகரித்து ஒரு பாமரத் தாய்மையை, அதன் பொங்கும் பிரவாகத்தை எழுத்தில் வடித்தெடுப்பதும், இப்போது தன் கைகளில் குழந்தைகளாய்த் துள்ளும் தன் மகள்களின் விழிகளில் இருந்து தன்மீது சொரியும் குழந்தமைத் தாய்மையை விசும்பும் நன்றியோடு பதிந்து வைப்பதும் செல்வராசுவின் திகட்டாத மொழியில் வரிசையாய் நகர்கின்றன. அவரின் குழந்தைகள் சார்ந்த அனைத்துப் பதிவுகளுமே புதிதாய்ப் பெற்றோர் ஆனவர்களுக்கும், ஆக இருப்பவர்களுக்கும் ஒரு அழகான கையேடு என்பேன். ஆனால் அவை யாருக்கும் அறிவுரைகள் அல்ல, செய்முறை விளக்கங்களும் அல்ல. சில கவிதைகள் அவை. உள்ளே தோய்ந்து அதன் ஈரத்தில் நனைந்து மெல்லிய புன்னகையைக் கசியவிட்டு நமக்குத் தேவையான எதையும் அள்ளிக்கொள்ள விரிந்துகிடக்கும் அனுபவங்கள் அவை.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"நீ விளையாடப் போகையிலே&lt;br /&gt;விரல் அழுந்தும் என்று சொல்லி&lt;br /&gt;வெள்ளியிலே சிறு செருப்புச்&lt;br /&gt;செய்திடுவார் உன் மாமா&lt;br /&gt;நீ பச்சைக் குடைப் பிடிச்சுப்&lt;br /&gt;பயிர்பார்க்கப் போகையிலே&lt;br /&gt;பாதம் நோகுமின்னு&lt;br /&gt;பவுனால் ஒரு செருப்புச்&lt;br /&gt;செய்திடுவார் உன் மாமா" என்று கொங்குச் சீமையிலே தாய்மார்கள் பாடுவதாய் நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் கேட்டதுண்டு. ஒன்றரை ஏக்கர் வறக்காடும், ஒன்பது ஆடுகளும் வைத்துக் கஷ்ட சீவனம் செய்வதுதான் நிதர்சனம் என்றாலும் கனவுகளில், பாடல்களில் வசந்தங்களை வாரியிறைத்துக் குழந்தைகளை வளர்க்கும் தன் சொந்தச் சீமைவிட்டு அந்நியச் சீமையிலே அகப்பட்டுக்கொண்ட தன் குழந்தைகளுக்குத் தான் தாலாட்டுப் பாடித் தூங்கவைத்த கதையை நகைச்சுவை ததும்ப இயல்பாக எழுதியிருக்கிரார். ஆனால் வாசிப்பவருக்கு அது தரும் இன்பம் அதிகம். தமிழ்கேட்கா தூரத்தில் தன் குழந்தைகளுக்குத் தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடித் தூங்கவைக்கும் தந்தை செல்வராசு.&lt;br /&gt;&lt;br /&gt; "கண்ணையுங் காதையும் மட்டும் உட்டுப்போட்டு நீங்க தோலையே உரிச்சாலுஞ் சேரீங்க, பையன் நல்லாப் படிச்சாப் போதுமுங்க" என்று பாமர வெகுளித்தனத்தோடு பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிடும் ஊர்ச்சூழல் ஒன்றில்தான் இந்நூலாசிரியரும் பிறந்து வளர்ந்திருக்கிறார். தான் பெற்ற கல்வியும், மேன்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று தந்திருக்கும் இடத்திலிருந்துகொண்டு தன் பிள்ளைகளிடம் தன்னை மாணவனாக ஒப்படைத்துப் பாடம் கேட்கிறார். குழந்தைகளைச் சக்தியற்றவர்களாய்ச் செய்யும் எந்தவொரு மிரட்டல் வழிமுறையையும் அவர்களை ஒழுங்குபடுத்தக் கையாளக்கூடாது என்பதை ஒரு பக்குவமான நிலையிலிருந்து எடுத்துச் சொல்கிறார். அந்தப் பிள்ளைகள் அவருக்குச் சொல்லும் கதைகளையும், அவர் பிள்ளைகளுக்குச் சொல்லும் கதைகளையும் சலிப்புகளற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு எழுத்திலும், சொல்லிலும் உயிர் இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;புலம்பெயர் தேச வாழ்வு புதிய அனுபவங்களை மட்டும் தருவதில்லை. அது விட்டுவந்த சுவடுகளை நினைத்தும் ஏங்கவைக்கிறது. எந்தக் குளிரூட்டியும் ஈடாவதில்லை ஒரு மரநிழலுக்கு. அந்த இதந்தரும் மரநிழல்களாய்க் கூடவந்த மனிதர்கள் சிலரையும் பிரிய நேர்ந்திருப்பதும், அடிக்கடி சந்திக்க இயலாதிருப்பதும் விதைக்கும் பெருமூச்சும் சில கட்டுரைகளாக இந்நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. பிரிவுத்துயர் இல்லாத இலக்கியங்கள் ஏது தமிழில்? பெருங்குரலெடுத்து ஆவேசமான கோபத்தை எதன்மீதும் காட்டுவதில்லை செல்வராசின் எழுத்துகள். ஆனால் மென்மையாகச் சொல்லப்பட்டாலும் உயிர்வரை தைக்கும் வலியை அது தரவே செய்கிறது. நீதித்துறை ஊழியராகப் பணிபுரிந்த தன் தந்தையைப் பற்றிய நினைவுகூறல்களிலும், அவரைத் தன்னோடு அழைத்துவந்து வைத்துக்கொள்வதற்காய் விசா ஏற்பாடுகளைச் செய்தபோது நமது அரசாங்க நடைமுறைகள் அவரைத் துவள துவள அலைக்கழித்ததையும் நுட்பமாக எழுதியிருக்கிறார். அவை அவரின் தந்தை தாண்டிய எத்தனையோ விடயங்கள் குறித்து நமது கவனத்தைக் கோருகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;செல்வராசுவின் இடுகைகளைத் தனித்தனியாகத் தொடர்ச்சியற்று நான் இணையத்தில் வாசித்தபோது அறியாத ஒன்றை இப்போது தொகுப்பாக வாசித்தபோது அறிந்துகொண்டேன். அது அவரின் எழுத்துக்களில் குடிகொண்டிருக்கும் நகைச்சுவை நடை. ஆழமான அனுபவம் ஒன்றை எழுதும்போதும் படிப்பவனை விலகி ஓடவைக்காத, இழுத்துப் பிடித்துக்கொள்கிற மெல்லிய நகைச்சுவை எல்லா இடங்களிலும் இழையோடுகிறது. இது தொடர்ந்து எழுதுகிறபோது எழுத்தில் இன்னும் பலதூரங்களை இவரைக் கடக்க வைக்கும். "கண்கள் சொல்லும் கதை"  பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது&lt;br /&gt;ஆசிரியரின் சுய எள்ளல் பாணி நகைச்சுவை.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஓரளவிற்கு நூலைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இன்னும் இந்த முன்னுரையில் நான் குறிப்பிடாத கதைகளிலும், கட்டுரைகளிலும் நிறைந்து கிடக்கின்றன வாசிப்பவரை அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கச் செய்யும் சிறப்புகள்.&lt;br /&gt; &lt;br /&gt;மொத்தமாகச் சொல்வதென்றால் குழந்தைகளைச் சுண்டியிழுத்து அவர்களை வாங்கவைத்து வாயில் இட்டதும் கரைந்து பிறகு முடிந்தபிறகும் தன் சுவையை அவர்கள் மூலம் சப்புக்கொட்டவைக்கும் பஞ்சுமிட்டாயைப் போல இத்தொகுப்பு. எளிய மொழியில் தனிமனித வாழ்வை அழகான கதைகளாகக் காட்டிக்கொண்டே போகிறது. அதற்காகப் பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கானது என்பதுபோல இந்நூலும் ஒருசாராருக்கானது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் துள்ளல் குழந்தையொன்றின் மனநிலை போதும் இத்தொகுப்பின் பல பகுதிகளை உள்வாங்க. அப்படியொன்றில்லை தொலைந்துபோனது என்பவருக்கும் அப்படியான மனநிலையை இத்தொகுப்பே தோற்றுவித்தும் கொடுக்கும் என்பது மிகையில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;நிறைய எழுதிக்கொண்டிருங்கள் செல்வராசு உங்களுக்கான பயணங்களோடு. அன்போடு வாழ்த்துகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;செல்வநாயகி,&lt;br /&gt;ஜூலை 2010.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4928290853853319499?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4928290853853319499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4928290853853319499' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4928290853853319499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4928290853853319499'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/08/blog-post.html' title='ஒரு பிரபலமற்ற பதிவரின் நூல்வெளியீடு'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-6597662382916881225</id><published>2010-07-21T21:28:00.002-05:00</published><updated>2010-07-21T21:52:17.070-05:00</updated><title type='text'>எது தந்தாய் என் வாழ்வே? (பெட்னா மலருக்காக எழுதியது)</title><content type='html'>அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் தமிழ்விழா நடந்து முடிந்திருக்கிறது. நேரில் கலந்துகொள்ள இயலவில்லை. மலருக்காக நண்பர் சங்கரபாண்டி அவர்கள் எழுதக்கேட்டதின்படி கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்தேன். நேரில் கலந்துகொள்ளாவிட்டாலும் பெட்னாவின் நிகழ்ச்சி நிரல்கள், அவை நடந்தேறிய கொண்டாட்டங்கள் எனப் பலதையும் இணையவழி அறிய முடிந்தது. தமிழ்மணம் நேரடி ஒளிபரப்பில் நான் மிகவும் விரும்பிய தெருக்கூத்தைப் பார்த்து நிறைவடைந்தேன். தெருக்கூத்து மாதிரியான அரிய கலையையும் அதுசார்ந்த கலைஞர்களையும் கௌரவிப்பதில் பெட்னா தனிச்சிறப்பான பணி செய்துவருவதெல்லாம் மகிழ்வுக்குரிய விடயம். என்றாலும் தமிழகத்திலிருந்து மற்ற துறைசார்ந்த, கலைசார்ந்த வல்லுனர்களைத் தேர்வுசெய்யும் முறை, இன்னும் இங்கே புலம்பெயர்ந்து வந்த துறைசார்ந்த வெற்றியாளர்களை அழைத்தலின்மை உள்ளிட்ட சில விமர்சனங்களும் இருக்கின்றன. மேலோட்டமான, வழமையான புகழ்மொழிகள் தாண்டி ஒரு அமைப்பை அதன் நோக்கத்தை உண்மையாய் நேசிக்கிறவர்கள் சுயநலன்கள், தயக்கங்கள் களைந்து சரியான விமர்சனத்தை முன்வைக்க வேண்டியதும் முக்கியமானது. அவ்வகையில் தமிழ்சசியின் கட்டுரை பெட்னாவின் சறுக்கல்களாகச் சிலவற்றை விரிவாகவும், அக்கறையோடும் முன்வைத்தது. அக்கட்டுரையில் பின்னூட்டங்களில் அதே நோக்கில் வாசனும் சில முக்கியமான விடயங்களைத் தொட்டுப் பேசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் புலம்பெயர்ந்த வாழ்வியல் அனுபவத்தில் பெட்னா மட்டுமல்ல பொதுவாகவே இங்கே வந்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எழுத வேன்டும் என்ற எண்ணம் உண்டு. இங்கே சில ஆண்டுகள் கொஞ்சம் தமிழர்களோடு "தமிழ்" "தமிழ்க்கலை" என்று நேரத்தையும், உழைப்பையும் செல்வழித்துப் பெற்ற எனது அனுபவங்களில் தேங்கிக்கிடக்கின்றன சொல்லப்படவேண்டிய பல கதைகள். எல்லாம் சேர்த்தே புலம்பெயர்த் தமிழ், தமிழர் குறித்த பார்வையை முன்வைக்க முடியும் என்பதால் அது இன்னும் கொஞ்சகாலம் விரிவாக எழுதுவதற்கான உத்வேகம் பிறக்கும்வரை கிடப்பில்தான் கிடக்கும் என நினைக்கிறேன். இப்போதைக்கு நான் பெட்னா மலருக்கு எழுதித் தந்த கட்டுரையை மட்டும் கீழே பகிர்ந்துகொள்கிறேன். என் சோம்பலைக் களைந்து இதை எழுதப்பணித்த நண்பர் சங்கரபாண்டிக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எது தந்தாய் என் வாழ்வே?&lt;br /&gt;*******************************************&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை அருகில் சந்தித்துக்கொண்டோம்&lt;br /&gt;உனக்கும் எனக்கும் ஒரே நாடு "இந்தியா" என்றாலும்&lt;br /&gt;உனது முப்பாட்டனும் எனது முப்பாட்டனும் ஒன்றல்ல&lt;br /&gt;ஒருவர் ஊருக்கு நடுவே இன்னொருவர் வெளியே&lt;br /&gt; &lt;br /&gt;சிக்காகோ வீதியில் ஒரே விடுதியில் உணவுன்கிறோம்&lt;br /&gt;உனக்கும் எனக்கும் ஒரே மொழி "தமிழ்" என்றாலும்&lt;br /&gt;உனது பாட்டனும் எனது பாட்டனும் ஒன்றல்ல&lt;br /&gt;ஒருவர் 'சாமி'யாக இன்னொருவர் சக்கிலியனாக&lt;br /&gt; &lt;br /&gt;குடிநுழைவு அலுவலகத்தில் வரிசையில் நிற்கிறோம்&lt;br /&gt;உனக்கும் எனக்கும் ஒரே ஊர் "திருச்சி" என்றாலும்&lt;br /&gt;உனது தந்தையும் எனது தந்தையும் ஒன்றல்ல&lt;br /&gt;ஒருவர் நாதஸ்வரம் இன்னொருவர் பறை&lt;br /&gt; &lt;br /&gt;இதோ நியூஜெர்ஸியின் ஏழுமலையான் முன்பு பக்திகொள்கிறோம்&lt;br /&gt;நீயும் நானும் ஒரே கல்லூரி "ஆதிபராசக்தி" &lt;br /&gt;என்றாலும் நாம் ஒன்றல்ல&lt;br /&gt;நீ கடவுளுக்குப் பட்டுடுத்த நான் கையேந்தித் தீர்த்தம் வாங்க&lt;br /&gt; &lt;br /&gt;உணரநேர்ந்தால் எப்போதேனும் இந்த அபத்தங்களை நீயும் சொல்லிவை&lt;br /&gt;இன்று பிஸ்ஸா தின்று பள்ளி செல்லும் நம் குழந்தைகள் நாளை&lt;br /&gt;தத்தமது தந்தையர் கல்லறையில் நின்றேனும் புரிந்துகொள்ளட்டும்&lt;br /&gt;அவர்கள் இருவரும் வேறுவேறல்ல ஒன்றுதான் என்கிற உண்மையை&lt;br /&gt; &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சம் ஒரு நதியென்றால் அதில் மானுட வாழ்வு ஒரு சருகைப்போல் பயணிக்கிறது. நதியில் சருகு அறிந்ததெல்லாம் மேற்பரப்பில் சிற்றலைகள், சீரான நீரோட்டம், சிலசமயம் பயங்காட்டும் சுழிகள். நனைந்து நனைந்து ஈரம் அடர்வேற ஆழம் அமிழ்தல் எப்போதேனும் நடக்கலாம். இந்தப் பொதுவிதிக்குள் பொதிந்து ஆடி அடங்குகிறது மானுடத்தின் லௌகீகம். புவியியல் எல்லைகள், தட்பவெப்பம், கலாச்சாரம், பண்பாடு என வெவ்வேறு நூலிழைகளால் நெய்யப்பட்டுப் பின் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றது உலகம். ஓயாத பேரிரைச்சலாய் வாழ்வுக்கான தாகம் ஒவ்வொரு உயிரிலும்.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனித உயிர்க்கும் தன் பயணம் எங்கே தொடங்கி எங்கே முடியும் என்பது வாழ்வின் அவிழ்க்க முடியாத சுவாரசியமான புதிர்களுள் ஒன்றாய் வைக்கப்பட்டுள்ளது. யாருக்குப் பிறக்கப்போகிறோம் என்பது குழந்தைக்கும், யார் பிறக்கப்போகிறார்கள் என்பது பெற்றோருக்கும் தெரியப்படுத்தப்படாத ரகசியமாய்ப் பதுக்கப்பட்டிருப்பதாலேயே அதன் சுவை இன்னும் சலித்துவிடாததாக இருக்கிறது. திட்டங்களும், அவைநோக்கிய செயல்பாடுகளும், வகுத்துக்கொண்ட பாதைகளிலிருந்து பிசகாத பயணமும் ஒரு தனிமனிதவாழ்வில் எல்லாநேரங்களிலும் சாத்தியமாகிவிடுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;என் வேர்களற்ற மண்ணில் விழுதூன்றி பல ஆண்டுகளைக் கடந்துவிட்ட ஒருநாளில் திரும்பிப்பார்க்கிறேன். இந்தப்பயணம் திட்டமிடப்படாதது. ஏதோவொரு திருப்பத்தில் சட்டென்று கைகுலுக்கிய மனிதர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுவிடுவதுபோல் இந்த அந்நியமண்ணுக்கு வாழவந்ததும் பரிசீலனை முடியும் முன்பே செயல்படுத்தப்பட்டதாகவும், செயல்படுத்தப்பட்டபின்பும் பரிசீலனையில் உள்ளதாகவுமே தன் ஆரம்பநாட்களை விழுங்கிவந்திருக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;தனியொருத்தியாக விமானத்துக்குள் ஏறிஅமர்ந்தபின்பு பக்கத்தில் இருந்த தாயொருத்தி தன் குழந்தையை சன்னலுக்கு இழுத்துக் காட்டிக்கொண்டிருந்தாள், "இனிமே எப்பப் பாக்கப் போறோம்னு தெரியலை, நம்ம ஊரை இன்னுமொருமுறை பாத்துக்கடா" . வெட்டிய குழியில் வைத்து மூடுவதற்கு முன் "கடைசியா எல்லாரும் முகம் பாத்துக்கங்க" என்று  சொல்வதை ஏனோ அந்தத் தாயின் வார்த்தைகள் நினைவூட்டி விட்டன. அதுவரைக்கும் கட்டிவைத்திருந்த உணர்வுகள் மெல்ல அவிழத் துவங்கின.  மேலே இன்னும் மேலே என எழுந்தபோது கீழே அதள பாதாளத்தில் ஏதோ இழக்கக்கூடாத ஒன்றைக் கைநழுவவிட்டுக் கொண்டிருப்பதான குழப்பமான சொல்லத்தெரியாத சிந்தனைகளின் கலவை. எல்லாவற்றையும் அழுது கரைத்துவிடக் கொடுக்கப்பட்டிருக்கும் கண்கள் அதன் வேலையைச் செய்தன. யாருக்கும் தெரியாமல் சில துளிகள். பின் பயணத்தின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளுக்குள் புகுந்து வெளிவந்தபோது வேறு நகரம், வேறு மனிதர்கள்,  வேறு நாடு.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;தடைகளைத் தாண்டிய ஓட்டமே வாழ்வென்று வாழ்ந்துவந்த ஒருவற்குத் தடைகளற்ற பயணம் என்ற ஒன்றுகூட ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளச் சிரமமானதுதான். அந்நிய நாடு எனக்குப்  பரிச்சயமற்ற தன் கண்களால் பயம் காட்டவே செய்தது. எங்கும் எப்போதும் தாய்மடியாய் இருந்துவந்த இயற்கை இங்கும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மேலடர்ந்த பொலிவோடு இருந்தது. ஆனால் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிற அன்னியத்தன்மை மரம் செடிகளில்கூடப் பேதமை பார்க்கக் கற்றுக்கொடுத்திருந்தது. சுற்றிலும் பறவைகள் இருந்தன, ஆனால் அவற்றின் இசை எனக்கானதாய் இல்லை. வழியெங்கும் பூக்கள் மலர்ந்திருந்தன, ஆனால் அவற்றின் சுகந்தத்தில் என் மண்வாசனை இல்லை. தெருக்களிலும் காதலர்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள், பழக்கப்பட்டிருக்காத கண்கள் கூசித் திரும்பின. ஓயாத ஒப்பீடுகளுக்குப் பின் மனம் உள்நோக்கித் தேடியது. "எந்தத் தண்ணீரில் எறியப்பட்டாலும் நீச்சல் தெரிந்த மீன் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதில்லையா? தேடு...கண்டங்கள், கடல்கள் வேறு எனினும் இதுவும் மனிதர்களின் பூமிதானே? இந்த மனிதர்களின் வாழ்வும் வரலாறும் அறி, இலக்கியம், கலை, கலாச்சாரம்.... உனக்கேதும் புதிய பொருள் கிடைக்குமா ஆர்வத்தோடு அறியப்பார்" என்று உள்ளுக்குளேயே கேள்வியும் பதில்களுமாய்ச் சமாதானங்களைப் பெற்றுக்கொண்டபோது&lt;br /&gt;உற்சாகம் பிறந்தது.  பிறகு நேர்ந்த ஒவ்வொரு சந்திப்புகளும், பயணங்களும், அனுபவமும் உற்றுநோக்கலில் கூர்மையைத் தந்தன. &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;சிலநூறு வருட வரலாறுகளை மட்டுமே கொண்ட நாடொன்று உலக வல்லரசாக எழும்பி நிற்பதும், அதன் அதிகாரத் தலையீடுகளுக்கு வேண்டியவரை விமர்சனங்களைப் பெற்று நிற்பதும் அதன் அரசியலடிப்படையில் விவாதிக்கப்படவேண்டிய பெரும்விசயம் என்ற புரிதல்களுக்குள் எல்லாம் புகுந்திருக்காத காலகட்டம் அது. ஆயினும் தன்னளவில் ஒரு நாடு தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்ளச் செய்திருக்கிற உள்கட்டமைப்பு வேலைகள் என்ற அளவில் அன்றும் இன்றும் மாறாத கருத்துக்களையே கொண்டிருக்கச் செய்கின்றன அமெரிக்க அவதானிப்புகள். &lt;br /&gt; &lt;br /&gt;தொடர்புகொள்ளப் பாதைகளற்ற மனிதர்கள் தனித் தீவாகத் தேங்கிவிடுவது நடக்கும். ஒரு அரசுக்குத் தன் நாட்டில் அப்படியொரு கிராமத்தையோ, நகரத்தையோ விட்டுவிட்டு நகர்வது நல்லதல்ல. அடிப்படை சாலைவசதிகளில் தொடங்கி ஒரு ஆரோக்கியமான இணைப்பை மனிதர்களிடையே இங்கே ஏற்படுத்திவைத்திருப்பதைக் காண முடிந்தது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும் சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதும் சாலைவிதிகளுக்குத் தரப்பட்டிருக்கிற முக்கியத்துவமும் புரிந்தது. எந்த இடத்திலும் வரிசை என்று இருந்தால் அதில் தன் முறை வரும்வரை காத்திருந்து அணுகுகிற தன்மைகளும், லஞ்சம் கொடுக்கத் தேவையில்லாத அன்றாடக் காரியங்களும், இதுபோன்ற இன்னபிற சௌகரியங்களும் இந்நாட்டின் வாழ்வியல் அனுபவத்தை வேறுபடுத்திக்காட்டிக்கொண்டிருந்தன.&lt;br /&gt; &lt;br /&gt; ஒன்றிலிருந்து இன்னொன்று எனத் தொடர்ந்த நாட்கள் இன்னும் வேறான சிந்தனைகளுக்குள் இழுத்துச் சென்றன. நூலகங்கள் இதற்குப் பெரும்பங்காற்றின. எல்லா நூலகங்களும் தன் பகுதியில் குழந்தைகளுக்கென்று கொண்டிருந்த ஒரு பகுதியும், குழந்தைகளுக்கான நூலக நிகழ்ச்சி வடிவமைப்புகளும் புதிய சன்னல்களைத் திறந்தன. பூமியும் வாழ்வும் நாம் நமது மூதாதையரிடமிருந்து பெற்றுக்கொண்டதல்ல, அதை நம் குழந்தைகளிடமிருந்தே கடன் வாங்கியிருக்கிறோம். அப்படி வாங்கியதை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனப் படித்ததைச் செயல்வடிவமாக்குவதற்கு முன் இந்த உலகத்தை, வரலாற்றை நாம் அவர்களின் மொழியில் அவர்களுக்கு வழங்குவது முக்கியமானது என்பதை உணர்ந்த அனுபவங்கள் அவை. &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"நிலாவைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும்&lt;br /&gt;ஓயாது கதைசொல்லிக்கொண்டிருந்த என் மகள்&lt;br /&gt;திடீரென எல்லாவற்றையும் நிறுத்தியிருந்தாள்&lt;br /&gt;பிறகுதான் நான் யோசித்தறிந்தேன் &lt;br /&gt;அவளை நான் இப்போது பள்ளியில் சேர்த்துவிட்டிருப்பதை"&lt;br /&gt;என்றான் ஒரு கவிஞன். கல்வி என்பது வேருக்கு நீரூற்றுவதாய் அன்றி பூக்களில் ஆணியடிப்பதாய் மாறிவிடும்போது குழந்தைகள் தமக்குள் ஒரு எழுச்சிக்கான திறப்பை இழக்கிறார்கள். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;நூலகங்கள் கற்றுத்தரும் பள்ளிகளாகவும், பள்ளிகள் ஒரு நூலகத்திற்குரிய அறிவுப் புதையலோடும் இங்கே குழந்தைகளுக்காகக் காத்திருப்பதைப் புரிந்துகொண்டேன். செல்லச் செல்லத் திகட்டாத இடங்களென அவற்றைக் கண்டுகொண்ட பிறகு ஓய்வு நேரங்களை அவையே பெற்றுக் கொண்டன. இந்த நிலையில் எனது மண் மனிதர்கள் என்ற உள்நேசம் ஊற உறவு வைத்துக்கொண்ட எனது தோழியரில் பெரும்பாலோர் தம் ஒன்றுகூடல்களை வெறும் அரட்டை நிலையங்களாகவும், மீறிப்போனால்  இல்லங்களில் பூசை, புனஸ்காரங்களாகவும் இங்கும் வகுத்துக்கொண்டிருப்பதை அறியநேர்ந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களில் இருந்து காப்பாற்றியவையும் மேற்சொன்ன நூலக நுழைதல்களே.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;மார்ட்டின் லூதர் கிங் தினமென்றால் ஏன் பள்ளிக்கு விடுமுறை என வாசிக்க ஆரம்பித்த நூல் தனக்குள் இருந்த வரலாறுகளுக்குள் இழுத்துக்கொண்டு திறந்துவிட்ட கதவுகள் அதிகம். நிறவெறியால் அடிமைகளாய் வாழ நேர்ந்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஆரம்பம் தொட்டு இன்றுவரையான பயணங்களைப் படித்தபோது சமத்துவத்துக்காகச் சிந்தப்பட்ட ரத்தம்  வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒட்டிக்கிடப்பதை உணரமுடிந்தது. இன்று ஒரு விளம்பரம் என்றால்கூட அதில் பலநிறத்தவரும் இனத்தவரும் இருக்கும்படியாகவே இந்நாட்டில் வடிவமைக்கப்படும் அளவில் வந்து நிற்கிற சமத்துவ முகமும், அதில் ஒரு சீர்குலைவு வரும்போது எதிர்த்துப் போராடச் சாமானியனுக்கும் வசதியிருக்கிற சூழலும் சொல்லித் தந்தவை நிறைய. இதையெல்லாம் அறிந்துகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பங்கள் நான் என்னவென்று புரியாமலே வெறும் அழகியலுக்காக ஆராதித்து வந்த என் மண் இலக்கியங்கள், புராணங்களையும் மறுவாசிப்புச் செய்ய வைத்தன. அவற்றின் அழகு தாண்டிய அநீதிகளைக் குறித்த கேள்விகளை எழுப்பின.&lt;br /&gt; &lt;br /&gt;இலக்கியங்களும், புராணங்களும் காட்டிய எமது கடவுள்களின் கருணை நிசமாய் என் சமூகத்தில் வஞ்சிக்கப்பட்டவர்கள் மீது காட்டப்படாத உண்மையும், அப்படி விடாது கட்டிக் காக்கிற அமைப்புகளும் அடையாளம் தெரிந்தன. அவற்றை விமர்சிக்கவும், அதை எழுதவும், பேசவும் சூழல் அமைத்துக் கொடுத்தது இந்தப் புலம்பெயர் வாழ்வுதான். சொந்தங்களும், அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் அற்ற வாழ்வு தனிமையானதெனத்தான் பயமுறுத்தியது ஆரம்பத்தில். ஆனால் அந்தத் தனிமையும், வாழ்வு குறித்த, உலகம் குறித்த இன்னொரு புரிதலுக்கான, செயல்பாடுகளுக்கான களமாய் அமையமுடியும் என ஆகியிருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;பல ஆண்டுகளுக்கும், அனுபவங்களுக்கும் பிறகு இப்போது எனக்கு அருகாமையில் வசிக்கிற, எனது நாடு, எனது மொழி, எனது மாவட்டம், எனக்கும் அவள் அப்பாவுக்கும் ஒரே தொழில் என்று இருந்தும்கூட மனிதர்களில் பேதம் பார்க்கிற பெண் ஒருத்தியிடமிருந்து மெல்ல விரல்களைப் பிரித்துக்கொண்டு விலகுகிறேன், 65 வயதில் தன் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டதான அந்திம வாழ்விலும் தனக்கென்று துணையாய் ஒரு காதலனைத் தேடிக்கொண்டிருக்கும் கலாச்சாரம் கொண்டவளானாலும் வேறு நாடு, வேறு மொழி கொண்ட பெண்ணொருத்தியின் விரல்கள் பற்றி இறுக்கிக்கொள்கிறேன் பேதமற்ற அவளின் மானுட செயல்களுக்காக. சமூகமோ, வாழ்வோ சிந்தனைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் திரும்ப என் மண்மிதிக்கும்போதும் எனக்கான மாற்றுப்பாதையிலேயே செலுத்தவேண்டும், செலுத்தும் என்றே நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-6597662382916881225?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/6597662382916881225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=6597662382916881225' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6597662382916881225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6597662382916881225'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/07/blog-post.html' title='எது தந்தாய் என் வாழ்வே? (பெட்னா மலருக்காக எழுதியது)'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-6971547179988265254</id><published>2010-06-29T23:44:00.000-05:00</published><updated>2010-06-29T23:47:07.680-05:00</updated><title type='text'>கூடுகளான சொற்கள்</title><content type='html'>கண்களை மூடும் இமைகளின் கவனத்தோடு தேர்ந்தெடுத்தேன்&lt;br /&gt;அதிர்வென்பது சிறிதும் வெளிப்படாது ஒவ்வொரு எழுத்தாய் அணைத்தெடுத்தேன்&lt;br /&gt;பின் குழைத்தெடுத்த அன்புச் சேற்றில் பதியனிட்டதும் நீரூற்றியதும்&lt;br /&gt;நான் யாருக்கும் அறிவித்திராத ரகசியங்களின் பரணில் உண்டு&lt;br /&gt;நீ உன் கொற்றம் புடைசூழ வாசலில் வந்து நின்று &lt;br /&gt;தம்பட்டம் அடித்துக்கொள்கிறாய் என் சிறு புன்னகையை&lt;br /&gt;கண்களின் வழி ஒழுகிய முத்தத்தின் ஈரத்தை&lt;br /&gt;உனக்கு மட்டுமேயென நான் உதிர்த்த ஒரு தனிச்சொல்லை&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகொண்டுவிட்டதான உன் ராசகுமாரக் குதிரைக் குழம்படிகள்&lt;br /&gt;வீதிகளெங்கும் பேரிடியாக ஒலித்தபடி இருக்க&lt;br /&gt;என் சொற்களில் பொதிந்திருந்த எழுத்துக்களை&lt;br /&gt;உனக்கானவையல்ல எனப் பிய்த்தெறிந்துவிடுகிறேன் நான்&lt;br /&gt;காற்றில் அவை இனி வெறும் கூடுகளாக அலைந்துகொண்டிருக்கும்&lt;br /&gt;நான் உனக்குச் சொல்ல விரும்பிய காதலின் சாட்சிகளாக&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-6971547179988265254?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/6971547179988265254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=6971547179988265254' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6971547179988265254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6971547179988265254'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/06/blog-post_29.html' title='கூடுகளான சொற்கள்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8424492732063804975</id><published>2010-06-22T23:39:00.003-05:00</published><updated>2010-06-23T00:17:22.136-05:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்</title><content type='html'>&lt;a href="http://thatstamil.oneindia.in/img/2010/06/22-semmozhi.200.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://thatstamil.oneindia.in/img/2010/06/22-semmozhi.200.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு தமிழகத்தை விழாக்கோலம் பூண வைத்திருக்கிறது.  பள்ளிகளுக்கெல்லாம் திடீர்த் தமிழுணர்வு கோப்பை கோப்பையாக வழங்கப்பட்டிருக்கின்றன போலும். மொட்டை வெய்யிலில் மாணவ, மாணவிகள் பாரதியார்களாய் வேடமிட்டுச் செம்மொழி மாநாட்டு விளம்பரங்களோடு மதுரையில் தெருத்தெருவாக நடந்திருக்கிறார்கள். அன்புடமையும், பண்புடைமையும் கொட்டிக்கிடக்கும் இலக்கிய வரிசையில் திருக்குறள் படைத்த தமிழினம்தான் இன்று தெருவில் சோறின்றிச் செத்துக்கிடக்கும் இன்னொரு தமிழனை மிக இயல்பாகக் கடந்து போகும் சென்னை மாநகர வாழ்க்கையை வாழ்கிறது. என்றாலுமென்ன? திருவிழாச் சம்பிரதாயங்கள் முக்கியமானவை, மாணவர்கள் சென்னையிலும் மாநாட்டுக்காக உட்கார்ந்தே திருவள்ளுவர் சிலை அமைக்கப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;செய்தித்தாள்கள் எங்கும் மாநாட்டு அரங்கங்களின் அழகும், அரங்கத்தை ஆட்சி செய்ய இருக்கும் அரசியலரசர்களின் அழகும் விரவிக் கிடக்கின்றன. கோவையில் பஞ்சாயத்து அலுவலகமொன்றில் பொதுமக்களுக்காக முடிக்கப்படவேண்டிய சினச் சின்ன வேலைகளையும்கூடக் கடந்த ஒருமாதகாலமாக மக்கள் நடையாய் நடந்தும் முடிக்க முடியவில்லை. அரசு அலுவலர்களின் "செம்மொழி மாநாடு முடிந்துதான் ஆகும்" என்ற காரணம் மக்களின் வேலைசார்ந்த கோப்புகளையும் இறுக்கக் கட்டி வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றிய மூத்த மொழி" என்று பெருமை சூட்டிக் கொண்டிருக்கும் தமிழ் என் மொழியாக இருப்பது இனிமையானது. அது இன்று வரைக்கும் இருக்குமிடந்தோறும் கூட இருப்பதாலேயே வாழ்வும் இனிமையானது. ஆனால் இந்த மொழியார்வமோ, அதன் ஆழம் தேடலோ உள்ளே ஊறியிருப்பதற்கு இந்த மாநாடுகள் எதுவும் காரணமானதில்லை. பிறந்து எனக்குப் பல் முளைக்கும் முன்பே தன் பல் தொலைத்த வயதிலும் பாமரக் கிழவி ஒருத்தி "உங்குன்னு சொல்லம்மா உன் உலகம்பூ வாயினாலே, பாலுன்னு சொல்லம்மா உன் பவளப்பூ வாயினாலே" என்று எந்தக் கர்நாடக சங்கீத விற்பன்னரும் கற்றுத் தராத தன் ஒப்பற்ற ராகத்தால் பாடியது&lt;br /&gt;கேட்டுத்தான் என் நா தமிழ் கற்றுக் கொண்டது. அதற்குப் பிறகும் ஆங்கிலம் கற்றிருக்காத கைநாட்டுப் பாமர ஊர்தான் சொற்களாய்ச் சொலவடைகளாய், விடுகதைகளாய், தாலாட்டாய், ஒப்பாரியாய் என் தமிழை எனக்குப் பலவடிவங்களிலும் ஊட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;எட்டுக் கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே பள்ளியாயிருந்த அந்தத் தாவணிபாவாடைப் பள்ளிக்கூடமும், அதன் ஆசிரியர்களும் சொல்லித் தந்தார்கள் பேசத் தெரிந்திருந்த தமிழைக் கைகூட்டி எழுதவும் அதிலே கவிதை, கட்டுரைகள் வடிக்கவும். யேசு காவியமும், சீறாப்புராணமும், கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் செவிகளில் ஏற்றியது ஒரு ஐம்பது கிலோமீட்டர் தாண்டி வெளியில் அறியப்படாது வாழ்ந்து செத்துப்போன அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் தமிழாசிரியைதான். பழகிய ஊரைவிட்டு பலநூறு மைல்களும், கொண்டிருந்த தொடர்பைவிட்டுப் பல பத்து மாதங்களும் தாண்டி வந்தபின்னும் வானொலியில் என் துறைசார்ந்த உரையாடல் ஒன்றில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதில் உச்சரிப்புத் திருத்தமொன்றை ஊரிலிருந்து எழுதி அனுப்பிய ஓய்வுபெற்றுக் கண்மங்கிய தமிழாசிரியர் இன்று ஒவ்வொரு இடுகை எழுதி முடித்தபின்பும் வந்து படித்துப் பார்ப்பதுபோலக்கூட மனக்கண்ணில் விரிவதுண்டு. இப்படித் தமிழை உயிரிலே கொஞ்சம் ஒட்டவைத்துத் திரிகிற ஆயிரமாயிரம் தமிழ்க்குடிமகன்கள், குடிமகள்களுக்கும் பலப்பல கதைகள் இருக்கலாம். அவையெல்லாம் எந்த அரசியல்வாதியின் மாநாட்டுச் சாதனைகளாலோ வந்தவையல்ல. அப்படியொன்று இல்லாமல்போனாலும் மனதிலிருந்து வற்றிவிடுபவையுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி. நம் மொழியார்வத்தை உலகுக்குப் பறைசாற்றிக் கொள்ளவும், இப்படியொரு மொழிபேசுகிற இனம் உலகில் இருக்கிறது என்பதை ஓங்கி அறிவிக்கவும் இத்தகு நிகழ்ச்சிகள் பயன்படப் போகின்றனவா? எப்போது அறிவிப்பது "நாங்கள் எவ்வளவு பெரிய இனம் தெரியுமா?" என்பதை. லட்ச லட்சமாய்ச் சொந்த இனத்தினன் ஒரு கடல் தாண்டும் தூரத்தில் செத்துக் கொண்டிருந்தபோது, அவர்தம் செத்த பிணங்களின் மீதும் அரசியல் செய்துவிட்டு&lt;br /&gt;கதறக் கதற நின்றவர்களைக் கொன்று குவிக்கும் அரசோடு கூடியிருந்து குலவிவிட்டு எங்களால் முடியவில்லையே எனக் கைவிரித்து மண்தள்ளிவிட்டு அவர்மாண்ட இடத்தில் புற்கள் முளைக்கும் முன்பே கலை நிகழ்ச்சிகள் நடத்தி அறிவித்தால் ஆயிற்றா நாம் எவ்வளவு பெரிய இனம் என்பதை? &lt;br /&gt;&lt;br /&gt;சோறுபோடாமல் கொடுமைப்படுத்திவிட்டுச் செத்த பிறகு ஊரைக்கூட்டி செத்தவர்களுக்குப் படையல் வைத்துக் கொண்டாடும் ஒரு அருவறுப்பான தனிமனிதப் பண்பாடு போல நம் அரசியல் பண்பாடுகள் தோலுரிந்து நிற்கின்றன. அவை தோலுரிந்தது தெரியும் என்றாலும் அந்த நாற்றத்தோடே கைகோர்த்து நிற்கவும் தயங்காதவர்களாகிவிட்டோம் நாம். வேறொன்றும் காரணமில்லை, அரசியல்வாதிகளுக்கு அரியனைச் சுகமென்னும் தன் நலம் இருப்பதுபோல் எங்கு எதில் இயங்கினாலும் தன் இருப்பைப் பிரபலப்படுத்திக்கொள்ளும் விதமாகத் தமிழர்கள் நமக்கு புகழும், அங்கீகாரமும், மாலைகளும், இடைவிடாத புகழ் ஒலிகளும் தேவையாக இருக்கின்றன. அதற்கான காய்நகர்த்தல்களோடே தனிமனித வாழ்வும் சுருங்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டு நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் மட்டுமில்லை, நாடறிந்த தமிழறிஞர்களும் சேர்ந்தே கைகோர்த்து நிற்கிறார்கள். தமிழினத் தலைவர் ஒருவர் தன்னிடம் சக்தியிருந்தும் தன் இனப் படுகொலைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி மத்திய அரசைக் கேள்வி கேட்காமல் அதிகாரக் கனவு பிரதானமாகிக் கையாலாகாது நின்றதை அறியாதவர்களா இம்மாநாட்டில் கலந்துகொள்பவர்கள்? கூப்பிட்ட குரலுக்குத் தலைவர் பின்னால் அணிவகுத்து நிற்கும் எதிர்க்கேள்வி கேட்கும் உரிமையற்ற தொண்டர்களைத் தவிர இதில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் "தமிழ் என்றால் தம் உயிர்" என்று மார்தட்டி அதற்காகத்தான் தமிழின் பெயரால் கூடுகிறோம் என்று சொல்கிரார்களே, அவர்கள் கற்றறிந்த தமிழ் இதைத்தானா அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் என்றால் வீரம் என்றும் மறத்தமிழன், தமிழச்சி என்றும் உணர்வூட்டும் புறநானூற்றைப் படித்தவர்கள்தானே மாநாட்டுத் தமிழறிஞர்கள்? குறுங்கோழியூர்க்கிழார் சேரமானைப் பார்த்துப் பாடினாராமே," உன்னுடைய மண்ணைக் கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே உண்ணுவர், எதிரிகள் உண்ண முடியாது" என்று. உயிர்களைக் கொடுத்தாலும் தன் இனத்து மண்ணை இன்னொருவனுக்கு விட்டுத்தந்திராத வீரப்பரம்பரைத் தமிழர்கள் தம் இனத்துக்காகப் போரில் மடிந்தவர்களுக்கு நடுகல் எழுப்பி அவர்களை மட்டுமே தெய்வமாகக் கும்பிடும் பண்பாடு உடையவர்கள் என்கிறார் இன்னொரு புலவர்.&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூறில் மாங்குடி கிழார் இப்படி சொல்கிறார்.&lt;br /&gt;மலர்களில் குரவம், தளவம், குருந்தம், முல்லை என்று நான்கு வகை உள்ளன.&lt;br /&gt;உணவில் வரகு, தினை, கொள், அவரை என்று நான்கு வகை இருக்கின்றன.&lt;br /&gt;குடிகளிலும் நான்கு வகை. &lt;br /&gt;ஆனால் தொழுவதற்கு எங்களுக்கு தெய்வம் ஒன்றுதான். &lt;br /&gt;அது இறந்துபோன வீரனின் நடுகல்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ் மண்ணுக்காகத் தம் உயிரைத் துறந்தவர்களின் நடுகல்களைக்கூட அழித்து அவர்மீது தம் வெற்றியை அறிவித்து நின்றதே சிங்கள அரசின் இனவெறி. வீரப்பரம்பரைத் தமிழர்கள் நாம் இன்று நடுகற்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் ஆகி நின்றோமே! எக்காலத்திலும் சுடச்சுட அரசியல் எழுதாத ஈழ இலக்கியவாதிகூட இன்று&lt;br /&gt; &lt;br /&gt;இன்றோ எமக்கு தெய்வமில்லை.&lt;br /&gt;நடுகல் இல்லை.&lt;br /&gt;ஒரு மண்ணும் இல்லை.&lt;br /&gt;என்று தம் வரலாற்றைச் சொல்கிற கதி நேர்ந்திருக்கிறதே! (நன்றி எழுத்தாளர் முத்துலிங்கம்). &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதிநேர்ந்த போது நாற்காலியில் ஒட்டிப்போய்க் கைக்குட்டை எடுத்து அழுவதான பாவனையில் கண்களில் ஒற்றி நாடகம் காட்டியவர்களோடுதான் எம் தமிழறிஞர்கள் ஒன்றுசேர்ந்து இன்று இனம் காக்க அறைகூவல் விடுக்கிறார்கள். &lt;br /&gt;'தேரா மன்னா செப்புவதுடையேன்" என மன்னனை எதிர்த்துத் தன் கணவனுக்காக நீதிகேட்ட கண்ணகியைக் கரைத்துக் குடித்த தமிழறிஞர்கள்தான் இனம் கருகவும் மக்களைத் திரட்டாமல் மௌனம் காத்த எமது தமிழ்த்தலைவர்களை ஏனென்றும் கேட்காததோடு இன்று சாமரமும் வீசுகிறார்கள். ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்? ஒரு நாட்டை ஆள்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்று உருகி உருகி வரையறை செய்த வள்ளுவரை ஓதி ஓதியே ஒவ்வொரு நாளையும் வாழ்வதாய்ச் சொல்லும் தமிழறிஞர்தாம் மக்கள் சாகத் தன் மகன்களை மந்திரிகள் ஆக்கும் எம் அரசர்களைத் தொழுது நிற்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியங்களாகவும், அறநூல்களாகவும் காலகாலத்திற்கான பெருமைகளைக் கொண்டிருக்கும் தமிழ்மொழியே! தாம் கற்றதிலிருந்து காசும், புகழும் பெற்றுக்கொண்டதுதாண்டி எந்த அறத்தையும் பொதுவாழ்வில் கடைப்பிடிக்காத தமிழர்கள் உனக்குப் பதிலுக்கு என்ன தந்துவிடப் போகிறார்கள் மாநாட்டுப் பந்தல்களில் தோரணங்களைத் தவிர?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எது உன் இனம்? எது உன் மொழி?&lt;br /&gt;எதுவும் அறிந்திராது வந்துதித்த இளம் பிறையே!&lt;br /&gt;உன் முப்பாட்டனுக்கும் முந்தைய ஆண் ஒருவன்&lt;br /&gt;சங்கத் தமிழ் வீரத்திற்கு அழகு&lt;br /&gt;அவனை மணந்திருந்த தமிழச்சி ஒருத்தி&lt;br /&gt;முறத்தால் விரட்டிப் புலியை வென்றவள்&lt;br /&gt;பந்தலில்லா முல்லை, போர்வையில்லா மயில்&lt;br /&gt;எதுவும் கைவிடப்படாத கருணையும் நம்மது&lt;br /&gt;வெற்றி வாள், வீர வேல் அடையாளம் நமதென்று&lt;br /&gt;அப்போது இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் இழந்தது ஒருநாளில் அல்ல&lt;br /&gt;காலக் கருக்கலில் நாள் ஒருவிதமாய்&lt;br /&gt;கண்ணெதிரேதான் காட்சி மறைந்தன&lt;br /&gt;வெட்டத் தவறிய சுயநல நகங்களில்&lt;br /&gt;புதைந்து கிடக்கின்றன பூச்சுக்களுக்கடியில்&lt;br /&gt;அறம் மறம் அழிந்த அத்தனை கதைகளும்&lt;br /&gt;கைகள் சாத்தும் மாலைகளுக்கே மயக்கம்&lt;br /&gt;எங்கும் விரல்நக அழுக்குக்கு விசாரணையில்லை&lt;br /&gt;&lt;br /&gt;கவலைகள் ஏதுமின்றிக் கண்மூடித் தூங்கும் இளம்பிறையே!&lt;br /&gt;நாளை உனக்கு என்ன மிச்சமிருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறேன்&lt;br /&gt;சுயநலக் கரையான்களால் மூடப்பாட்ட நாட்கள் &lt;br /&gt;தீயெனச் சுட்டுக் கொண்டிருக்கின்றன தன் நாவுகள் சுழட்டி.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8424492732063804975?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8424492732063804975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8424492732063804975' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8424492732063804975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8424492732063804975'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/06/blog-post.html' title='செம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4207987763266770199</id><published>2010-05-04T21:41:00.000-05:00</published><updated>2010-05-04T21:53:06.284-05:00</updated><title type='text'>வெறும் நாள்</title><content type='html'>ஒரு வெறும் நாளின் அசைவுகளை எந்த மொழியிலும் பொருத்த முடியவில்லை&lt;br /&gt;வெறும் நாள் சுருண்டு படுத்திருந்த பாம்பு தலைதூக்கிப்பார்ப்பதுபோல் விடிந்தது. &lt;br /&gt;வாசலில் எந்தநாளும் போட்டிராத கோலத்திற்காகப் புள்ளிகளை மட்டும் அது வைத்தது&lt;br /&gt;தன் நியாயங்களைச் சுவற்றில் கோடுகளாகக் கிழித்தது&lt;br /&gt;மதியத்து வாசலில் ஒரேயொரு வெள்ளைப்பூவை உதிர்த்தது&lt;br /&gt;எதுவும் சொல்லாமல் கையசைத்துச் சென்று மறைந்தது&lt;br /&gt;தூங்குகிற குழந்தையின் கைகள் விரித்தபோது  கவனித்தேன்&lt;br /&gt;கனமான மலையொன்றாய்க் கடந்து மறைந்த வெறும் நாளின் அசைவுகள்&lt;br /&gt;உவமையற்ற மென்மையை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறது&lt;br /&gt;யாரொருவரும் கையளிக்காத ஆதூரத்தில் நனைத்தெடுத்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4207987763266770199?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4207987763266770199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4207987763266770199' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4207987763266770199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4207987763266770199'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/05/blog-post.html' title='வெறும் நாள்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-3641813122257142536</id><published>2010-04-22T00:46:00.002-05:00</published><updated>2010-04-22T01:09:15.448-05:00</updated><title type='text'>தர்மசபை</title><content type='html'>&lt;a href="http://blog.jennescalona.com/wp-content/uploads/2009/10/1213465_crowd_silhouette.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 257px;" src="http://blog.jennescalona.com/wp-content/uploads/2009/10/1213465_crowd_silhouette.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்மசபையைக் கடக்க நேரிடுகையில் எல்லாம்&lt;br /&gt;நியாயங்களின் கூச்சல்கள் குருதிபுகத்தான் செய்கின்றன&lt;br /&gt;இராமனும், தருமனும் கண்ணனும் தீர்ப்பெழுதும் அரங்கத்தில்&lt;br /&gt;சீதையும் திரௌபதியும் எங்கிருக்கலாம் என்பது அறிந்ததுதான்&lt;br /&gt;என்றாலும் சபை நடுங்கும் குரலெடுத்து&lt;br /&gt;நீதியைக் கைகால் தலை பிரித்து அவர்கள் கூறிடும் அழகை&lt;br /&gt;வீதியின் முனையொன்றிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;வீடணனோ, கும்பகர்ணனோ, துரியோதனனோ, இவனோ, அவனோ&lt;br /&gt;எவனோ ஒருவன் அகப்பட்டிருக்க வேண்டும் இன்றைய பரிபாலனத்திற்கு&lt;br /&gt;ஏன் எவளோகூடக் கூண்டிலேற்றப்படவும் வாய்ப்புண்டு&lt;br /&gt;குரங்கொன்றுக்குக்கூட நேராய்நின்று மோட்சம்தரத் திணறிய ராமந்தான்&lt;br /&gt;தொண்டை புடைக்க நியாயங்களை விளக்குகிறான் தர்மசபையில்&lt;br /&gt;குறிப்பெடுத்து ஏகபத்தினி விரதனை வழிமொழிகிறான் தர்மன்&lt;br /&gt;தன் கருத்த தேகம் அதிர அரியாசனத்திலிருந்து இறங்கி&lt;br /&gt;கையொப்பமிட்டு அதையே முடிவென்று எழுதுகிறான் கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியத்துக்கு நேர்ந்த சோதனையைத் தீர்த்துவைத்த&lt;br /&gt;பெரும்களைப்பில் அதோ நீதிதேவன்கள் படியிறங்குகிறார்கள்&lt;br /&gt;லட்சுமன, அர்ச்சுன சகாதேவன்களும் கைக்குட்டைகள் சகிதம் பிந்தொடர்கிறார்கள்&lt;br /&gt;புனிதாத்மாக்களில் துளிர்த்த வியர்வை ஒற்றி எடுக்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலோ கண்ணீரோ பெருக தர்மசபைநோக்கி&lt;br /&gt;வெகுதூரத்திலிருந்து பதைத்து ஓடிவரும் ராதைக்குச் சொன்னேன்&lt;br /&gt;"காத்திரு ராதா! சத்தியங்களும் சோதனைகளும் மாறினாலும்&lt;br /&gt;சபையும் நீதிதேவன்களும் இதுதான் இவர்மட்டும்தான் &lt;br /&gt;நாளை தன் அடியார்கள் பூத்தூவ மீண்டும் வரும்&lt;br /&gt;கண்ணன் உனக்குத் தன் கைதூக்கி அபயமளிப்பான்"&lt;br /&gt;&lt;br /&gt;படத்துக்கு நன்றி: www. blog.jennescalona.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-3641813122257142536?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/3641813122257142536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=3641813122257142536' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/3641813122257142536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/3641813122257142536'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/04/blog-post_22.html' title='தர்மசபை'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-7282108774716460333</id><published>2010-04-11T18:35:00.002-05:00</published><updated>2010-04-11T18:40:27.990-05:00</updated><title type='text'>குகையறிந்த குறிப்புகள்</title><content type='html'>&lt;a href="http://images.neopets.com/pirates/krawk_dark_cave.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://images.neopets.com/pirates/krawk_dark_cave.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசைவுறா மௌனங்களாய் அந்தக்குகைகள் நிற்கின்றன&lt;br /&gt;ஆராய்ச்சியாளர்களின் அளவைகளில் அவை இல்லை&lt;br /&gt;வீசும் காற்றில் மெல்லிசையைக் கசியவிட்டு , கடப்பவர் வழியில் சிற்றதிர்வைப் பரப்பி&lt;br /&gt;தம் இருப்பைத் தாமாகவும் அறிவித்துக்கொள்ளவில்லை குகைகள்&lt;br /&gt;மழையடித்த பகலில் தான் ஈன்று புறந்தள்ளிய உயிரின்மீது&lt;br /&gt;புலித்தாயொன்று ஒழுக்கிய பரிவின் ஈரம் குகைவாசலில் உண்டு&lt;br /&gt;சிங்கத்தின் காலடியில் கண்கள் வெறித்தடங்கிய மான்களிலிருந்து&lt;br /&gt;வலுத்தவன் இளைத்தவன் வரலாறுகளை உள்வாங்கி&lt;br /&gt;வருடங்களாய் வைத்திருக்கின்றன குகைகளின் கண்கள்&lt;br /&gt;சூழ்ச்சிகளைக் கைக்கொள்வது எப்படியென்ற புனிதநரிகளின்&lt;br /&gt;பாலபாடங்கள் நடப்பதற்குத் தேர்வான இடங்களில் &lt;br /&gt;குகைகளின் இருள்கவிந்த உட்பக்கங்களும் உண்டு&lt;br /&gt;நீங்கள் எப்போதும் வாசிக்கிற நெய்வடியும் கதைகளுக்குமப்பால்&lt;br /&gt;வாசனையற்று அரூபித்திருக்கின்றன &lt;br /&gt;சிங்கம், புலி, நரிகளின் &lt;br /&gt;குகையறிந்த குறிப்புகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-7282108774716460333?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/7282108774716460333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=7282108774716460333' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/7282108774716460333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/7282108774716460333'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/04/blog-post.html' title='குகையறிந்த குறிப்புகள்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-7616557926285600437</id><published>2010-02-18T23:49:00.000-06:00</published><updated>2010-02-18T23:54:11.887-06:00</updated><title type='text'>பதின்மம்</title><content type='html'>பதின்மத்தைப் பற்றி என்ன சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தட்டான் பறந்த தூரத்தின் உயரமே இருந்த வாழ்வு&lt;br /&gt;விண்ணில் ஏறி நிலவில் மிதந்து &lt;br /&gt;எங்கும் நிற்காமல் அலைந்த கனவு&lt;br /&gt;&lt;br /&gt;அப்பனும் ஆத்தாளும் முக்கனிச்சுவைக்கு வகுப்பெடுத்திருக்க&lt;br /&gt;வேப்பங்காய்ச் சுவை விரும்பித் துடித்த மனதே குரு மற்றவர் எதிரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவனும் சிறுமியும் ஊரே அறியத் தொடுத்த அரும்புகள்&lt;br /&gt;ஆணாய்ப் பெண்ணாய் விரிந்து உதிர்ந்த ரகசியப் பொழுதுகள் &lt;br /&gt;&lt;br /&gt;உலகை உலுக்கும் அநீதிகளனைத்தையும் &lt;br /&gt;பொசுக்கும் ரௌத்திரம் எனதெனச் சொல்லி &lt;br /&gt;மருதாணி சிவக்கா ராத்திரிக்காக&lt;br /&gt;அழுது சிவந்த கண்களில் மிஞ்சிய &lt;br /&gt;வீரப்புரட்சியின் வெம்மைச் சுவடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் ஓட்டிய சாகசத் தழும்புகள்&lt;br /&gt;நீச்சலில் உடைத்த முழங்கால் சில்லுகள்&lt;br /&gt;கவிஞராகி, எழுத்தாளராகி ஓவியருமான&lt;br /&gt;காகிதக் கற்றைகள்&lt;br /&gt;எல்லாம் உள்ளன பதின்மத்தின் சாட்சிகளாய்&lt;br /&gt;இன்னும் சொல்லா நிகழ்வுகளின் சொற்ப ரணங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டிய அருவி நதியானால் என்ன&lt;br /&gt;இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது&lt;br /&gt;அதற்குரிய சுருதியோடு&lt;br /&gt;இந்த இசை இருக்கும்வரை இருக்கும் வாழ்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:-&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்த தெக்கிக்காட்டானுக்கும், ஆரம்பித்த முல்லைக்கும் கடும் கண்டனங்கள்:))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-7616557926285600437?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/7616557926285600437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=7616557926285600437' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/7616557926285600437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/7616557926285600437'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/02/blog-post_18.html' title='பதின்மம்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-933120521606455649</id><published>2010-02-04T22:41:00.003-06:00</published><updated>2010-02-04T22:58:28.291-06:00</updated><title type='text'>சூரியனைக் கொன்ற இரவு</title><content type='html'>&lt;a href="http://www.dreamview.net/dv/new/photos/100793.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 700px; height: 521px;" src="http://www.dreamview.net/dv/new/photos/100793.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடிகார முட்களுக்கு நடுவே எண்களை எண்ணிக்கொண்டிருக்கும்&lt;br /&gt;நாளின் எந்த இடைவெளியிலும் &lt;br /&gt;இயல்பாய் என் நினைவுகளில் இறங்குகிறதுன்பாதை&lt;br /&gt;பொட்டல் வெளியெங்கும் கருவேலமரங்களெனப் &lt;br /&gt;பசுமை தொலைத்த இக்கோடையில்&lt;br /&gt;மழைக்கான நம்பிக்கையாய்ச் சித்திரைப்பூச்சி நீ &lt;br /&gt;உன் கத்தல் காது நிறைக்கிறது&lt;br /&gt;செடிகளையல்ல மரங்களையே தொட்டிகளில் வளர்த்துக்&lt;br /&gt;காட்சிப்படுத்தி விடமுடியும் வீதிகளில்&lt;br /&gt;நீ கொண்டலையும் வனக் கனவுகள்&lt;br /&gt;சிதறி விழுகின்றன என் விரித்த கைகளில்&lt;br /&gt;&lt;br /&gt;போர் தொடுப்பதான பாவனையில் &lt;br /&gt;ஒவ்வொரு சந்திப்பிலும்  கடந்துபோதல் எதற்கென&lt;br /&gt;பலாப்பழத் தோல் பிளந்து &lt;br /&gt;சொல்லிவிடலாம்தான் நேசத்தை &lt;br /&gt;பிறகு புலரும் பொழுதொன்றில்&lt;br /&gt;உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்&lt;br /&gt;எசமானக் கயிறொன்று&lt;br /&gt;என்னை அடிமையாய்க் கேட்கும்&lt;br /&gt;வேண்டாம் இப்படியே இருப்போம் &lt;br /&gt;சூரியனைக்கொன்ற இரவில்&lt;br /&gt;நட்சத்திரங்கள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-933120521606455649?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/933120521606455649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=933120521606455649' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/933120521606455649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/933120521606455649'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/02/blog-post.html' title='சூரியனைக் கொன்ற இரவு'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4604312974916689122</id><published>2010-01-29T23:59:00.003-06:00</published><updated>2010-01-30T00:08:23.771-06:00</updated><title type='text'>நம் இசை வேறுவேறானது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_7DvF48o4yUA/SwxUFSh-xKI/AAAAAAAABQI/WkJBwZzwPF8/s1600/P1040832.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 640px; height: 426px;" src="http://2.bp.blogspot.com/_7DvF48o4yUA/SwxUFSh-xKI/AAAAAAAABQI/WkJBwZzwPF8/s1600/P1040832.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசையின் வெளியைப் பருகி உறைந்தேன்&lt;br /&gt;தேனில் துவண்ட வண்டென ஆனேன்&lt;br /&gt;என்றென் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்&lt;br /&gt;அந்தப் பாடக நண்பன் நம்புவதாயில்லை&lt;br /&gt;இடைவெளியின்றி&lt;br /&gt;ஒட்டிப் பொருத்திய உதடுகள் துணுக்குற&lt;br /&gt;அடித்தொண்டை கனைத்தொரு ஒலியை எழுப்பி&lt;br /&gt;என்ன ராகமென்று கேட்டான்&lt;br /&gt;பட்டுத் துணிகளால் பொத்தி வைத்திருந்த &lt;br /&gt;தன் இசைக்கருவிகள் காட்டி&lt;br /&gt;ஒன்றையேனும் வாசித்துக் காட்டென்றான்&lt;br /&gt;தப்பட்டை லயத்தை எழவுவீட்டில்கூடப்&lt;br /&gt;பார்த்திருக்க வக்கற்றவனுக்கு&lt;br /&gt;இசையின் பரிபூரணத்தை எப்படி உணரவைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றின் நிறப்பொடிகள் கைநனைக்க&lt;br /&gt;பட்டாம்பூச்சிகளை அனுப்பியிருந்தேன்&lt;br /&gt;தட்டான்கள் வந்துசேர்ந்ததாகக் குறிப்பு வருகிறது&lt;br /&gt;எல்லாவற்றையும் மாற்றிவிட&lt;br /&gt;இடையில் யாரேனும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முற்றி வெடித்த வெள்ளைச் சோளக் கதிரில்&lt;br /&gt;உட்காரவும் முடியாமல் விடவும் முடியாமல்&lt;br /&gt;பறந்து பறந்தேனும் &lt;br /&gt;சில சோளங்களை ருச்சிபார்த்துக் கொண்டிருக்கிறது&lt;br /&gt;நீலவால்க் குருவி&lt;br /&gt;ஒரு மழை வருவதற்குள்ளாகவோ&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;வெட்டப்படுவதற்குள்ளாகவோதான் எல்லாமும்&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானம் பகலிலும் இருட்டாக இருந்தது&lt;br /&gt;சூரியன் பூமிக்கு வந்துவிட்டதாய்ச்&lt;br /&gt;செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்&lt;br /&gt;எல்லோரும் வானத்திற்குக் குடிபெயர&lt;br /&gt;வாகனங்கள் வந்துகொண்டிருந்தன&lt;br /&gt;முதல் வாகனத்தில் கடவுள் ஏறிக்கொண்டார்&lt;br /&gt;பிறகு மதங்கள்வாரியாகவும்&lt;br /&gt;மதங்களுக்குள் சாதிகள்வாரியாகவும்&lt;br /&gt;மக்கள் ஏறிக்கொள்ள வரிசை அமைந்தது&lt;br /&gt;இனி மற்றதெல்லாம் சுலபம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks for the picture:-  2.bp.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4604312974916689122?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4604312974916689122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4604312974916689122' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4604312974916689122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4604312974916689122'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/01/blog-post_29.html' title='நம் இசை வேறுவேறானது'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7DvF48o4yUA/SwxUFSh-xKI/AAAAAAAABQI/WkJBwZzwPF8/s72-c/P1040832.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4240895119481950907</id><published>2010-01-27T01:20:00.003-06:00</published><updated>2010-01-27T01:49:18.141-06:00</updated><title type='text'>சுய விலாசம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_nrSHkR8FSgc/RtXx12W2mWI/AAAAAAAAACk/nljD6PNXQ2U/s400/human+nature.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 184px; height: 242px;" src="http://1.bp.blogspot.com/_nrSHkR8FSgc/RtXx12W2mWI/AAAAAAAAACk/nljD6PNXQ2U/s400/human+nature.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவின் ஒளி சுடர்விட நின்றாள் ரூபி&lt;br /&gt;"குருப்பிரம்மா குருவிஷ்ணு குருதேவோ"&lt;br /&gt;வாயில் வரும்வரை விடவில்லை விஸ்வநாதன்&lt;br /&gt;செங்கல் எடுத்துத் தந்துகொண்டிருந்தாள் மேஸ்திரிக்கு&lt;br /&gt;சும்மாடு கூட்டிய தலையோடு&lt;br /&gt;கண்ணப்பன் மகள் ருக்காள்&lt;br /&gt;குதிரையில் நின்றிருந்த அவன் கைகளுக்கு எட்டாமல்&lt;br /&gt;மூச்சுப்பிடித்துக் காலுந்தியதில்&lt;br /&gt;உள்ளாடையில்லாப் பாவாடை நனைத்தது&lt;br /&gt;முட்டிய மூத்திரச் சொட்டு &lt;br /&gt;பதனாறு தொடங்கையில் தாலியும்கட்டி&lt;br /&gt;சிண்டும் நண்டுமாய்ப் பிள்ளைகளை விட்டு&lt;br /&gt;வேலைக்குப் போன கருங்கல் லாரியில் &lt;br /&gt;தலை நசுங்கி முழியும் பிதுங்கினாள்&lt;br /&gt;&lt;br /&gt;ரூபியின் நாவில் சரஸ்வதி அமர்ந்தாள்&lt;br /&gt;சகல தெய்வங்களும் இவளையும்&lt;br /&gt;இவள் சகல தெய்வங்களையும் &lt;br /&gt;காலம் முழுக்கக் கட்டியணைத்து&lt;br /&gt;கல்வியின் மேன்மைக் கனங்கள் அழுத்த&lt;br /&gt;சுய விலாசத்தை எழுதிப்பதிகிறாள்&lt;br /&gt;"விஸ்வநாத ஐயர்" மகள் தான் என&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பளிச்சென்று தெரிகிறது&lt;br /&gt;ரூபியின் சுயவிலாசத்தில்&lt;br /&gt;முகவரியற்றுச்செத்துப்போன ருக்காளின்&lt;br /&gt;பாவாடை நனைத்த மூத்திரக்கறை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4240895119481950907?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4240895119481950907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4240895119481950907' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4240895119481950907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4240895119481950907'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/01/blog-post_27.html' title='சுய விலாசம்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_nrSHkR8FSgc/RtXx12W2mWI/AAAAAAAAACk/nljD6PNXQ2U/s72-c/human+nature.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-5678086078283664833</id><published>2010-01-01T23:50:00.003-06:00</published><updated>2010-01-02T00:33:19.591-06:00</updated><title type='text'>நான் நீங்களாகாத வரை...</title><content type='html'>&lt;a href="http://images.scotsman.com/2007/06/29/2007-06-29T231020Z_01_NOOTR_RTRIDSP_2_OUKTP-UK-BRITAIN-SMOKING.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 315px; height: 423px;" src="http://images.scotsman.com/2007/06/29/2007-06-29T231020Z_01_NOOTR_RTRIDSP_2_OUKTP-UK-BRITAIN-SMOKING.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்பராவை சமீபமாகத்தான் தெரியும். அடுக்கடுக்காய்க் குடும்பங்கள் நிறைந்திருந்த அந்தப் பொந்தில்  புதிதாய் வந்து சேர்ந்துகொண்டபோது யாரையும் அறிந்திருக்கவில்லை. யாரையும் சட்டென்று போய் அறிந்துகொள்ள ஆர்வமுமில்லை. வாழ்வில் நாம் உள்ளம் தொடும் உறவுகள் பலதைத் திட்டமிட்டுக்கொண்டு அறிந்துகொள்வதும் இல்லை. நல்ல வெய்யிலில் சைக்கிள் டயர் ஒன்றைக் குச்சி கொண்டு தட்டிக் கூடவே ஓடும் சிறு பிராயத்தில் எதிர்பாராமல் வரும் ஐஸ்காரனுடன் கூடவே நாலணாவும் கையில் இருந்து விடுவதைப்போலத்தான் சில மனிதர்களைச் சந்திப்பதும், ஒட்டிக்கொள்வதற்கென்று சில காரணங்களை அவர்களிடத்தில் கண்டடைவதும். பார்பராவைச் சந்திக்கவும் எந்தத் திட்டமிடுதலும் இருக்கவில்லை. சாமான்கள் வந்துகொண்டிருந்த திறந்த கதவுக்கு வெளியே வெளிர்நீலச் சட்டையும் பளீரென்ற சிரிப்புமாக நின்று கையசைத்தார். "நான் உன் அண்டை வீட்டுக்காரி, உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, ஏதேனும் உதவி வேண்டுமா?"...அந்தக் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியேயும், உள்ளேயும் அவசரமாய் ஓடிக்கொண்டேயிருந்த மனிதர்களுக்குள் பார்பரா இப்படி நின்றுவிட்டு நடந்தார். "எனக்கும் அப்படியே பார்பரா, நன்றி". அன்றைய பேச்சு அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகான நாட்களில் பேசிக்கொள்ளாமலேயே தெரிந்துகொண்டது பார்பராவுக்குச் சின்னச் சின்ன வயதுகளில் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பது. வெளியிலே குளிருக்கிதமான ஆடைகள் அணிவித்து விளையாடிக் கொண்டிருப்பார். அம்மாவைக் கத்தி அழைத்துக்கொண்டு துரத்தித் தொட்டுக்கொண்டிருப்பார்கள் அவர்கள். பனிகொட்டத் தொடங்கியிருந்த ஒரு நண்பகலில் வீடு வந்து சேர்ந்தபோது கைகளில் அளவுக்கு மீறிய பளு இருந்தது. வாசல் கதவு திறக்கத் திணறிக்கொண்டிருந்தபோது உள்ளே எங்கிருந்தோ பார்த்து ஓடி வந்து கதவைத் திறந்தார். கூடவே ஒரு மன்னிப்புக் கேட்டார் கையில் சிகரெட் வைத்துப் புகைத்துக் கொண்டிருந்ததற்காக. பிறகு அடிக்கடி கண்ணாடி வழி பார்த்தால் வெளியே புகை பிடிப்பதற்கென்றே வந்து நடந்துகொண்டிருக்கும் பார்பராவைப் பார்க்க முடிந்தது. யாரேனும் அவ்வழி கடக்க நேரிடுகிறபோது அவர் வெளிவிடும் புகை கடப்பவர் நாசியேறுமேவெனப் பதைபதைத்து மன்னிப்புக் கேட்பதையும் கூடவே. தன் சக்கர நாற்காலியுடன் தன்னந்தனியே படியேற முடியாதவருக்கு ஓடிச் சென்று உதவுவது, வண்டியை நிறுத்துவோருக்குப் பின்னாடியிருந்து போதும் எனச் சாடை செய்வது என இன்னபிற காலத்தினால் செய்யும் உதவிகள் எனவும் இருந்தார் அப்படிப் புகைபிடிக்கும் நேரங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;போகப் போகப் புரிந்தது பார்பாராதான் ஓடிஓடி மனிதர்களை நேசித்துக் கொண்டிருந்தாரே தவிர பார்பராவுக்கு யாரும் அப்படி இல்லை என்பது. ஊருக்கு நிழலாகும் மரங்களுக்கு ஏது நிழல்? பார்பரா தனியாகத்தான் இருக்கிறார். இந்தத் "தனி" என்பது ஒரு பெண்ணுக்கு எந்தத் தனியாகவும் இருக்கலாம். உறவினர்களும், நண்பர்களும் குறைவுதான். பொறுக்கப் பருக்கைகளற்ற இடத்தில் காகங்களும் கரைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாதங்களாய் வாழ்ந்ததில் பார்பரா என்னும் நல்ல மனுசியைத்தான் தெரிந்து வைத்திருந்தேன். ஒன்றுக்கும் ஆகாத ஒரு வெட்டிப் பொழுதில் அந்த இந்தியத் தோழி பார்பராவைப் பற்றிய தன் கதைகளைச் சொன்னாள். கதை சொல்வதில், அடுத்தவர் பற்றிய புனைவுகளை வரைவதில் தேர்ந்த கதை சொல்லிகள் எங்கும்...எங்கெங்கும்... மிகுந்த சுவாரசியங்களோடு அவள் சொல்லி முடித்த கதைகளுக்குப் பின்னால் பார்பராவின் பழக்கத்திலிருந்து என்னைப் பிரித்து விடும் எத்தனங்கள் இருந்தன. மௌனத்தோடு விடைபெற்றுக் கொள்கையில் அவளுக்குச் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட முடியவில்லை. நாகரீகப் போலிப் பெருஞ்சுமை கழட்ட முடிந்தால் பல நிமிடங்கள் பாக்கியம் பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நெடிய புகைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போராடிய நண்பன் அபாயத்தை நோக்கி உடல் அடியெடுத்து வைப்பதான எச்சரிக்கைக்குப் பிறகு மருத்துவ உதவிக்குப் போயிருந்தான். ஒரு முறை, இருமுறை, பலமுறை கவுன்சிலிங் பலனேதும் தந்தபாடில்லை. இடையிலே எப்போதோ கற்றுக்கொண்ட கேவலம் ஒரு உடல்பழக்கத்தை விடுவதற்கு இத்தனை ஆலோசனைகளா? ஆமாம். பழக்கங்களில் இருந்து விடுபடல் அவ்வளவு எளிதல்ல. மீண்டும் ஒருமுறை குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதாகச் சொன்னான். மருத்துவர்கள் அவனை நடத்திய விதம் அப்படித்தான். எப்படியும் எந்த இதத்திற்கும் வளைந்து கொடுக்காத பழக்கத்திற்கு, ஒரு போதைக்கு மருந்தாய் இன்னொரு போதையை மருத்துவர்களே பரிந்துரைத்தார்கள். நிக்கோடின் சிகரெட்டுக்குப் பதில் நிக்கோடின் கம் என்று சில நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதன் ஆபத்து எந்த விதத்திலும் அவன் பழக்கத்திற்குக் குறைந்ததல்ல என்றாலும் குணப்படுத்தலின் ஒரு படியாய் அப்போதைக்கு வடிவம் மாற்றப்பட்டது. மீண்டும் மீண்டும் மருத்துவ மனைப் படையெடுப்புகள், ஆலோசனைகள். கடைசியாகவும் எல்லாம் எடுத்துவிட்ட பின்பு ஒருநாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நா வறண்டு, வாய் உலர்ந்து எதையாவது தந்தே ஆகவேண்டுமெனக் கிறுகிறுத்து ஆடுகிற மூளையைச் சரிக்கட்டியே ஆக ஒயின் ஒரு பெக் என்று அவன் மருத்துவ முன்னேற்றம் போய்க்கொண்டிருக்கிறது. சிகெரெட் கம்பெனிக்காரன் காசு சம்பாதிக்கிறான். சிக்கிக் கொள்பவன் இந்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;அவனோடு உரையாடிவிட்டு வரும் வழியெங்கும் மனம் அசைபோட்டுக்கொண்டு வந்தது....."ஒரு ஏழு வருட உடல் பழக்கத்தை உதறிவிட முடியாது விடுதலையாவதில் இத்தனை சிரமங்கள் இருக்கும்போது மனப்பழக்கங்கள் அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன கசடுகளைக் கழுவுதல் எளிதா என்ன? அப்படிக் கழுவ வேண்டுமெனில் போதையிலிருந்து மீண்டவன் போதையில் கிடப்பவனை அணுகவேண்டிய வழிமுறைகள் என்னென்ன? போதைக்குத் திட்டமிட்டே அடிமைப்படுத்துபவனுக்கும், அதில் ஒரு ஈசலைப் போல் விழுந்துகிடப்பவனுக்கும் வேறுவேறு வழிமுறைகள் அறியாத மருத்துவம் எதை நோக்கிய பயணம்? சுற்றிக் கொண்டிருந்த மனதைக் கூட்டிக்கொண்டு வந்து படுக்கையில் விழுந்தபின்பு ஒரு சுற்றுத் தூக்கம் முடிந்திருக்கும். சுவர்களைத் தாண்டி இருளைப் பிளந்து சீரான இடைவெளிகளில் அதிர்வதும் அடங்குவதுமாய் இருந்தது பார்பராவின் இருமல். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் கேட்டுவிட்டு வந்திருந்த நண்பனின் நிகழ்வும், பார்பராவை நம்பி யாருமற்றுக் கண்களில் உலகைத் தேடி வளரும் பிஞ்சுகளும், விபரீதக் கனவுகளுமாய்க் கண்களில் வந்துபோய்க் கொண்டிருந்தன மீதித் தூக்கத்தில். காலையில் கதவு திறந்து சந்தித்துக்கொண்டபோது பார்பரா மீண்டும் புகைத்துக் கொண்டிருந்தார். "எப்படியிருக்கிறீர்கள் பார்பரா?".....அவரிடமிருந்து  புன்னகை. பதில்களற்ற பதில் ஒன்றைச் சொல்ல புன்னகையே உகந்தது. "நீங்கள் இந்தப் புகைப்பழக்கத்தைக் கைவிட முயற்சிகள் எடுத்துக்கொள்ளலாமே பார்பரா, நேற்று இரவு நிறைய இருமிக் கொண்டிருந்தீர்களே?".... "மன்னிக்கவும், தூக்கம் பாதிக்கப்பட்டுவிட்டதா?  முயல வேண்டும்தான்....நன்றி...ஆனால்.....வேண்டாம்...என் பிரச்சினை உனக்குப் புரியாது, வருகிறேன் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க வேண்டும்" பார்பரா மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். சரிதான் பார்பரா...நான் நீங்களாகாத வரை எனக்குப் புரியாதுதான்....பார்பராவிடம் முதன்முறையாக மன்னிப்புக் கேட்கத் தோன்றியது. என்றாலும் இன்னொருநாள், பிறகொருநாள், அதற்கும் பிறகொருநாள் என உங்களிடம் பேசிக்கொண்டுதானிருக்கப் போகிறேன்  இந்தப் போதையை நிறுத்துவதற்காக. என்னால் காத்திருக்க முடியும் உங்களை நானும், என்னை நீங்களும் புரிந்துகொள்ளும் புள்ளி வரும்வரை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-5678086078283664833?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/5678086078283664833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=5678086078283664833' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/5678086078283664833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/5678086078283664833'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2010/01/blog-post.html' title='நான் நீங்களாகாத வரை...'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-2249961317359607609</id><published>2009-12-30T23:56:00.004-06:00</published><updated>2009-12-31T00:14:52.029-06:00</updated><title type='text'>காலம்</title><content type='html'>&lt;a href="http://www.ivcs.org.uk/child2%20-%20village%20children%20playing.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://www.ivcs.org.uk/child2%20-%20village%20children%20playing.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளங்கை ரேகை சுட &lt;br /&gt;ஊன்றி ஏறிய பாறையின் உச்சந்தலையில்&lt;br /&gt;இன்னும் ஒரு துளி உலராமல் தெரிகிறது&lt;br /&gt;நான் ஏறியது கண்டு எழுந்தோடிய கொக்கு &lt;br /&gt;எங்கிருந்தோ கொண்டுவந்து உதறிவிட்டுப் போயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாக மடையில் &lt;br /&gt;முழங்கால் நீரில் சீலை உயர்த்திக் கட்டி &lt;br /&gt;ஊரான் துணிகளை அடித்துத் துவைக்கிறாள் நாகன் மகள் &lt;br /&gt;அவள் காலுக்கிடையே விரவியோடும் அழுக்கில் ஒரு துளி நான்&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சாம் நெம்பர் பஸ்ஸில் &lt;br /&gt;ஓட்டுனரின் வசவைப் புறம்தள்ளி &lt;br /&gt;தன் கொய்யாப் பழக் கூடைக்கு இடம்பிடித்த கிழவி &lt;br /&gt;சுருக்குப்பை திறந்து காசெடுத்து நிமிர்கையில் &lt;br /&gt;பிஞ்ச பழத்தின் தோல் கிள்ளித் தின்று கொண்டிருந்தாள் &lt;br /&gt;நெரிசலில் நசுங்கியிருந்த நெலாப் பொட்டுச் சிறுமி&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு மார்க் பத்தாமல் &lt;br /&gt;ஏழாம் வகுப்பில் பெயிலானதால் லீவுக்கு &lt;br /&gt;மாமன் ஊட்டுக்குப் போவமுடியாதென &lt;br /&gt;வைராக்கியமாய் இருந்தாள் பாலாமணி&lt;br /&gt;&lt;br /&gt;குடிக்கும்போது ஒழுகி &lt;br /&gt;வயித்தில் கோடிட்ட தெளுவோடு &lt;br /&gt;வீதியெங்கும் இசையெழுப்பிச் செல்கிறான் &lt;br /&gt;நொங்கு வண்டிச் சுப்பிரமணியன்&lt;br /&gt;&lt;br /&gt;பட்டிப்படல் கட்டும் முன்பு எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது &lt;br /&gt;உள்ளே போட்ட சோத்தை&lt;br /&gt;தின்றுமுடித்து விட்டதா செவலை என்று ஆத்தா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்றங்களுக்குத் தண்டனை உண்டு&lt;br /&gt;குற்ற உணர்வுகளுக்குத் தண்டனை ஏது&lt;br /&gt;அந்த உணர்வுகளைத் தவிர?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-2249961317359607609?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/2249961317359607609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=2249961317359607609' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2249961317359607609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2249961317359607609'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/12/blog-post.html' title='காலம்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4425338910513797128</id><published>2009-11-22T23:06:00.003-06:00</published><updated>2009-11-22T23:22:13.615-06:00</updated><title type='text'>பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் ஒன்னா?.....அய்யன் கதை 5</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_ofzcGUe23Yk/SoEt_VeKHlI/AAAAAAAAATo/XEY9ALZZQ3Y/s320/Picture+533.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_ofzcGUe23Yk/SoEt_VeKHlI/AAAAAAAAATo/XEY9ALZZQ3Y/s320/Picture+533.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவாசை முடிஞ்சு அஞ்சாறு நாள் போனா ஆகாயத்துல சின்னக் கீத்தாட்ட வளந்து நிக்கற பெறைநிலா அழகாத்தான் இருக்கும். சித்த நேரம் நின்னு பாத்துட்டுப் போலாம்னுதான் தோணும். ஆனா அந்தப் பொறைநிலா மாதிரி வளஞ்சு கூனுப் போட்ட ஒடம்போட நடந்து, உக்காந்து, உண்ணு, உறங்கின்னு வாழறது எவ்வளவு சிரமமா இருக்கும்னு நல்ல மேலு காலோட கைவீசி நடக்கறவங்களுக்குப் புரியுமா தெரியாது.&lt;br /&gt;இதெல்லாஞ் சரிபண்றதுக்கு மருத்துவத்துல இப்பெல்லாம் வசதிகூட இருக்குமாயிருக்கும். ஆனா நம்மூருல அப்படிக் கூனுப் போட்ட அய்யன் ஆத்தாவெல்லாம் அந்தக் கூனோடவேதான் வழ்ந்து மடியறாங்க. அதோடவே எல்லா வேலை வெட்டியும்வேற செஞ்சுக்கிட்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;கோயிந்தாத்தா அப்படியொரு கூனுப்போட்ட ஆத்தா. ஆத்தா பேரு கோயிந்தம்மான்னு இருக்கலாம். ஆனா அவங்களை அக்கான்னு கூப்பிட்டவங்க எல்லாம் ஊருக்குள்ள "கோயிந்தக்கா" னு சொல்லிப் பழக்கமாயிருச்சு. அதுபோலவே சிறுவயசுக் கூட்டத்துக்கு "கோயிந்தாத்தா" ஆகியாச்சு. பேர்ல என்ன இருக்குது? அவங்க வாழ்க்கை என்னன்னு பாத்தா அது சொல்ற சங்கதி என்னமோ நெறையத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; வெய்ய காலம் தாண்டி அக்கினி நட்சத்திரமெல்லாம்  கருக்கி முடிஞ்ச கடைசியிலயாவது வானம் கண்ணத் தொறந்தா காஞ்ச பூமியில பச்சையப் பாக்கலாம். அந்தப் பச்சைக் காலத்துல ஊர் முழுக்க இருக்கற வேப்ப மரங்க நல்லாக் கொழுந்து விட்டுப் பூப் பூத்துக் காய் காய்க்க ஆரம்பிக்கும். ஊருக்குள்ள மட்டுமில்லாம காடு கழனிகளுக்குப் போற புழுதி ரோடுகள்ல ரெண்டுபக்கமுமாப் பூத்து நிக்கற வேப்பமரக் காத்து ஒரு தனி சொகந்தான். கொத்துக் கொத்தாப் பச்சைப் பசேல்னு கெளைக முழுக்காத் தொங்கி நிக்கற வேப்பங்காய்க அனேகமா ஆடி மாச வாக்குல நல்ல மஞ்சளாகி உதிரத் தொடங்கும். பழம் பழுக்கற காலத்துல வேப்ப மரங்க மேல விருந்தாளிக கூட்டம் பேசிச் சிரிக்கறது சங்கீதமாக் கெடக்கும். வேற யாரு? காக்கா குருவிகதான். அதுக பாடு அதுகளுக்கு. இப்படி இரைச்சலும், இசையுமா மேல உக்காந்து திங்கற பறவைக் கூட்டம்னா, அந்த வேப்ப மரங்களுக்குக் கீழ ஒரு ஆழ்ந்த அமைதியோட உழுந்து கெடக்கற வேப்பம் பழங்களப் பொறுக்கிச் சேத்துக்கிட்டிருக்கற கோயிந்தாத்தாவப் பாக்கலாம். ஜாக்கெட்டுப் போடாத சுருக்குழுந்த தோள்களோட கூனுழுந்த உடம்பால குத்தவெச்சு உக்காந்து ஒரு சின்னப் போவினியில வேப்பம் பழத்தையும், முத்தையும் பொறுக்கிப் போட்டு அது நெறஞ்சாக் கொட்டி வெக்க ஒரு பத்துப் படி புடிக்கிற கூடை ஒன்னையும் வெச்சுக்கிட்டு கோயிந்தாத்தா அங்க இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காடும் கால்நடையுமாப் பொழைக்கற அய்யன் ஆத்தா கதைக வேற. அதே ஊருக்குள்ள இந்தக் கோயிந்தாத்தாக்களோட கதைக வேற. பெராந்து(பருந்து) அடிச்ச கோழிக்குஞ்சுகளாட்ட வாழ்க்கையாலயும், வறுமையாலயும் தொரத்தப்படறவங்க வரிசையிலதான் இவங்களுக்கு இருப்பிடம். மரம் மரமா காக்காயும் குருவியுமா தின்னு&lt;br /&gt;கழிக்கிற வேப்ப முத்து நம்ம கோயிந்தாத்தாவுக்கு ஒரு படகா இருந்து கரை சேர உதவுச்சு. பொறுக்கிக்கிட்டு வர்ற வேப்பம் பழங்களை ஒன்னா வாசலோட ஒரு மூலையில குமுச்சு வெச்சு சாக்கைப் போட்டுக் காத்துப் போகாம மூடி வெச்சுக்கிட்டு வரும் ஆத்தா. ஒரு மாசம் போலப் பொறுக்கிச் சேத்து இப்படிப் போட்டு வெச்சா பழமெல்லாம் நல்லா இத்து  நசநசன்னு ஆகும். அந்தப் பக்குவத்துல எடுத்து வாச நடுவுல போட்டுச் சுத்தியும் பழத்தாலயே வரப்பாட்டக் கட்டித் தண்ணி ஊத்திக் காலால நல்லா மிதிச்சு வேப்ப முத்தெல்லாம் பழத்துல இருந்து பிதுங்கி வாரப்ப அப்படியே ஒன்னு சேத்து மறுக்காவும் சில நாளைக்கு மூடி வெச்சுரும். அப்பறமா எடுத்துத ஒரு பெரிய சல்லடையாட்ட இருக்கற கூடையில போட்டுத் தண்ணி ஊத்தி ஊத்தி அலாசுனா அழுக்கெல்லாம் போயி நெறையா முத்தும், கொஞ்சம் தொப்பையுமா இருக்கும். அதை வெய்யில்ல காயப்போட்டு எடுத்துத் தொப்பையெல்லாம் பொறுக்கி வீசீட்டு முத்தை எடுத்துக் கொட்டி அளந்து வைக்கும் ஆத்தா. பாக்கறதுக்குச் சுலபமாத் தெரிஞ்சாலும் இது ஒரு பெரிய தொழிற்சாலையில நடக்குற நீளமான தயாரிப்பு வேலை மாதிரித்தான். இப்படிச் சேத்த முத்தை ஊருக்குள்ள வர்ற ரெண்டு மூனு ஏவாரிககிட்டப் பேசி யாரு ஒரு பத்துப் பைசா படிக்கு அதிகமாக் கொடுக்கறாங்களோ அவங்களுக்கு விக்கும் ஆத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;வேப்பம் பழம் பொறுக்கற மாதிரிக் கூனு ஒடம்ப வெச்சிக்கிட்டு அதை மிதிச்சு அலாசவெல்லாம் கோயிந்தாத்துவுக்கு முடியாமப் போவும். அப்ப மவளையும் மருமவனையும் அந்த வேலைகளைச் செய்யச் சொல்லீட்டுப் பக்கத்துல இருந்து பக்குவம் சொல்லும். ஆத்தாளுக்கு ஒரே மகதான். அய்யன் கண்ணை மூடிக் காலமாச்சு. மவளும், மருமவனும் ஒரே பேரனும் ஆத்தா கூடத்தான். இருக்கறதுக்கு ஒரு ரெண்டங்கன ஓட்டு ஊடு இருந்துச்சு. அதுவும் மழை வந்தா ஒழுகும்தான். பொழைக்கறதுக்கு ஒரு ஏக்கர் காடு இருந்து என்ன பிரயோசனம்? கெணறில்லாத வெறுங்காடு. மழை பேஞ்சா ரெண்டு பயிரு பச்சைய வெதைக்கிறதுதான். அதுவும் அப்பறமா மழையில்லாமக் காஞ்சாலும் போச்சு. ஊட்டுச் செலவுக்கு ஆகற மாதிரி ஒரு நாலு படி கெடைச்சாலும் உண்டு. ஒன்னுமில்லாமப் போனாலும் போச்சு. மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குங்கூடத் தெரியாதாமான்னு ஆத்தாவே சொல்றப்போ காடு வெதைச்ச பயிறு ஊடு வந்து சேரும்ங்கறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்குது? &lt;br /&gt;&lt;br /&gt;அதனால இதையெல்லாம் நம்பியும் நம்பாமத்தான் கோயிந்தாத்தா பொழைக்கிறதுக்கு மக, மருமகனுக்கும் புத்தி சொல்லிக்கிட்டே தானும் இப்படி வேலை செஞ்சுக்கிட்டே இருந்தது. மருமவன் வேறொரு பண்ணையத்துல வாரத்துக்கு ஆடு மேச்சாரு. மக கொஞ்சம் சீக்குக்காரிங்கறதால அப்பப்பக் கூலி வேலைக்குப் போறதும், முடியலைன்னாப் படுத்துக்கறதுமா இருந்தது. ஆத்தா வேப்பங்காய்ச் சீசன் முடிஞ்ச உடனே எந்தக் காடுகள்ல வேலை இருக்குன்னு விசாரிச்சுக் கூலிக்கும் போகும். மொளகாய் பொறிக்கிறது, களையெடுக்கிறதுன்னு ஆத்தா தன்னை வருத்திக்காத நாளு கம்மிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாசமெல்லாஞ் சேந்து வேப்ப முத்துப் பொறுக்கி நானூறு ஐநூறு வரைக்கும் வித்தா அதுக்கூடவும் கொஞ்சம் ஒட்டவெச்சு அரிசி சோளம்னு ஆக்கி உங்கறதுக்கு ரெண்டு மூட்டை வாங்கிப் போட்டு வைக்கச் சொல்லும் மருமவனை. அவரும் கொஞ்சம் மசமசன்னு சூது வாது தெரியாத மனுசனா இருந்தது ஆத்தாவுக்குக் கவலைதான். "நானும் உங்கய்யனாட்டக் கண்ணை மூடிட்டா நீங்க வேய்க்கானமாப் பொழைக்கொனும்னேதேன் எங்கவலை" னு  அடிக்கடி சொல்லும். தாங்கெல்லாங் கஷ்டப்பட்டாலும் பேரனாவது நல்லாப் படிச்சுத் தலை நிமிந்து நிக்கோனும்னு ஆசையும் பட்டுச்சு. பொழுது விடிஞ்சு பொழுது போனா ரவும் பகலா ஆத்தா மனசுல இதே கருக்கடைதான். நெஞ்சுக்கூட்டுக்குள்ள வெந்த வேதனைகள ஆத்தா அடுத்தவங்ககிட்டச் சொல்லக்கூட ரொம்ப யோசிக்கும். ஏன்னா ஊருக்குள்ள ஒரே சாதியா இருந்தாலும் கூலிக்குப் போற கோயிந்தாத்தாவுக்கு மத்த ஊட்டுக்காரங்கள்ல நெறையப் பேரு வேலை கொடுக்கறதுனால எசமான ஒறவுலதான் தெரிஞ்சாங்க. மேக்காலப் பண்னையத்துக்கும், வடக்காலப் பண்ணையத்துக்கும் மொளகாய் பொறிக்கப்போன கோயிந்தாத்தாவும், அதே வேலைக்கு வந்த மாதாரிக் கிட்டாவும் வறுமையில ஒன்னாத்தான் இருந்தாங்க. மாதாரிக் கிட்டாவுக்கு வாசல்ல நிக்கவெச்சுத் தேங்காத் தொட்டியில காப்பி ஊத்துனவங்க கோயிந்தாத்தாவ ஊட்டுக்குள்ள பொழங்க உட்டு சில்வர் தம்ளருல காப்பி கொடுத்தாங்க. அந்த சில்வர் தமளாரு உபச்சாரம் சாதியில நீ எங்கூட ஒன்னுன்னு தூக்கி வெச்சுக்கிட்டாலும் பொழப்புல நீ எங்கிட்ட வாங்கி வயிறு கழுவுற கூலிக்காரிதான்ங்கற பாகுபாட்டைக் கொறச்சதில்லை. வெய்ய வேனல்னு ஒன்னா வேலை செஞ்சு ஒருவாய் சோறு திங்கற வர்க்கத்துல ஒன்னா இருந்தாலும் கோயிந்தாத்தா ஊட்டுக்குள்ள மாதாரிக் கிட்டா வரமுடியாதுங்கறது ஒலகமே அழிக்க முடியாத இன்னொரு கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதப் படிக்கத் தெரியாது. நாடென்ன நம்ம விசயமென்ன? விவரமெல்லாம் புரியாது. ஆனா கூலிக்குப் போற கொடுமை எசமான மனங்களைப் புரியத்தான் வெச்சுது கோயிந்தாத்தாவுக்கு. தன் சாதியா இருந்தாலும் இப்படியானவங்களோட நாலு மொழம் தள்ளி நின்னுது. ஊரு, ஒறவு விசேசம்னு கூப்புட்டாலும் போனமா வந்தமா சித்த நேரம்தான். பட்டும், சரிகையும், நகையும் நட்டுமாக் கூட்டம் கூடிச் சிரிக்கிற எடங்கள்ல ஒட்டாம ஒதுங்கி வெளிய வந்துரும். "அவ புள்ளை ஓடிப் போய்ட்டாலாமா, இவம் பயன் பொண்டாட்டிகூட இல்லையாமா" தின்ன சோறு செரிக்கப் பேசற பொம்பளைகளுக்கு நடுவ ஆத்தா இருந்ததில்லை. வேலை இருந்தாச் செய்யறது இல்லைன்னா ஊட்டு வாசப்படியில உக்காந்து தன்னோட, மகளோட கிழிஞ்ச சீலைகளைத் தைக்கிறது, வளத்தற கோழிக்குஞ்சுகளுக்குத் தீனியப் போட்டு அதுக திங்கறத உக்காந்து பாக்கறது, வாசல்ல மொளச்சிருக்கற புல்லு, பூண்டுகளைப் புடுங்கி எறியறதுன்னு ஆத்தா அதுக்குன்னு ஒரு வாழ்க்கை மொறையை வெச்சிருந்தது. அப்படியே யாராச்சும் ஆத்தா ஊட்டு வழியா நடந்து போகையில "ஆத்தா சித்த நேரம் உக்காந்து ஒரு சனத்துகிட்டப் பேசுனா அதுக்குள்ளக் கோழியக் கீரி புடுச்சுக்கிட்டுப் போயிருமுங்களா?" னு கிண்டல் கேலி பேசுனாலும் ஆத்தாகிட்ட இருந்து வர்ற பதில்ப் பழமை  "உங்ககூடவெல்லாம் நான் என்னத்தையாத்தா பேசறது? பசி ஏப்பக் காரரும், புளி ஏப்பக்காரரும் ஒன்னாப் பேச என்ன இருக்குது?" ங்கறதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழமொழி புரியாதவங்களுக்கு:- நெறையா வயிறு முட்டத் தின்னுட்டுச் செரிக்க முடியாம இருக்கறவனுக்கும் ஏப்பம் வரும், அது அசீரண ஏப்பம், உள்ள இருந்து சாப்பிட்டதையும் கொஞ்சம் கொண்டுக்கிட்டுப் புளிப்புச் சுவையோட வர்ற ஏப்பம் அது. வயிறு காஞ்சு ஒரு வாய்ச் சோத்துக்கு ஏங்கறவனுக்கும் ஏப்பம் வரும், அது பசியால கண்ணைக் கட்ட வைக்கிற, உள்ள ஏதாவது ஊத்துன்னு கேக்கற பசி ஏப்பம். அசீரண ஏப்பம் விட்டுக்கிட்டு இருக்கறவன்கிட்ட நீங்க உக்காந்து பசியால ஏப்பம் விட்டாலும் அது அவனுக்குப் புரியவா போகுது? கோயிந்தாத்தா ஊருக்குள்ள மத்தவங்ககூடச் சேராததுக்குச் சொன்ன பழமொழி சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணுல பொறந்து உழுந்த நாள் முதலா மண்ணுல வெதச்சு, மண்ணுல பொறுக்கி அப்பவும் கண்ணுல எந்த மகிழ்ச்சியுமில்லாம மண்ணுக்கிரையாப் போய்க்கிட்டிருக்கற கோயிந்தாத்தாக்கள் இன்னும் இருந்துக்கிட்டுத்தான் இருக்கறாங்க. வேப்ப மரங்களையே மறந்துபோன சனத்துக்கெல்லாம் வேப்ப மரத்துக்கடியில உக்காந்திருக்கற கோயிந்தாத்தா தெரியவா போறாங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4425338910513797128?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4425338910513797128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4425338910513797128' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4425338910513797128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4425338910513797128'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/11/5.html' title='பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் ஒன்னா?.....அய்யன் கதை 5'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ofzcGUe23Yk/SoEt_VeKHlI/AAAAAAAAATo/XEY9ALZZQ3Y/s72-c/Picture+533.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-1860279315882851959</id><published>2009-11-17T00:03:00.003-06:00</published><updated>2009-11-17T00:22:29.029-06:00</updated><title type='text'>நட்பெனப்படுவது</title><content type='html'>மேரியைச் சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டன &lt;br /&gt;ஒரு சின்னப் பூனைக்குட்டியின் &lt;br /&gt;மினுமினுக்கும் கண்கள் மேரியினுடையவை &lt;br /&gt;கிலுவ மரத்தின் மேல் படர்ந்திருந்த&lt;br /&gt;கண்ணுவலிப்பூவின் மஞ்சளுக்கு மேலான சிவப்பு &lt;br /&gt;மேரியின் கண்களிலும் இருப்பதாய் உணர்ந்தபோதில் &lt;br /&gt;அவை மேலுமொரு ஈர்ப்பைத் தந்தன&lt;br /&gt;நடைபாதையில், நீரோடைக்கருகில், பல்பொருள் அங்காடியில் &lt;br /&gt;எங்கு சந்தித்தாலும் &lt;br /&gt;மேரியின் கண்கள் சொல்லியவை ஒன்றுதான்&lt;br /&gt;ஊர்விட்டு வரும்போது விடைபெற்றுக்கொள்கையிலும் &lt;br /&gt;அக் கண்களைப் பிரிவது சங்கடமாய் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;மேரியைச் சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டன&lt;br /&gt;இன்று நீதாவைப் பார்க்கப்போவது மேரிக்காகத்தான்&lt;br /&gt;ஊருக்கிரண்டாய் இல்லாமல் போவதில்லை மேரியின் கண்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-1860279315882851959?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/1860279315882851959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=1860279315882851959' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/1860279315882851959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/1860279315882851959'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/11/blog-post.html' title='நட்பெனப்படுவது'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-3182253314220494672</id><published>2009-09-16T01:58:00.003-05:00</published><updated>2009-09-16T02:05:44.759-05:00</updated><title type='text'>பதிவில் கடந்த பாதை (முல்லையின் அழைப்பின் பேரில்)</title><content type='html'>&lt;a href="http://makingmore.files.wordpress.com/2009/06/emptiness.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 317px;" src="http://makingmore.files.wordpress.com/2009/06/emptiness.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு இப்படித் தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு நான் எழுதிய ஒன்றே ஒன்று "கிறுக்கு" தொடர்தான். வேறொன்றும் காரணமில்லை, சோம்பேறித்தனம்தான். என்னதான் வலிந்து மனதைச் செலுத்த முயன்றாலும் ஒரு உள் உந்துதல் இல்லாமல் எழுத நினைக்கும் சில விடயங்கள் ஏறாத சுவற்றில் ஆணிஅடித்துத் தோற்பதைப்போல் ஆகிவிடுகின்றன. அப்படி விட்டவையும் உண்டு. சிலமாதங்களுக்கு முன்பு என் மீது வருடங்களாக மாறாத அன்பைக் கொண்ட பேராசிரியர் தருமி தன் பேத்தி மூலம் ஒரு பதிவுலக விருதைத் தந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருந்தார். ஒரு பச்சைப்பிள்ளை கைநீட்டிக் கொடுத்ததென்றும் பாராமல் அதைப் புறக்கணிக்க வைத்தது அந்நேரத்துப் பாறைமனசு. தேள்கொட்டினாலும் அதைக் காப்பாற்றவே விரும்புகிற துறவியாய் அன்பைத் துறக்காதவர் தருமி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நீண்ட‌நாட்க‌ளுக்குப் பின் மீண்டுமொரு தொட‌ர் விளையாட்டில் ச‌ந்த‌ன‌முல்லையால் அழைக்க‌ப்ப‌ட்டிருக்கிறேன். "இந்த‌ விளையாட்டிலும் எழுதாது போனாலும் போவேன். த‌வ‌றாக‌ எடுத்துக்கொள்ளாதீர்கள்" என‌ அவ‌ருக்குச் சொல்லியும் விட்டேன். ஆனாலும் ம‌ன‌துக்கு இதைச் சொல்வ‌து பிடித்துப்போயிருக்க‌ வேண்டும், வ‌ந்தாயிற்று. எப்போதும் முன்னோக்கியே ஓடிக்கொண்டிருக்கிற‌ ம‌ன‌துக்கு இந்த‌ப் பின்னோக்கிய‌ அசைபோட‌ல்க‌ளில் ஒரு ஈர்ப்பு ஏற்ப‌ட்டுவிடுவ‌து இய‌ல்புதான். நான் ச‌ம்பாதித்த‌வையும் இழ‌ந்த‌வையும் நிறுக்க‌ப்ப‌ட்டு ஒன்றைப்போல் இன்னொன்றும் இய‌ல்பான‌துதான் என்ற‌ ச‌ம‌நிலையைப் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்துகிற‌து இந்த‌ அசைபோட‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 2004 பிப்ர‌வ‌ரியில் இணைய‌த்தில் எழுத‌வ‌ந்தேன். அய‌ல்தேச‌ வாழ்வில் கிடைத்த‌ த‌னிமையான‌ நேர‌மும், முன்பே ஊரில் மொழிசார்ந்த‌ வேறுத‌ள‌ங்க‌ளில் இய‌ங்கிக்கொண்டிருந்த‌ அனுப‌வ‌மும் எழுத்தில் ஈடுப‌ட‌வைத்த‌ன‌. "ம‌ர‌த்த‌டி" என்ற‌ இணைய‌க் குழும‌த்தில்தான் முத‌லில் போய்விழுந்த‌து. அங்கே க‌விதை, க‌ட்டுரை என‌வும் எல்லோர்பாலும் ந‌ட்பைத் தேடி ந‌க‌ர்கிற‌ ம‌ன‌துமாய்ப் போய்க் கொண்டிருந்த‌து. அப்ப‌டியான‌ நாட்க‌ளில் அக்குழும‌ம் தாண்டி 'திண்ணை" யெல்லாம் இருப்ப‌த‌றிந்து அங்கேயும் எழுத‌ ஆர‌ம்பித்தேன். இக்கால‌க‌ட்ட‌ங்க‌ளில் அங்கே வாசித்த‌, எழுதிய‌ அனுப‌வ‌ங்க‌ளில் சில‌ அவ்விட‌ங்க‌ளில் இருந்த ஈடுபாட்டை நீர்த்துப் போக‌ச் செய்துகொண்டிருந்த‌து. இச்ச‌ம‌ய‌த்தில் வ‌லைப்ப‌திவு என்ப‌து உருவாகிப் பிர‌ப‌ல‌மாக‌த் தொட‌ங்கியிருந்த‌து. என்றாலும் த‌னியாக‌ ஒரு வ‌லைப்ப‌திவு தொடங்கி எழுதுவ‌து ஏதோ ஒரு ப‌த்திரிக்கையை நானே நிர்வ‌கித்து, வினியோகிப்ப‌தான‌ ப‌ய‌த்தையும் த‌ந்துகொண்டிருந்த‌தால் வ‌லைப்ப‌திவு தொட‌ங்க‌வில்லை. அதற்கேற்றாற்போல் அப்போது பெண்க‌ளுக்கான‌ ஒரு கூட்டு வ‌லைப்ப‌திவை உருவாக்கியிருந்த‌ ம‌திக‌ந்த‌சாமியின் அழைப்பின்பேரில் அங்கே எழுத‌ ஆர‌ம்பித்த‌தும் த‌னிப்ப‌திவிற்கான‌ தேவையைக் குறைத்த‌ன.&lt;br /&gt; &lt;br /&gt;விரைவில் யாராலோ அத்த‌ள‌ம் தக‌ர்க்க‌ப்ப‌ட்ட‌தென‌ நினைக்கிறேன். பிற‌குதான் எலிவ‌ங்கானாலும் த‌னிவ‌ங்கே த‌லைசிற‌ந்த‌தென‌ "நிற‌ங்க‌ள்" 2006 இல் உருவெடுத்த‌து. வ‌லைப்ப‌திவில் நான் எழுதிக் கிழித்த‌தைவிட‌ வாசித்துக் கிழித்த‌வைதான் அதிக‌ம். என‌க்கான‌ புதைய‌ல்க‌ள் இங்கிருந்த‌ன‌. என் தாக‌த்திற்கான‌ நீரும், என் க‌ண்க‌ளைத் திற‌ந்த‌ வெளிச்ச‌மும், என்னையும், என் ச‌மூக‌த்தையும் என‌க்கு அடையாள‌ம் காட்டிய‌வையும் நிறைய‌ இருந்த‌ன‌. தூக்க‌ம் கெட்ட‌தால் வாசித்த‌வைக‌ளைவிட‌, வாசித்த‌தால் தூக்க‌ம் இழ‌ந்து யோசிக்க‌ வைத்த‌வை நிறைய‌. உள்வாங்கிய‌தைப் போல‌வே வெளித்துப்பி ம‌ன‌தை ஒரு சுய‌சுத்திக‌ரிப்புச் செய்துகொள்ள‌ முடிந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்த‌ நேர‌ம் போக‌ எப்போதாவ‌து எழுதுவ‌துண்டு. அந்த‌க் குறைந்த‌நேர‌ எழுத்தாலும் பல ந‌ண்ப‌ர்க‌ள் கிடைத்தார்க‌ள். நான் அப்ப‌டி நினைக்காவிடினும் என்னையும் எதிரியாக‌ச் சில‌ர் ஏற்றுக்கொண்டார்க‌ள்:))ந‌ண்ப‌ர்க‌ளிலும் தாவிப்பிடித்துத் தொட‌வ‌ந்த‌வ‌ர்க‌ளில் சில‌ர் வ‌ந்த‌து மாதிரியே போயும் விட்டார்க‌ள். உண்மையான‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஆறுவ‌ருட‌ எழுத்துப்ப‌ழ‌க்க‌த்தின்பின்னும் என் தொலைபேசி எண்ணைக்கூட‌த் தெரிந்துகொள்ளாம‌லும், ஒருமுறைகூட அரட்டையடிக்காமலும்,  இன்ன‌மும் ந‌ண்ப‌ர்க‌ளாக‌வே ஆத்மார்த்தமானவர்களாய் இருக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குத‌ல்க‌ள், மிர‌ட்ட‌ல்க‌ள்.......அவையெல்லாம் இல்லாம‌ல் போனால் சுவார‌சிய‌ங்க‌ள் ஏது? இதில் உலகத்தில் நானறியாத மூலையிலிருந்து அனானியாக வருபவர்களில் இருந்து, ஈழத்தமிழ்ச்சாவு குறித்த, உதவி கேட்ட என்இடுகையொன்றில்  "நீ எழுதிய கருத்துக்கள் சிலதால்  என் புகழ் அழிந்துவிட்டது, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்" என்கிற ரீதியில்  எனக்கு மட்டுமின்றி, என் வாழ்க்கைத் துணைவருக்கும் 'தனிமனித, கருத்து சுதந்திரத்திற்குக் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கிவருகிற ஒரு நாட்டிலிருந்துகொண்டே தாதாத்தன மிரட்டல் விட்ட உள்ளூர்த்தமிழன் வரை சுவாரசியம் சேர்க்கிற இவர்கள் உண்மையில் மனவலிமையைக் கூட்டுபவர்களாயும் இருக்கிறார்கள். இவ‌ர்க‌ளெல்லாம் இதே உல‌கின் இன்னொரு மூலையில் உண்மையை ர‌ட்சிக்கும் க‌ட‌வுள‌ர்க‌ளாயும், கீதையை உப‌தேசிக்கும் க‌ண்ண‌ன்க‌ளாக‌வும் கூட‌ப் பிம்ப‌ங்க‌ள் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்க‌க்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவில் எழுதி அடுத்த கட்ட முயற்சியாக என்ன செய்யப் போகிறேன்? பிரபலமடைந்திருக்கிறேனா? அல்லது பிரபலமானவர்களால் குறிப்பிடப்படும்படியாக ஆகியிருக்கிறேனா? என்றெல்லாம் எதுவும் என்னை நான் இப்போது கேட்டுக்கொள்வதில்லை. ஏனென்றால் எழுத்துக்கு வரும்முன்பு வேறு துறையில் சுமந்துதிரிந்த பிரபலக் கிரிடங்களைக்கூடச் சுக்குநூறாக உடைத்துப்போட்டு என்னைக் காலியாக்கி வைத்துக்கொள்ளவே உதவுகிறது எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் எப்போதாவது எப்படியாவது தலைதூக்கிவிடும் கிரீடப் பீடை நினைவுகள் ஒரு அடுக்கில் வந்தாலும் அடுத்த நொடியே மூத்திரச் சட்டியோடு சூத்திரனை நினைத்தழுத கிழவனும் வருகிறார்.  "எனக்கு மன்னிப்புக் கேட்டு உங்களை யார் மனுபோடச் சொன்னது? என்னைத் தூகிலேற்றட்டும், அதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்" எனச் சொன்ன பகத்சிங்கும், பச்சைக் குழந்தையிடமும் சுதந்திரத்தின் தாகத்தை எழுதிவைத்த போராளித்தாய் இடானியாவும் வருகிறார்கள், மாதவிடாய் ஒழுக ஒழுகக் கட்டிக்கொள்ள‌வும் துணியற்று ஈழவிடுதலைப் போராளியாய் போலீசிடம் அடிபட்டு, உதைபட்டு, பெண் எனும் முறையிலும், தலித்தாகவும் தான் பட்ட வேதனைகளையும் தாண்டி "மேலைத்தேய வாழ்வு நமது சாதீய, பெண்ணீய அடக்குமுறைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தந்ததாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு "நான் எப்போது அடிமையாக இருந்தேன் விடுதலை பெற? எப்போதும் எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்தே வாழ்கிறேன், இந்த எதிர்ப்பே என் விடுதலை" எனும் புஸ்பரானியும் கூட நினைவின் இன்னொரு அடுக்கில் வந்து நிற்கிறார். அவர்களையெல்லாம் நினைவுகளில் மீட்டு வரும் அப்ப‌டியான‌ த‌ருண‌ங்கள் நான் ஒரு வெறும் ச‌ருகென்ப‌தை நேர்மையாக‌ என‌க்குள்ளேயே ப‌திவு செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் என்னைக் காலியாக்கு, எறும்பினும் சிறிதாகும் எளிய‌ளாக்கு" எழுத்தைப் ப‌ற்றிச் சொல்ல‌வும், எழுத்திட‌ம் சொல்ல‌வும் இப்போதைக்கு என‌க்கு இருப்ப‌து இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யாரையும் அழைக்க‌வில்லை, விதிமுறைக‌ளைக்கூட‌ ஒழுங்காக‌க் க‌டைப்பிடிக்க‌வில்லை. "ஒன்றும் விள‌ங்காத‌துக‌ளிட‌ம் ஒரு வேலையை ஒப்ப‌டைத்தால் இப்ப‌டித்தான்" என்று முல்லை நீங்க‌ள் பின்னூட்ட‌மிட்டு வாழ்த்த‌ வேண்டுகிறேன்:))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-3182253314220494672?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/3182253314220494672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=3182253314220494672' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/3182253314220494672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/3182253314220494672'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/09/blog-post.html' title='பதிவில் கடந்த பாதை (முல்லையின் அழைப்பின் பேரில்)'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-5031155555673793468</id><published>2009-09-13T00:32:00.003-05:00</published><updated>2009-09-13T01:04:07.940-05:00</updated><title type='text'>காளி ஒறவு கருது பகையா?.......அய்யங்கதை 4</title><content type='html'>"எல்லா இங்க மேயுதுக, உனக்கு மட்டு அங்க என்ன போட்டு வெச்சிருக்குது?"  ஒரு கல்லெடுத்து வீசிக்கிட்டே வார்த்தை பேசுனாரு கரையோரமா பனங்கருக்குக்கிட்ட கவையப் புடிச்சுக்கிட்டு நின்ன அய்யன். வார்த்தைக்குப் ப‌யந்துதோ இல்லையோ கல்லுக்குப் பயந்துக்கிட்டுப் போன வேகத்துல திரும்பி வந்து மத்த ஆட்டோடவே மேயஆரம்பிச்சுது அந்தக் கறுப்பாடு. கறுப்பாட்டுக்கு அய்யனுக்காட்டவே அறிவு சாஸ்தி. எங்க போனாலும் மேயற எடத்து உட்டுப்போட்டுத் தூரத்துப் பச்சையக் கண்டுபிடிச்சு அந்தப்பக்கமா மொல்ல நகர ஆரம்பிக்கும். அப்பறமா எல்லா ஆடும் அதும்பொரவாலெ போகும். அய்யன் உடுவாரா? அவரும் ஆடாத கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருக்கோனும்ங்கற மாதிரி யாருகிட்டப் பேசிக்கிட்டிருந்தாலும் கறுப்பாட்டு மேல ஒரு கண்ணாவேதான் இருப்பாரு.&lt;br /&gt;கறுப்பாடு திரும்பிவந்தபொறகு இனிச் சித்தநேரத்துக்குப் பிரச்சினையிருக்காது, எல்லாம் பொட்டாட்ட (அமைதியா) மேயும்னு நெனச்சுக்கிட்டுத் தலைக்குக் கட்டீருந்த துண்டை அவுத்து நெழல் பாத்து விரிச்சு உக்காந்துக்கிட்டாரு. எங்காச்சும் சோலியாப் போனாத் த‌விர அய்யனுக்கு அங்கராக்கு (மேல்ப் பனியன் வலைவலையாக் கைவெச்சுத் தச்சது) போட்டுப் பழக்கமில்லை. வெள்ளைவேட்டியில கோமணம் மட்டும் கட்டிக்கிட்டு முண்டக்கட்டையாத்தான் இருப்பாரு. மழைகிழை பேஞ்சு கூதலடிக்கிறன்னைக்கு ஒரு துப்புட்டுப் போத்திக்குவாரு. இன்னைக்கு உப்புசமா இருந்ததுனால வெறும் மேலோட அப்படியே காத்தாட உக்காந்துக்கிட்டு பக்கத்தால கெடந்த கல்லைப் பொறுக்கி வெச்சுக்கிட்டிருந்தாரு. ஆமா, கறுப்பாட்டுக்குத்தேன் கல்லு, வேற எதுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பா கொளத்தேட்டி ஏறும்போதே அய்யனப் பாத்துட்டா, அதனாலயே வடக்கெ போற தடத்துட்டுட்டு மேக்கெ வந்தா. பாப்பா பக்கத்துத் தோட்டத்துத் தெண்டபாணி மக. பதிமூனு வயசாச்சு, லீவுநாளானா தோட்டத்துல இருந்து கொரங்காட்டுக்கு ஆடு, மாடு ஓட்டிக்கிட்டுப் போறது, அதுகளுக்குத் தண்ணிகட்டப் போறதுன்னு கொளத்துத் தடத்துல போகையில அய்யனக் குறுக்க மறுக்க பாக்கமுடியும் பாப்பாவுக்கு. அய்யன் ஆடு மேய்க்கிறது தெண்டபாணி தோட்டத்துக்கு ஒட்டுனாப்புல இருக்கற கொரங்காடு. பாப்பா வழக்கம்போல அய்யன் உக்காந்திருக்கற நெழலுக்கு வந்தா. "அப்பாவும் அம்மாவும் எங்கயோ பைக்குல போனமாதிரியிருந்துதாத்தா?" விசாரணைய ஆரம்பிச்சாரு அய்யன். "கோயலுக்குங்கய்யா" னு சொல்லீட்டுப் பாப்பாவும் உக்கார எடம்பாத்தா. "இவத்திக்கு வாத்தா, அவத்திக்கு ஒரே கட்டெறும்பா இருக்குது" ன்னு எடம் பாத்துக் குடுத்தாரு அய்யன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனுக்கு எல்லாமையும் தெரிஞ்சுக்கோணும். பெரிசா வளந்த ஆளுக இந்தய்யனோட ஒரே தொணதொணப்பா இருக்குதுன்னுட்டு விவரமாவெல்லாம் எதையும் சொல்லமாட்டாங்க. அதனால பாப்பா மாதிரிச் சிட்டாளுககிட்டத்தான் அய்யனோட விசாரணைன்னு வைங்களேன். பாப்பாவும் லேசுப்பட்ட ஆளில்லை, பின்னெ? ஆரு புள்ளை அவ? அந்த ஊருல‌யே பதனொண்ணாவது படிச்ச ஒரே ஆளு தெண்டபாணியோட புள்ளையாச்சே.&lt;br /&gt;எதுலயுமே ஒரு இத்தூனூண்டு பிரயோசனமில்லைன்னாலும் அதையச் செய்யமாட்டா அவங்க அப்பாவாட்டவே. அய்யனோட விசாரணைக்கெல்லாம் அவ பதில்ச்சொல்றதே அப்பறமா தனக்கு வேண்டியதைக் கேட்டுக்கறதுக்குத்தான். இன்னைக்கும் கேட்டா.&lt;br /&gt;எத்தனையாவது மொறையாக் கேக்கறான்னு தெரியலை "அய்யா ஆக்காட்டிப் பாட்டுச் சொல்லுங்க"ன்னு நேயர் விருப்பமா அய்யம்பாட்டுக்கு அடிப்போட்டா பாப்பா.&lt;br /&gt;எச்சையப் பொளிச்சுனு அந்தப்பக்கமாத் துப்பீட்டுச் சிரிச்சாரு அய்யன். "ஆக்காட்டிய உடமாண்டே நீயி" ன்னு சொன்னாலும் அய்யனுக்கும் அதைப் பாடறதுக்கு ஒரு குஷிதேன்னு வைங்க. ஆமா ஊருலயோ ஊட்டுலயோ வேற ஆரு இப்படி அய்யனோட திறமைய மதிச்சுக் கேக்கறாங்க? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே?"&lt;br /&gt;&lt;br /&gt;அய்யன் ராகமாப் பாட ஆரம்பிச்சிட்டாரு.&lt;br /&gt;ஆக்காட்டின்னா "ஆள்காட்டிக்குருவி" னு ஒன்னு இருக்குமே அதுதான். ஆளப் பாத்தாக் கத்தும் அதுனால அதுக்கு அந்தப்பேரு. இப்பவெல்லாம் நம்மூருப்பக்கம் அது இருக்குதான்னுகூடத் தெரியலை.அந்த ஆக்காட்டிக்கும் அய்யனுக்குமான உரையாடலாப் போவுது பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே?"&lt;br /&gt;&lt;br /&gt;"நா கல்லத் தொளஞ்செடுத்துக் கருங்கரட்டில் மொட்டு வெச்சேன், &lt;br /&gt;வெச்சதொரு அஞ்சு மொட்டு, &lt;br /&gt;பொறிச்சதொரு நாலு குஞ்சு&lt;br /&gt;நாலுகுஞ்சுக்கெரைதேட நான் நாக்காத‌ம் போயிவந்தேன்&lt;br /&gt;மூணுகுஞ்சுக்குகெரைதேட முக்காதம் போயிவந்தேன்&lt;br /&gt;நானில்லாத குறிபாத்து நாகம் வந்து தீண்டிருச்சு&lt;br /&gt;நாம்பெத்ததொண்ணும் இல்லாம அத்தனையும் செத்துருச்சு,&lt;br /&gt;நானழுத கண்ணீரு நாலுபக்கம் பெருகீருச்சு&lt;br /&gt;ஐந்நூறு பாப்பாரு அள்ளி மொகம் கழுவ‌&lt;br /&gt;முந்நூறு பாப்பாரு மோந்து மொகம் கழுவ‌&lt;br /&gt;தொண்ணூறு பாப்பாரு தொட்டு மொகம் கழுவ‌&lt;br /&gt;நானழுத கண்ணீரு ஆறாப் பெருகிருச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு ஆக்காட்டியோட சோகக்கதைய அய்யன் எங்கிருந்து கத்துக்கிட்டாருன்னு தெரியாது. ஆனா அதை அவரே ஒரு ஆக்காட்டியப் பாத்திருந்து எழுதனமாதிரி அனுபவிச்சுப் பாடுவாரு. சிலசமயம் பாடிக்கிட்டே ஆக்காட்டிக்காக அழுதும்போடுவாரு. பாப்பா இந்தப்பாட்டுக்கு அப்படியே கட்டுப்பட்டு உக்காந்திருப்பா. ஏன்னு தெரியாது, அதுக்கப்பறம் அதைய‌வே நெனச்சிக்கிட்டும் இருப்பா. தெண்டபாணிகிட்ட இந்தக் கலைரசனையெல்லாம் ஒண்ணுமில்லைன்னாலும் அவரு மகளுக்கெப்படியோ இது சின்னவயசுலயே படிஞ்சுபோச்சு. அதுமட்டுமில்லாம பாப்பாவோட அப்பாறய்யன் அவ சிறுசா இருக்கும்போதே போய்ச் சேந்துட்டதாலயோ என்னமோ இந்தப் பக்கத்துக்காட்டு அய்யங்கிட்ட அவளுக்கும் ஒரு பாசம் உளுந்திருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாவுக்கும் அய்யனுக்கும் ஒரு வேலிக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமா இப்படியொரு ஒறவு கூடிவந்தாலும் அய்யனோட மகனுக்கும் பாப்பாவோட அப்பனான தெண்டபாணிக்கும் அப்படியொண்ணும் ஒறவு சோகிரீயமில்லை. மனுசங்களைவிட மண்ணுமேல இருக்கற ஆசை எங்கதான் ஒறவு தழைக்க உட்டுருக்குது? தெண்டபாணி காட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமா ரெண்டு காடுக இருந்துது. அது ரெண்டுமே பக்கத்து ஊருக்காரர் ஒருத்தருக்குச் சொந்தமானது. அதுல ஒண்ணை தெண்டபானி குத்தகைக்கு எடுத்திருந்தாரு ஆடு குட்டிய அவசரத்துக்கு அதுல மேச்சுக்கலாம்னு. இன்னொன்ன அய்யனோட மவன் அதேமாதிரிக் குத்தகைக்கு எடுத்திருந்தாரு. அதுலதான் பாப்பாவுக்கும் அய்யனுக்கும் வேலி தாண்டி ஒறவு. அதுல என்னாயிப்போச்சுன்னா அந்தக் காடுகளோட சொந்தக்காரருக்குப் புள்ளைக கல்யாணத்துக்குப் பணம் வேணும்னு இந்த ரெண்டையுமே விக்கப் பாத்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைய மொதல்ல அவரு தெண்டபாணிகிட்டத்தான் சொன்னது. சொன்னதீயுமே தென்டபாணிக்கு ஒரு யோசனை தங்காட்டுக்கு இந்தப்பக்கமொண்ணு அந்தப்பக்கமொண்ணுனு ரெண்டையும் புடிச்சுப்போட்டா தனக்கு ஒரே எனமா நல்ல பூமி ஆகிக்குமுன்னு. கையில காசில்லைன்னாலும் சம்சாரத்துக் கையில கழுத்துல கெடந்ததைக் கழட்டி வித்தாவது புடிச்சுப்போடலாமுன்னு ஆசை வர அதைக் காட்டுக்காரருகிட்டச் சொல்லி வெலையும்கூடப் பேசிவெச்சுட்டாரு. ஒண்ணைக் கெரையமும் முடிச்சாச்சு. இன்னொன்னை விக்கறதுக்கு முன்னாடி அதையக் குத்தகைக்குப் போட்டுக்கிட்டு இருக்கற அய்யனோட மவனுக்குச் சொல்லி அவங்க கணக்கை பைசூலு செஞ்சிட்டுக் கெரையத்தை வெச்சுக்கலாமுன்னு தெண்டபாணிகிட்டச் சொல்லீருந்தாரு காட்டுக்காரரு(பைசல் செய்தல்னா கணக்குவழக்கு முடிக்கறது) தெண்டபாணியும் நம்பிக்கிட்டு உக்காந்திருந்தாரு கெரைய நாளுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சுவயசுல அண்ணந்தம்பி, பத்து வயசுல பங்காளின்னு சொந்த அண்ண‌ந்தம்பிகளே ஒருத்தம் பொழைக்கறான்னு இன்னொருத்தன் வயிறெரிஞ்சு கெடக்கையில தெண்டபாணி சொத்துவாங்கறான்னு அய்யன்மவன் பூரிச்சா போவாரு?  அய்யனோட மவன் தெண்டபானியோட‌  ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டாரு. தங்கிட்டக் காட்டைக் காலிபண்ண‌ச் சொல்லவந்த காட்டுக்காரர்கிட்ட நைச்சியமாப் பேசிக் கோழிக்கறி ஆக்கிப்போட்டு பிராந்தியும் வாங்கி ஊத்தி அதையத் தனக்கேதான் விக்கோணும்னு நின்னு ஏக்கருக்கு ரெண்டாயிரம் தெண்டபானியவிடச் சேத்திக் குடுக்கற‌ன்னும் சொல்லிக் காரியத்தைக் காதுங்காதும் வெச்சமாதிரி ரகசியமா முடிச்சுப்போட்டாரு. காட்டுக்காரர் ஏமாத்தியிருந்தாலும் தெண்டபாணிக்கு அய்யன்மவனோட வஞ்சகத்துமேல அளவில்லாத கோபம் வந்திருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யம்மவன் நேர்மையா நடக்கலைன்னாலும் இனி அவருமேல கோபப்பட்டு என்னாவப்போவுது? நம்முளுக்குத் தெரியுது. தெண்டபானிக்குத் தெரியோனுமே! அதுவும் ஊருலயே பதனொண்ணாவது படிச்சிருந்தும் தென்டபானிக்கு அப்ப "படிச்சவம் புத்தி பானைக்குள்ள" ங்கற கதையா மூளை வேலை செஞ்சமாதிரித் தெரியலை. தெரிஞ்சிருந்தா அய்யம் மவனப் பழிதீக்கறதுக்குக்கொசரம் எந்தப் பாண்டு பத்திர ஆதாரமும் இல்லாம எப்பவோ யாரோ வாய்ப்பழமையாச் சொன்னதை வெச்சுக்கிட்டு இப்ப அய்யன் மவன்மேல கேசு(வழக்கு) போடுவாரா? ஆமா, தெண்டபாணி, அய்யன் மவன்மேல கேசு போட்டாரு. என்ன கேசுன்னா இப்ப அய்யன்மவன் புடிச்சிருக்கற காட்டுக்குள்ள இருந்து தன்னோட வேலியோரமா ரெண்டுசெண்டு நெலம் தன்னோட காட்டுக்குச் சேரவேண்டியது, அந்தக்காலத்துல வேலி போடும்போது தப்பாப் போட்டுருக்காங்க, அதனால இப்ப அய்யன் மவன் அதையத் தனக்குத் தந்து வேலியப் புடுங்கி அந்தப்பக்கமாத் தள்ளிப் போடோனும்னு.......இதுதான் கேசு. இந்தமாதிரிச் சிவில் கேசுகள்ல, அதுவும் சொத்து சம்பந்தமான கேசுகள்ல நீங்க என்ன சத்தியமான, நேர்மையாளனா இருந்தாலுமே உங்க சொல்லைவிடக் கோர்ட்டுல பத்திரங்கள்ல இருக்கர எழுத்துத்தான் பேசும். அதனால பத்திரத்தே வெச்சே சொல்லீரலாம் ஒரு சொத்துல உங்களுக்கு உரிமை இருக்குதா இல்லையான்னு. கேசுபோட்டாலும் செயிப்பீங்களா மாட்டீங்களான்னும் ஒரு நல்ல வக்கீல் பாத்தாச் சொல்லீருவாங்க. ஆனா வ‌ந்தா வ‌ழ‌க்காச்சு, ந‌ம‌க்குப் பொழ‌ப்பாச்சுன்னு பாக்க‌ற‌ வ‌க்கீலுங்க‌ளும் நெறைய‌ப் பேரு இருக்க‌றாங்கில்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம்ம‌ தெண்ட‌பானி அப்ப‌டியொரு வ‌க்கீலுகிட்ட‌ மாட்டுனாரு. நானாச்சு செயிச்சுக் காட்ட‌றேன்னு தெண்ட‌பானிகிட்ட‌ச் ச‌வால் விட்டுட்டு ந‌ம்ம‌ தெண்ட‌பானி அந்த‌க் காடு புடிக்க‌ வெச்சிருந்த‌ காசையெல்லாம் கேசு ந‌ட‌த்த‌ வாங்கிகிட்டு ந‌ல்ல‌வார்த்தை சொல்லி அனுப்பியுட்டாரு. அந்த‌ வ‌க்கீல் நோட்டீசு த‌ன் ம‌வ‌னுக்கு வ‌ந்த‌ன்னைக்கு அய்ய‌ன் நேரா வேலிய‌த் தாண்டிக் க‌ட‌வ‌த் தொற‌ந்துக்கிட்டு தெண்ட‌பானிய‌ப் பாக்க‌ வ‌ந்துட்டாரு. தன்னட வாழ்நாளைல அப்படியொரு துக்கம் அய்யனுக்கு இருந்துருக்காது, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க வந்தவரு தூரத்துல தெண்டபாணியப் பாத்ததீமே பேச ஆரம்பிச்சிட்டாரு "ஏனுங்க‌ மாப்ப‌ளே! இத்த‌ன‌ நாளா தாய் புள்ளையாட்ட‌ப் பேசிக்கிட்டிருந்துட்டு ந‌ம்முளுக்குள்ள‌ இப்ப‌டி அக்குர‌முத்துக்குப் போலாமுங்க‌ளா? அந்த‌க் காட்டு மேல‌ உங்க‌ளுக்கு ஆசை இருந்துருக்க‌லாமுங்க‌, அந்த‌ நாயும் ஆச‌ப்ப‌ட்டுட்டான், அவ‌ம் புத்திக்குத் தெரிஞ்ச‌ள‌வு ந‌ட‌ந்து வாங்கீம் போட்டான். நீங்க‌ ந‌ல்லாருந்தா என்ன‌? அவ‌ன் ந‌ல்லா இருந்தா? அந்த‌ ரெண்டு செண்டுல‌ அவ‌ன் கோட்டை க‌ட்ட‌றானா? இல்ல‌ நீங்க‌தான் குடிமுழுகிப் போயிருவீங்க‌ளா? இந்த‌க் கேசு கீசெல்லாம் ந‌ம்முளுக்கு ஆவ‌றதுங்க‌ளா? அதெல்லாம் கொழுப்பெடுத்த‌விய‌ளுக்கு ஆவ‌ற‌துங்க‌, இப்ப‌டிப் ப‌ண்ணீட்டீங்க‌ளே மாப்ப‌ளே" ன்னு தொற‌ந்த‌ வாய் மூடாம‌ ம‌ன‌சுல‌ இருந்த‌த‌க் கொட்டிப் போட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;தெண்ட‌பானிக்கு என்ன‌ சொல்ற‌துன்னு தெரிய‌லை. ஏன்னா அய்ய‌ம் மேல‌ ஒரு ம‌ரியாதை தெண்ட‌பானிக்கும் இருக்க‌த்தான் செஞ்சுது. ஆனாலும் அய்ய‌ம் ம‌வ‌னை எதாவ‌து செய்யாம‌ இருக்க‌வும் முடிய‌லை. எல்லா இனிக் கோர்ட்டுல‌ பாத்துக்க‌லாங்க‌ய்யான்னு சுருக்க‌மாச் சொல்லீட்டு நிக்காம‌ப் போய்ட்டாரு. அய்ய‌னுக்கு அப்போதைக்குத் திரும்பி வ‌ந்தாலும் ம‌ன‌சு ஆற‌வேயில்லை. ம‌வ‌ங்கிட்ட‌யும் சொல்லிப் பாத்தாரு. "கேசெல்லாம் ந‌ம்ம‌ குடும்ப‌த்து ஆவாத‌டா, போ போயிப் பேசு, அவிய‌ளுக்கும் வேன்டாம், ந‌ம்ம‌ளுக்கும் வேன்டாம் ஆளுக்கொரு செண்டா பிரிச்சிக்கிட்டாப் போவுது"ன்னாரு. காட்டையே திட்ட‌ந்தீட்டிப் புடிக்க‌த் தெரிஞ்ச‌ அய்ய‌ம் ம‌வ‌னுக்கு இதுல‌போயி தெண்ட‌பானிக்கு உட்டுத்த‌ர‌ முடியுமா என்ன‌?&lt;br /&gt;"நீங்க‌ வாய‌ மூடிக்கிட்டு இருங்க, எல்லா நாம் பாத்துக்குவேன், ஆட்ட‌ ஓட்டீட்டுப் போன‌மா வ‌ந்த‌மான்னு இல்லாம கேசுபோட்ட‌வ‌ங்கூட‌ப் போயி பேச‌ற‌து ப‌ண்ற‌துன்னு இருந்தீங்க‌ன்னா அவ‌ன் ஊட்டுல‌யே சோறும் வாங்கித் தின்னுட்டுப் ப‌டுத்துக்குங்க, காளி ஒறவு கருது பகையா? நான் எதுக்கு உங்க‌ளுக்கு?" ன்னு பெத்த‌ பைய‌ங்கிட்ட‌யும் வாங்கிக் க‌ட்டிக்கிட்டாரு அய்ய‌ன். இந்த‌க் "காளி ஒற‌வு க‌ருது ப‌கையா?" ன்னா ஒரு சோள‌த் த‌ட்டுத் தாவ‌ர‌த்துல‌ அடிப்ப‌குதி ஒற‌வு மேல‌ இருக்க‌ற‌ க‌ருதுப் ப‌குதி ப‌கையான்னு அர்த்த‌ம். இங்க ஒரே ஊட்டுக்குள்ள‌ இன்னொருத்த‌ங்க‌ கூட‌ அப்ப‌ன் ஒற‌வு, ம‌க‌ன் ப‌கையா இருந்தா முடியுமான்னு அர்த்த‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னதை யாரும் கேக்கலைன்னாலும் அய்யனுக்கு பெருசா யார்மேலயும் வெட்டுறுப்போ, வஞ்சமோ இருந்த மாதிரித் தெரியலை. கேசுல மவன் செயிச்சோரனும்ங்கற அய்யக்கானம் இருந்தாலும் பாப்பாவுக்கு ஆக்காட்டிப் பாட்டுச் சொல்ல மனசில்லாமப் போகலை அவருக்கு. ஆனா அவளுக்கும் பதிமூணு வயசு ஆச்சே! ஊட்டுல கேசு கோர்ட்டுன்னு நடந்த பேச்சையெல்லாம் கேட்டவ அய்யங்கிட்டப் பேசறதை நிறுத்திக்கிட்டா. போகையில வரையில அய்யனப் பாத்தா வேற தடத்துல நடந்து போய்ட்டா. "காளி ஒறவு கருது பகையா?" ங்கறதை அய்யனை மாதிரிக் காளிகளுக்கு ஏத்துக்க முடியலைன்னாலும் பாப்பா மாதிரிக் கருதுகளுக்கு எதோ புரியுது அதுல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேசு நடந்து எதிர்பார்த்தமாதிரியே தெண்டபாணி தோத்துத்தாம் போனாரு. வருசக்கணக்கா நடந்த கேசுல‌ அய்யனுக்கு நடை தளந்து காட்டுக்கு வாரதெல்லாம் மாறிக் கெடைல படுத்துட்டாரு. கேசுல தோத்தாலும் அய்யன் செத்ததுக்கு எழவுக்குப் போனாரு தெண்டபாணி. என்ன பேச்சுவார்த்தை இல்லைன்னாலும் நல்லதுக்கு(கல்யாணத்துக்கு) போகாட்டியும் கெட்டதுக்கு(எழவுக்கு) போகோணுங்கறது நம்ம சனத்தோட பண்பாடா இருந்தாலும் பண்பாட்டுக்காக இல்லாம பெத்த தகப்பனாட்ட வந்து புத்தி சொன்ன அய்யன் மொகத்தைக் கடைசியா ஒருதடவை பாத்துக்கலாம்னுகூடப் போயிருக்கலாம் தெண்டபாணி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-5031155555673793468?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/5031155555673793468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=5031155555673793468' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/5031155555673793468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/5031155555673793468'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/09/4.html' title='காளி ஒறவு கருது பகையா?.......அய்யங்கதை 4'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-6405929406507606988</id><published>2009-08-31T23:43:00.003-05:00</published><updated>2009-08-31T23:53:38.930-05:00</updated><title type='text'>காதல் அறிவித்தல்</title><content type='html'>&lt;a href="http://www.ucsbalum.com/Coastlines/2008/Spring/images/love_brain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 303px;" src="http://www.ucsbalum.com/Coastlines/2008/Spring/images/love_brain.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தானே பின்னிய வலைக்குள்&lt;br /&gt;வெளிவருதலறியாது சிக்குண்டபோதும் &lt;br /&gt;அது தவம் நோற்பதாய்ச் சொல்லப்பட்டது சிலந்தி&lt;br /&gt;நெடுநேர‌மாய் ந‌ட‌ந்துகொண்டிருக்கும்&lt;br /&gt;பாலைவ‌ன‌த்துப் ப‌ய‌ணிக்குச்&lt;br /&gt;ச‌ப்பாத்திக்க‌ள்ளியின் இலைக‌ளில்&lt;br /&gt;தேங்கியிருக்கிற‌து அவ‌னேய‌றிந்திராத‌&lt;br /&gt;அவ‌ன் தாக‌த்திற்கான‌ நீர்&lt;br /&gt;ஊதுப‌த்தி ம‌ண‌மும், ச‌ம்ப‌ங்கி வாச‌னையும்&lt;br /&gt;ஒரு சிறுவிள‌க்கின் வெளிச்ச‌மும் &lt;br /&gt;ப‌ர‌வும் ப‌ர‌ப்புக்குக் கீழே&lt;br /&gt;ஒரு ம‌னுச‌னோ ம‌னுசியோ&lt;br /&gt;புதைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வும்கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இதையெல்லாம் நினைத்துக்கொள்வ‌த‌ற்கு&lt;br /&gt;பெரிதான‌ கார‌ண‌ங்க‌ள் வேறொன்றுமில்லை&lt;br /&gt;அவ‌னும் அவ‌ளும் காத‌லிக்க‌த் தொட‌ங்குவ‌தாக அறிவித்திருப்ப‌த‌ன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-6405929406507606988?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/6405929406507606988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=6405929406507606988' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6405929406507606988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6405929406507606988'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/08/blog-post_31.html' title='காதல் அறிவித்தல்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8095113799702549749</id><published>2009-08-27T01:13:00.001-05:00</published><updated>2009-08-27T01:20:27.955-05:00</updated><title type='text'>வாழும் கலை</title><content type='html'>&lt;a href="http://www.goldiproductions.com/images/cansite/art/morrisseau_mcmichael24.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 399px;" src="http://www.goldiproductions.com/images/cansite/art/morrisseau_mcmichael24.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் மடியில் கட்டிவைத்திருந்த காற்று&lt;br /&gt;அவிழ்ந்து சுழன்றதில்&lt;br /&gt;பூமி நின்று சூரியன் சுற்றத் தொடங்குகிறது&lt;br /&gt;அந்த ராத்திரியின் ரகசியங்கள் பீறிட்டுத் தெளித்த‌&lt;br /&gt;பயத்தில் நனைந்துகொன்டிருக்கிறது &lt;br /&gt;அவ்விஞ்ஞானியின் டைரி&lt;br /&gt;எல்லாம் க‌லைந்துகிட‌க்கும் அந்த‌ இட‌ம்தான்&lt;br /&gt;தான் ச‌னித்த‌ இட‌ம் என்கிறான் ஹிட்ல‌ர்&lt;br /&gt;சூட்சுமம் புரியாத வெளியொன்றில்&lt;br /&gt;பசியால் தவித்த கர்ப்பிணி&lt;br /&gt;பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8095113799702549749?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8095113799702549749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8095113799702549749' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8095113799702549749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8095113799702549749'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/08/blog-post_27.html' title='வாழும் கலை'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-6965958230918642667</id><published>2009-08-20T00:21:00.003-05:00</published><updated>2009-08-20T01:27:03.263-05:00</updated><title type='text'>கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?.......அய்யங் கதை 3</title><content type='html'>&lt;a href="http://www.spraguephoto.com/stock/images/9000_9499/9126%20Farming%20India%2070-year-old%20Tangaya%20digging%20irrigation%20ditches%20on%20his%20land%20near%20Nagercoil%20Tamil%20Nadu%20India%20%0D%0A.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 460px; height: 297px;" src="http://www.spraguephoto.com/stock/images/9000_9499/9126%20Farming%20India%2070-year-old%20Tangaya%20digging%20irrigation%20ditches%20on%20his%20land%20near%20Nagercoil%20Tamil%20Nadu%20India%20%0D%0A.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்யங் கதை எழுத ஆரம்பிச்சதில இருந்து நெறையா இல்லைன்னாலும் கொஞ்சமாவது நம்மூருப் பக்கத்துச் சொலவடைகள் மூளைல எங்கயோ ஒரு ஆழத்துல இருந்து வெளிய வரத்தான் செய்யுது. இன்னிக்கு நெனச்சுக்கிட்டது "கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா? ங்கற  பழமை ஒன்னப் பத்தி. அது வேற ஒன்னுமில்ல, உங்களுக்கொரு நல்லதுன்னாலோ, கெட்டதுன்னாலோ ஆனந்த உணர்ச்சி அல்லது கவலை உணர்ச்சியில தண்ணி உடறது எதுன்னு பாத்தாக் கண்ணு தான? அதுக்குக் கொஞ்சந்தே மேல இருந்தாலுமே புருவத்துக்கு என்ன உணர்ச்சி இருக்கப்போவது? உங்கமேல உசிர வெச்சிருக்கற ஒறவுக கண்ணு மாதிரி, மத்ததெல்லாம் புருவம்போலத்தான்னு வைங்க. உங்களுக்கு ஒன்னச் செய்யறதுல கண்ணை அடிச்சுக்க முடியாது புருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம பேப்பி கல்யாணமாகிப் புருசனுடைய‌ அம்மாயாத்தாவ‌ப் பாத்துட்டுப் பொண்ணும் மாப்பளையுமா தன்னோட அம்மாயாத்தாலையும் பாக்கப் போனா. அப்பிடிப் போய்ட்டு வந்தன்னைக்கு இந்தப் பழமைய நெனச்சுக்கிட்டா "கண்ணுல பட்டாக் கரிக்குமா புருவத்துல பட்டாக் கரிக்குமா?" ன்னு. பேப்பின்ன ஒடனே அதே பேபி அதுக்கு ஒரு கல்யாணம்ங்கறா, ஒருவேளை வெளையாட்டுக் கல்யாணம்னு நெனச்சிக்காதீங்க. பசங்களுக்கு "ராசு" மாதிரி நம்ம பக்கத்துல பொட்டப் புள்ளைகளுக்குச் செல்லப் பேருதான் இந்த "பேப்பி" கொழந்தையா இருந்தப்பச் செல்லமா நம்மாத்தா எல்லாம் இப்படி இங்கிலீசுல கூப்பட ஆரம்பிச்சுப் பல புள்ளைகளுக்கு வெச்ச பேரு மறந்து இதே நெலச்சும் போயிரும். ஒரே ஊட்டுல ரெண்டு மூனு பொட்டப் புள்ளைக பொறந்தாலுங்கூட வஞ்சனை எதுவும் இல்லாம பெரிய பேப்பி, நடுப் பேப்பி, சின்னப் பேப்பி ன்னு அதே செல்ல வரிசைல கூப்புட்டுக்குவாங்க. அப்பிடிப் பாத்தா எங்கூருல இப்பக் கூட ஒரு அம்பது அம்பத்தஞ்சு வயசுலெல்லாம் "பேப்பி" மாருக இருக்கறாங்கன்னு வைங்க. இன்னிக்குக் கதையில வர்ற பேப்பிக்கு ஒரு 25 வயசுதான் ஆச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு ரெண்டு வயசா இருக்கறப்ப அவங்கம்மா தன்னோட தாய் தகப்பங்கிட்டத் தூக்கீட்டு வந்தவதான் அப்பறம் பேப்பி இங்கயேதான் வளந்தா. யாரும் அனுப்பலைன்னு சொல்லலை. பேப்பியோட அம்மாவுக்கு கட்டிக்கொடுத்த ஊட்டுல சோகிரீயம் (சௌகரியம்)இல்லை. சுமாரான எடத்துல இருந்து ஒசத்திக்குக் குடுத்தாங்க, கொஞ்ச நாள்ல பணக்காரத் திமிரக் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க "அது கொண்டாருலை, இது கொண்டாருலை உங்க அப்பன் ஊட்டுல இருந்து" ன்னு சொல்லிக்காட்டிக்கிட்டு. பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு பேப்பியோட அம்மாயாத்தா தன் மக கிட்டச் சொல்லீருச்சு "சரி, எசையிலன்னா வந்துரு" ன்னு. அப்பிடி வந்த பேப்பிக்கு நெனவு தெரியறதுக்கு முந்தியே அவளோட அப்பிச்சி "கிளிய வளத்துக் கொரங்கு கையில கொடுத்த மாதிரி மக பொழப்பு இப்பிடி ஆயிப்போச்சே!" ங்கற கவலையிலயே போய்ச் சேந்திருச்சு. கவலைன்னா சும்மா இல்லை, பக்கவாதமாட்ட வந்து பாக்காத ஆசுபத்திரி இல்லை, காட்டாத கைவைத்தியருக இல்லை, எல்லாம் பாத்தும் கெடையிலயே ஒரு வருசம் படுத்திருந்துட்டுக் கண்ணை மூடிருச்சு. பட்ட மரமா பிஞ்சத் தூக்கீட்டு வந்த மகளையும், கல்யாணமாகாத ரெண்டு பசகளையும், கெடையில கெடந்த அய்யனையும் பாத்துக்கிட்டு, அய்யனைப் பாக்க வந்த சனத்துக்கெல்லாம் சோறு தண்ணியும் ஆக்கிப் போட்டுக்கிட்டு கையில‌ இருந்த காசெல்லாம் தீந்து கடனும் வாங்கிக்கிட்டு ஆத்தா பட்ட சீராழுவுக்கு (சீரழிந்த வாழ்வு)அளவுமில்லை, மதியுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடிச் சீராழ்ஞ்சுமே கடைசில எல்லாம் ஆத்தா தலையில போட்டுட்டு அய்யன் எதையுங் கண்ணுல பாக்காமப் போயே போய்ட்டாரு. ஆத்தா பொம்பளைன்னாலும் படு சாமார்த்தியம். ஏன் பொம்பளைன்னா சாமார்த்தியம் இருக்கக் கூடாதுன்னு இருக்குதா? நம்மூருல இப்பிடித்தான் பேசிக்குவாங்க ஆத்தாவப் பாத்து. வேறென்ன ஆண்டாண்டு காலப் பழக்கந்தான். அய்யன எடுத்துக் குடுத்துட்டுப் பதனாறாவது நாள்லயே பொழைக்கற வழி சொல்லிக் குடுத்துது ஆத்தா பசங்களுக்கு. "இந்தாங்கடா உங்கய்யனே போனப்பறம் நாங் கழுத்துல போடாதது எங் கையில எதுக்குக் கெடக்குது? கொண்டுபோய் வித்துட்டு வந்து கெணத்த இன்னங் கொஞ்சம் ஆழமா வெட்டுங்கடா ஆளக் கூட்டியாந்து, தென்ன மரத்த உசிரு போகாமக் காப்பாத்தோனும், இல்லைன்னா கஞ்சிக்கும் வழியில்லாமப் போயிரும்" அப்பிடீன்னு தாலியக் கழட்டிக் குடுத்தனுப்புச்சு பசங்ககிட்ட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையில பேப்பியோட நின்ன மகளப் பாத்து "அழுதழுது பெத்தாலும் அவதாம் பெக்கோனுங்கற மாதிரி நம்ம பொழப்ப நாமளேதான் கரையேத்தனும், எதுக்கு அழுதுக்கிட்டுக் கெடக்கறே? வேணும்னு இருந்தா உம் புருசன் வந்து உன்னையும் புள்ளையும் கூட்டிக்கிட்டுப் போவான், இல்லைனா ரெண்டு பசங்களோட மூனாவதா நீயுங் காட்டுல பாடுபட்டு உம் புள்ளையும் வளத்து, உங்கப்பன் நம்மளுக்கெல்லாம் காட்டை வெச்சுட்டுத்தான செத்திருக்குது?" ன்னு தைரியம் சொன்னதும் ஆத்தாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எது நின்னாலும், நிக்காட்டியும் சூரியன் உதிக்கறதும், மறையறதும் நிக்கவா போகுது? அதுக்குப் பொறவு கையுங் காலும் மொளச்ச மாதிரி ஓடுன காலத்துக்கு ஈடுகுடுத்து ஆத்தா பொழப்பும் ஓடுச்சு. சும்மா சொல்லக் கூடாது மகனுக ரெண்டுபேரும்  ஊனக் குடுத்து, உசிரக் குடுத்து ராப்பகலாப் பாடுபட்டாங்க. மகளும் அப்பிடித்தான். பொற‌ந்தவன் ரெண்டு பேரும் காடாக் கெடந்த மண்ணை உழுது உழுது தோட்டமாக்குனாங்கன்னா மக ஆளுகளச் சேத்துக்கிட்டு வெறும் கல்லாக் கெடந்த குட்டைகள  போட்டது வெளையற பூமியாக்குனா.(தோட்டத்துக்குள்ள உத்திகளால சூழப்பட்ட ஒரு சிறு பரப்பளவக் குட்டைன்னு சொல்வாங்க, இது தண்ணி நிக்கற கொளம் அல்ல. ஆனா மழை கனமாப் பேஞ்சா இந்தக் குட்டைகள்லயும் தண்ணி தேங்கி நிக்கும். உத்தின்னா என்னன்னா கொஞ்சம் ஏரியாட்டமாப் போடப்பட்ட பெரிய வரப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் வேளைக்குச் சோறாக்கிப் போடறதும், ஆடு, மாடு, எருமைன்னு வாயில்லாச் சீவனுகளோட வயித்த நெறைக்கறதும் கூடவே பேப்பிக்கு வயிறு, மனசு ரெண்டையும் நெறைக்கறுதும் ஆத்தாதான். படிக்கர நேரம்போக மத்த எல்லா நேரத்துலயும் பேப்பி ஆத்தா பொறவாலதான் குட்டி போட்ட பூனையாட்டச் சுத்திக்கிட்டிருப்பா. அவசோட்டுப் புள்ளைக மேலகூட அவளுக்கு ஒரு பெரிய சினேகம் வளந்ததில்லை. ஏன்னா அவளுக்கு ஆத்தா எல்லாமாவும் இருந்தது. ஆத்தா சொல்ற கதையே பேப்பிக்கு இப்படித்தான் ஆரம்பிக்கும், "நீ நல்லா நடந்து பழகியிருந்தே, அப்பிச்சி அப்பத்தான் கெடையில உழுந்துது, எந்திரிச்சு நடக்க முடியாத அப்பிச்சிக்குப் பொவைல (புகையிலை) கொண்டுபோய் நாங்குடுக்கறதப் பாத்துக்கிட்டே இருந்துட்டு, நீயும் அதேமாதிரி எடுத்துக்கிட்டுப் போயி அப்பிச்சிகிட்ட ஆஆன்னு சொல்லி வாயில போட்டுட்டு வருவே, அப்பிச்சி செத்தப்பக்கூட எனக்கு அத்தன‌ அழுவாச்சி வல்ல‌, ஆனா அப்பிச்சி செத்த பொறவும் நெறையா நாளு நீ அதேமாதிரி அவியளப் படுக்க வெச்சிருந்த தெக்குவாசூட்டுக்குள்ள பொவையிலையக் கொண்டுக்கிட்டு போயி ஆஆன்னு சொல்லிக்கிட்டு இருப்பே, அதப் பாத்தாத்தான் எனக்கு கண்ணுல தண்ணி நிக்காது, என்ன பண்றது உங்கிட்டப் பொவையிலை வாங்கிப் போட்டுக்கறதுக்கு இன்னங் கொஞ்ச நாளைக்கு உங்கப்பிச்சிக்குக் குடுத்து வெக்கல" அப்பிடீன்னு ஆத்தா எப்ப்டியும் பேப்பிகிட்ட அவ சின்னப் புள்ளையா இருந்த காலத்துல ஏன் அவ காலேஜு போர வரைக்குமே மாசத்துல ஒருக்காச் சொல்லீரும். ஒரு பத்துப் பதனஞ்சு வயசுவரைக்கும் ஆத்தா சொல்லிக்கிட்டு அழுதுதுன்னா கூடவே பேப்பியும் அழுதுருவா.அப்பிச்சிங்கற ஒறவு அப்பிடி உழுந்ததுதான் பேப்பி நெஞ்சுக்குள்ள, வெற ஒன்னும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஆத்தாங்கறது பேப்பிக்கு ஒரு தோழி ஒறவு மாதிரி சொகமானது. அப்பவெல்லாம் ஊருகள்ல குமினி ன்னு ஒன்னு இருக்கும். பாக்கறதுக்கு வெள்ளைச் சோளத்தைவிடக் கொஞ்சம் பெருசா பளபளன்னு மேல ஒரு கறுப்பு நெற வட்டமும், கீழ்ப் பகுதி பெருசா செவப்பு நெறத்துலயும் இருக்கும். காடு தோட்டத்துல வேலிகள்ல படந்து கெடக்குற கொடி ஒன்னுல புடுச்சிருக்கற காய்ல இருந்து கெடைக்கும் இது. மழை கிழை பேஞ்சு நல்ல செழுசெழுப்பமா இருக்கற காலத்துல நெறையா வரும். காய் காஞ்சு வெடிச்சு அதுக்குள்ள இருக்கற குமினியெல்லாம் வேலியோரத்துல கீழ உழுந்தும் கெடக்கும். பாக்கறதுக்கு அழகான இந்தக் குமினிகளைப் பொறுக்கிச் சேத்தி வைக்கறதுல பேப்பிக்கு ரொம்ப இஷ்டம். அவளோட அம்மாக்காரிதான் சத்தம் போட்டுக்கிட்டே கெடப்பா. குமினிய அரைச்சுக் குடிச்சா செத்துப் போயரோனும்னோ என்னமோ கதையிருந்துதுன்னு நெனைக்கறேன். பேப்பிகிட்ட அதைத் தூக்கிப் போடச் சொல்லிக் கிட்டே இருப்பா.ஆனா ஆத்தா "வாயில மட்டும் போட்றாத மொட்டுக் குட்டி, வெளையாடீட்டுத் தொட்டில(தேங்காத் தொட்டி) போட்டு வெச்சிரு" ன்னு சொல்லும்.பேப்பிகூடச் சேந்து சின்னப் புள்ளையாட்டமா அதும் குமினி பொறுக்கிப் பேத்திக்குக் குடுக்கும். பேப்பிக்கு தன்னோட அம்மா எதிரியானதும், ஆத்தா தோழியானதும் இப்படித்தான்னு வைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லாம பக்கத்தால டவுனுல எதோ சர்க்கஸ் ஓடுதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்கன்னா சின்னப் புள்ளையான பேப்பிக்குப் போக ஆசையா இருக்கும். போனா ஆனை, சிங்கமெல்லாம் பாக்கலாம்னு. பின்ன மிருகக்காட்சி சாலைக்கெல்லாமா கூட்டிக்கிட்டுப் போகப்போறாங்க அவளை? ஆனா பேப்பியோட அம்மா ஊருக்குள்ள சில குடும்பங்களோட சேந்துக்கிட்டு சர்க்கஸ் பாக்கப் போனாலும் ராத்திரில பேப்பி தூங்குன பொறவு கெளம்பிப் போயிரும். அம்மாவுக்குப் புள்ளை தூக்கத்த கெடுக்கக் கூடாதுன்னு. ஆனா மவளுக்கு "அம்மா ஏன் இப்படி ஏமாத்தறா? ன்னு. ஆனை, சிங்கம் பாக்க முடியாத வெசனத்தை பேப்பி ஆத்தாகூடக் காட்டுக்குள்ள சுத்தி மொசலு (முயல்) அழகுவண்ணாங்குருவி(அழகுவண்ணக் குருவி), நாய், நரியெல்லாம் பாத்து ஆத்திக்குவா. இதையெல்லாம்விட மழைபேஞ்ச காத்தால ஆத்தாகூடக் கேளாம் புடுங்கப் போறது (காளான்) பேப்பிக்கு உலக மகா சந்தோசம். கொடை கொடையா விரிஞ்ச கேளான், மொட்டு மொட்டுக் கேளான் எல்லாங் கொண்டாந்து தண்ணிய ஊத்திக் கழுவீட்டு உப்பு, மொளவடியோட‌ பெரிய வாக்கணக் கரண்டியில போட்டு எண்ணெய நெறையா ஊத்தி வறுத்துக் குடுக்கும்பாரு ஆத்தா, பேப்பிய அன்னைக்குக் கையிலயே புடிக்க முடியாது. வறுத்த கேளானுல இருந்து வடிஞ்சு போற எண்ணையையுங்கூடச் சொட்டுச் சொட்டாத் தொட்டு நக்கீட்டு மறுபடியும் மழை வராதான்னு பாத்துக்கிட்டிருப்பா பேப்பி. வேற எதுக்கு? அப்பறமும் ஆத்தாகூடக் கேளாம் புடுங்கப் போறதுக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் திங்கற விசயத்தோட பேப்பிக்கு ஆத்தாவோட வேலை முடியாது. அதுக்குத் தகுந்தளவு அறிவையும் ஊட்டுச்சு. புஸ்தகம் பாத்துப் படிச்சுக் காட்டி, வெரலப் புடுச்சு எழுதியுட்டாத்தான் படிப்புச் சொல்லிக்குடுக்கறதா என்ன? வாயில சொல்லியே மூளைய வேலைவாங்கும் ஆத்தா. அப்பப்ப விடுகதை சொல்லும். பேப்பியோட மாமனுக ரெண்டுபேரும் பாடுபட்டுட்டு வந்துட்டு ரேடியோவுல சலுப்புத்தீரப் பொழுதோட பாட்டுக் கீட்டு கேட்டுகிட்டு இருப்பாங்க. பேபியோட அம்மாவுக்குச் சட்டிபானை வேலை சரியா இருக்கும். ஆத்தா வெளிவாசல்ல குளுகுளுன்னு காத்து வருதுன்னு கட்டலப் போட்டுப் படுத்திருக்கும். அம்மாவுக்குப் பயுந்துக்கிட்டு தூங்கப் போரவளாட்ட நடிச்சிட்டு பேப்பி அழுங்காம வெளிவாசலுக்கு ஆத்தாகிட்டப் போயிருவா. நெலாவும் இருந்ததுன்னா அன்னைக்குக் கேக்கவே வேண்டாம். பேப்பியோட பெரியப்பிச்சி ஊட்டுப் பேரனுகளும் ஆத்தாகிட்ட வந்துருவாங்க. ஆரம்பிக்கும் ஆத்தாவோட விடுகதை வகுப்பு. பேத்தியும், பேரனுகளுமா தமிழ்ப் புசஸ்தவுத்துல படிச்ச "பச்சை நிறமா இருக்கும், பால் வடிந்துகொண்டிருக்கும்" னு  எதோ தமக்குத் தெரிஞ்சதை எடுத்து ஆத்தாகிட்ட உடுவாங்க. எந்தப் படிப்பு வாசனையும் இல்லாட்டியும் எல்லாத்தையும் சுலபமாக் கண்டுபுடிச்சிரும் ஆத்தா. அப்பறமா அதோட மொறை வந்தா படுத்துக்கிட்டு இருந்தது எந்திரிச்சுக் குடுமைய நீவி நல்லாப் போட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே சொல்லுங்க பாக்கலாம்? "சலசலங்குது ஒரு குருவி, சங்கிலி போடுது ஒரு குருவி, கொத்திக் குடுக்குது ஒரு குருவி, கொறிச்சுத் திங்குது ஒரு குருவி" இதே என்னோட கதை, விடுவியுங்க பாக்கலாம்?" னு கேக்கற ஆத்தாதான் பதிலையும் சொல்லவேண்டி வரும் சில நேரங்கள்ல. "எண்ணெய் சலசலன்னு கொதிக்கும், சங்கிலியாட்டச் சுத்திப் புழியுவோம். ஒரு கைல எடுத்து வாய்க்குக் குடுப்போம், பல்லு கொறிச்சுக் கொறிச்சுத் திங்கும், முறுக்குத்தான் அது" ஆத்தா விளக்கத்தோட சொல்லும். "ஊளை மூக்காஞ் சந்தைக்குப் போறான் அது நொங்கு", "கெண‌த்து நெறையாத் தண்ணி இருக்குது, குருவி குடிக்கத் தண்ணியில்லை அது எளநீ (இளநீர்),"  "எத்தனை அடி போட்டாலும் ஒரு சொட்டுக் கண்ணீரு உடமாட்டா அது ஒல்லு(ஒரலு)" இப்படி ஆத்தா சொல்ர விடுகதைக்குப் பேப்பி எப்பவுமே ரசிகையாப் போனா. வளரவளர எல்லாமுக்குமே விடை சொல்லவும் பழகீட்டா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேப்பிய கடைசிவரைக்கும் ஆத்தாதான் வளத்துச்சு. அவ பெரியவளானபோதுங்கூட ஊருக்குள்ள எல்லாரும் "மாமனுக ஒருத்தனக்கே கட்டி வெச்சிருங்க  உங்களுக்கும் பேத்தியே மருமவளா வந்தாக் கொறை இருக்காது"ன்னு சொன்னாங்க‌.ஆத்தாவுக்குக் கோவம் வந்து "எல்லா பேசறீங்க பாரு நாயம்! பெத்த புள்ளையாட்ட வளத்தீட்டு அவனுக எப்பிடிக் கட்டிக்குவாங்க? வேற நல்ல நாயம் இருந்தாப் பேசுங்க" ன்னு வார்த்தை பேசியுட்டுருச்சு.&lt;br /&gt;பேப்பியோட மாமனுகளுக்கும் கல்யாணம் நடந்துது. அத்தைமாருக வந்தகையோட பண்ணையம் பாச்சல் எல்லாம் பங்குபோட்டுப் பிரிச்சாச்சு. இத்தனை நாளும் ஒன்னும்பின்னா இருந்தது போதும், இனி நங்கை கொழுந்திக்குள்ள எதுக்கு இருக்கோணும்னு காலேசுல சேந்த பேப்பியக் கூட்டிக்கிட்டு மகளும் தனியாப் போய்ட்டா. "நானும் அம்மாளும் மட்டுந்தான இருக்கப்போறோம்? நீங்க வந்து எங்ககூட இருங்காத்தா" ன்னு கூப்பிட்டா பேத்தி. ஆனா மருமவளுகளுக்குக் கெட்ட பேரு வரும்னு ஆத்தா வரலை. அப்பப்ப மருமகளுக மேல குத்தங் குறை சொன்னாலும் மகனுகள உட்டு நகராது. பேப்பிய வளத்துன மாதிரி மகனுக பேத்திகளையும் வளத்துச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;படிச்சு ஒரு வேலையும் கெடைச்சு பேப்பி தலைதூக்கினபொறகு மாமங்காரங்க அவளுக்கு மாப்பளை பாக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பேப்பி அவ தொணைய அவளே தேடிக்கிட்டா. பெரியவங்களே  பண்ணி வைங்கன்னு கேட்டப்ப சின்ன மாமன் "சொத்து ஒன்னுமே பெருசா இல்லையாட்ட இருக்குது, அங்க கட்டிக்குடுத்து என்ன பண்றது?" ன்னாரு. "ஏன்டா உங்களுக்கெல்லாம் ஒரு குடி கெட்டுங்கூடப் புத்தி வராதா? இன்னமு ஏன்டா சொத்து சொத்துனு அலையறீங்க? நம்ம புள்ளைய மனங் கோணாமப் பாத்துக்குவாங்களான்னு மட்டும் பாருங்க" ஆத்தா ஒரு ஏறு ஏறுன பொறவு பேப்பி கல்யாணம் நல்லாவே நடந்துது. &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆகி ஒரு மாசம் போயிருக்கும். ரெண்டுபேரும் ஊருப்பக்கம் போய்ட்டு அம்மாயாத்தாக்களையும் பாத்துட்டு வரலாம்னு போயிருந்தாங்க. பேப்பி புருசனோட அம்மாயாத்தா வாஞ்சையாத்தான் பேசுச்சு. ஆனாலுங்கூட பேப்பிக்கு என்ன வேணும்னு கேட்டதைவிட "எனக்கு அந்தத் தயிரக் கொஞ்சம் சூடு பண்ணிக்குடாத்தா, அப்பிடியே ஊத்திக்கிட்டா சளி புடுச்சுக்கும், காப்பியில எனக்குப் பாலு இன்னங் கொஞ்சம் ஊத்தோனுமாத்தா, கரையேன்னு (கருப்பா) கெடக்குது காபி, பால் பத்தலை" னு பேப்பிகிட்டத்தான் நெறையா வேலை வாங்கீட்டு இருந்துது. பையன் மூலமா எந்தப் பொண்ணு ஊட்டுக்கு வந்தாலும் அது மருமவளா இருந்தாலுஞ்சரி, பேரம் பொண்டாட்டிகளா இருந்தாலுஞ்சரி அவங்களைக் கொஞ்சம் ஏவி வேலை வாங்கற தோரணை நம்ம ஆத்தாக்களுக்கும் இருக்கத்தான் செய்யுதுனு வைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறமா பேப்பியோட ஆத்தாவையும் பாக்கப் போனாங்க. வருவாங்கன்னு தெரிஞ்சு வாசல்லயே உக்காந்துக்கிட்டு இருந்துது ஆத்தா. பைக்க உட்டு எறங்குனதீமு பேத்தியப் பாத்துக் கேட்ட கேள்வி, "ஏத்தா மத்தியானமே வருவீங்கனு பாத்துக்கிட்டு இருந்தேன், அத்தையச் சாப்பாட்டுக்கு வடைபாயாசங்கூட வெக்கச் சொல்லீருந்தேன், இன்னாரமாயிப்போச்சா?"  "ஆமாங்காத்தா லேட்டாயிருச்சு"னு சொல்லீட்டு உள்ள போயி எல்லாருகிட்டயும் பேசிக்கிட்டிருந்தாங்க. ஆத்தா மட்டும் எங்கயோ எந்திரிச்சுப் போச்சு. போயிட்டு வரும்போது ரெண்டு சின்னச் சின்னத் தட்டத்துல என்னத்தையோ எடுத்துக்கிட்டு வந்து பேப்பிகிட்டக் குடுத்துது. பாத்தாக் கேளான் வறுவல். புருசங்கிட்ட ஒன்னக் குடுத்துட்டு நெஞ்சு முழுக்கா ஈரத்தோட அதைச் சாப்பிட்டா அவ. ஆத்தாவோட சின்ன மவன் கேட்டாரு, "இதை எப்பம்மா புடுங்கியாந்து வறுத்து எங்கயம்மா வெச்சிருந்தே? மத்தியானம் சாப்புடும்போது எங்கண்ணுலக் கூடத் தட்டுப்படலியே?".  "இப்பவெல்லாம் மின்னையாட்ட (முன்புபோல)எங்கீடா மொளைக்குது? அந்த ஒத்தப் பனைமரத்துக்கிட்ட ரெண்டே கேளாந்தாங் கெடச்சுது. பேப்பிவாரான்னு வெச்சிருந்தேன், காட்டுனா உனக்கு நாக்கடங்காது, புள்ளைக்கிருக்காது. நாளைக்கு எங்கயாவது புடுங்கீட்டு வா தின்னாப் போவுது" மவன் வாயை ஒரே அடக்கா அடக்கீருச்சு ஆத்தா. புருசங்கார ஆத்தாவையும், தன்னோட ஆத்தாவையும் மனசுக்குள்ள வெச்சுப் பாத்து "கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?" ன்னு நெனச்சுக்கிட்டா பேப்பி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-6965958230918642667?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/6965958230918642667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=6965958230918642667' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6965958230918642667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6965958230918642667'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/08/3.html' title='கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?.......அய்யங் கதை 3'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-2476961312176449717</id><published>2009-08-16T23:58:00.004-05:00</published><updated>2009-08-17T00:12:24.583-05:00</updated><title type='text'>நேற்றும் இன்றும்</title><content type='html'>&lt;a href="http://www.babaluart.com/show-image/803991/Babalu%27-Art/Bird-on-a-tree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 452px;" src="http://www.babaluart.com/show-image/803991/Babalu%27-Art/Bird-on-a-tree.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுவரைகூட அது அங்குதான் இருந்தது&lt;br /&gt;தடித்த பருமனை உடலாகக் கொண்டு &lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய் &lt;br /&gt;&lt;br /&gt;உண்ட உணவும்&lt;br /&gt;செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்கு&lt;br /&gt;கணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த &lt;br /&gt;பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டி&lt;br /&gt;துருத்தி நீண்டன &lt;br /&gt;அதன் வேர்கள் மண்ணுக்குமேலும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலைபார்த்துக்கொண்டே &lt;br /&gt;தளிராக நடந்த குழந்தைக்கால்களை &lt;br /&gt;அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன &lt;br /&gt;குடையாக விரிந்திருந்த கிளைகளில் &lt;br /&gt;உயிரினம் எதுவும் அண்டவுமில்லை &lt;br /&gt;கிளை‌களின் அந்த அடர்ந்த இருளுக்குள் &lt;br /&gt;உயிர்குடிக்கும் பெரும்பேயொன்று &lt;br /&gt;உலவுவதாகவும் கதைகள் இருந்தன &lt;br /&gt;பூக்கவும் தெரியாத மரமதில் &lt;br /&gt;சிரிக்காத மனிதர்களின் சித்திரங்களே தெரிந்தன &lt;br /&gt;ஆள‌ரவமற்ற பொழுதின் துணைகளில்&lt;br /&gt;அனாதைத் தவளைகளைத் துரத்திச்சேர்த்து&lt;br /&gt;கருநாகங்கள்  உண்டுமுடிக்கவும் &lt;br /&gt;கவலைகளின்றி நிழல் தந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகச் சுயம்தரித்த‌ மரம்தான்&lt;br /&gt;அவை போகையில் வ‌ருகையில் பார்த்துக்கொண்டிருந்து&lt;br /&gt;புத்தம்புதிய பறவையும் ஆனது&lt;br /&gt;இதனினும் உள்ள வசதிகள் கருதி&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்&lt;br /&gt;பறவை வேடங்களில்&lt;br /&gt;மரத்தின் பாடல்களை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-2476961312176449717?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/2476961312176449717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=2476961312176449717' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2476961312176449717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2476961312176449717'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/08/blog-post.html' title='நேற்றும் இன்றும்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-893254204547677110</id><published>2009-08-07T01:09:00.003-05:00</published><updated>2009-08-07T01:26:25.800-05:00</updated><title type='text'>காடு வாவாங்குது, ஊடு போபோங்குது.......அய்யன் க‌தை 2</title><content type='html'>&lt;a href="http://www.earthisland.org/journal/images/Spring2008/IndiaFarmerLarge_opt.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 421px;" src="http://www.earthisland.org/journal/images/Spring2008/IndiaFarmerLarge_opt.jpeg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சாலை" ன்னு பொதுவாச் சொன்னா நாம அதை என்னம்போம்? "தெரு", "வீதி", "ரோடு" இதுல எதோ ஒன்னு. ஆனா நம்மூருல "சாலை" ங்கற சொல் தோட்டங் காடுகள்ல மண்சுவரு இல்லன்னா அதுகூட இல்லாம நாலு பனந்தப்பைய வெச்சு முட்டுக் கொடுத்து மேல்கூரைக்கு ஓலை போட்டு வேஞ்சிருக்கற ஒரு தங்குமிடத்தைக் குறிக்கும். காடே வேலையாப் போன சனத்துக்கு ஊருக்குள்ள ஒரு ஓட்டு ஊடு இருக்குமின்னாலும் மண்ணுலயே மனசையும், உசிரையும் வெச்சுப் பாடுபடற பகல்பொழுது பூராவும் சித்த தலையச் சாச்சுக்க, சோறு, தண்ணி உங்க இந்தச் "சாலை" தான் கதி. ராத்திரிக்குங்கூடத் தண்ணி பாச்ச, தட்டுப் புடுங்க, மாடோ, எருமையோ கன்னுப்போடறதுன்னு சிலசமயம் இங்கயே இருந்துடறதுதான் அவங்க பொழப்பு. இன்னுஞ்சிலபேருக்கு ஊடுங்கறதே சாலை மட்டுமாக்கூடப் போறதும் உண்டு. பாம்பு, பூரான், தேளுன்னு சகல சந்துக்களும் சாலையில இவங்ககூட‌ ஒன்னாப் படுத்து உசிருக்கே ஒலைவெக்கிற‌ கதைகளும் &lt;br /&gt;நடக்கறதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் "சாலை"க் கதையை எதுக்குச் சொல்றன்னா, அந்தப் பகுதி ஊருகள்ல "மாரிமுத்து சாலைக்கு எப்படிப் போறதுங்க?" ன்னு புதுசா வார ஏவாரிகீது(வியாபாரி) யாராச்சும் கேட்டா "இப்படியே இந்த இட்டாலில (இட்டேரி) போனீங்கன்னா கொரங்காடு ஒன்னு வரும்ங்க, அதத்தாண்டுனா ஒரு பெரிய வேலாமரமொன்னு வரும், ஆடு அங்க நின்னுதுன்னா அய்யன் ஒருத்தரு நிப்பாரு, அவரக் கேளுங்க சாலையக் காட்டுவாரு, அவரு மகந்தானுங்க மாரிமுத்து" ன்னு வழி காட்டுவாங்க. இப்படி வேலாமரம், வேப்பமரம்னு அங்கங்க சிலதுக்கு "அடையாளங்களா" "முகவரிகளா" மாறிப் போறதத் தவிர பெரிசா ஒன்னுமில்லாதவங்கதான் "அய்யன்கள்". ஒன்னுமில்லைன்னு நான் சொல்றது குடும்பத்துல "அதிகாரம்", "உரிமை" "வசதி" ன்னு ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்ப‌றம் அவங்க எதையும் சுமக்கறதில்லை. எல்லாத்தையும் பசங்க கையில ஒப்படைச்சுட்டு, எடுபடற வரைக்கும் மக்களுக்கு ஒத்தாசையா சின்னச் சின்ன வேலைகள் செஞ்சிக்கிட்டுக் காலத்தை ஓட்டறதுதான். சில அய்யன்கள் ரோசங்கொறையாம "அவங்கிட்டென்ன நாங் கேக்கறது?" ன்னு மவனுக்கே எல்லாங் கொடுக்காமத் தனியா இத்தனவலக்(இத்துனூண்டு அகல) காட்டை வெச்சுக்கிட்டுப் பாடுபட்டுக்கிட்டிருக்கறதும் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம மேக்காலூட்டு அய்யனுக்கு அப்படி ரோசமெல்லாம் இல்லை. ரெண்டு மகளுகளையும் தன்னால முடிஞ்சதை செஞ்சு கரையேத்துனப்புறம் மண்ணை மவனுக்குக் கொடுத்துட்டுக் கூடவே இருந்துக்கிட்டாரு. மாமியார்க்காரியும் போய்ச்சேந்த பொறவு மருமவ அய்யனுக்கு அட்டாலி வள‌த்திக்கு மரியாதை குடுக்கறதில்லைன்னாலும், "த்தூ" ன்னு தூக்கி எறியறதில்லை. பேரன் பெருசானதுல இருந்து அய்யனுக்கு அவந்தான் பேச்சுத்தொணை, மத்தவங்களுக்கெல்லாம் அவங்கவங்க சோலி அந்த ஊட்டுல. 'ராசு' தான் அய்யனோட பேரன். அவ‌னுக்கு வச்சது கொலதெய்வத்துப் பேருன்னாலும் கூப்படறது 'ராசு' தான். இந்தமாதிரி ஊடூட்டுக்கு ஒரு 'ராசு' வேற இருப்பாங்கன்னு வைங்க. கொங்குப் பக்கத்துக் கிராமங்கள்ல இந்த 'ராசுகள்' எப்படி வந்திருப்பாங்கன்னு யாருக்குந்தெரியாம சின்னவயசிலயே நான் ஆராய்ச்சி பண்ணிப் பாத்துட்டு இருந்தேன். "அரசனாட்டமா வாழுவான்னு ஆசப்பட்டுக்கிட்டு அரசனுக்கு இன்னொரு பேரான 'ராசா'வை வெச்சுக் கூப்படனும்னு நெனச்சசிருப்பாங்க. அதச் சரியாக் கூப்படக் கத்துக்கக்கூடக் கல்வி வாசனை கெடைக்கக் கொடுத்து வைக்காத நம்ம பாட்டனுக வாயில அது 'ராசு'வா மாறிப்போயிருக்கும்" அப்படீங்கறதுதான் என்னோட ஆராய்ச்சி முடிவு. சரி அது எதுக்கு இப்ப? ந‌ம‌க்கு இப்ப‌க் க‌தை மேக்காலூட்டு ராசும், அய்ய‌னும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராசு ப‌ள்ளிகொட‌த்துல‌ இருந்து வ‌ந்த‌தீமே அய்ய‌ங்கிட்ட‌த்தான் வ‌ருவான். ப‌ள்ளிக்கொட‌த்துல‌ யாருக்கும் யாருக்கும் ச‌ண்டை வ‌ந்த‌து, வாத்தியார் யாரை அடிச்சாரு, க‌டையில‌ என்ன‌ வாங்கித் தின்ன‌துன்னு சொல்ற‌துக்கு ராசுகிட்ட‌ நெறைய‌வே க‌தைக‌ இருக்கும். அய்ய‌னுக்கும் ஆடு குட்டி போட்ட‌துல‌ இருந்து, போட‌ற‌துக்குப் பொகையிலை தீந்து போன‌துவ‌ரைக்கும் ராசுக்குச் சொல்ற‌துக்கும் விச‌ய‌ம் இல்லாம‌ப் போவாது.&lt;br /&gt;&lt;br /&gt;ர‌வைச்(இரவு) சாப்பாடுகூட‌ ஊட்டுல‌ ஒன்னா உக்காந்து சாப்ப‌ட‌ற‌து அய்ய‌னும் ராசும்தான். நொங்கு வெட்டிக் கொடுக்கற‌து, எல‌ந்த‌ப் ப‌ழ‌ம் பொறுக்கி ம‌டியில‌ க‌ட்டி வெச்சிருந்து கொடுக்க‌ற‌து, எள‌நீர் சீவிக் கொடுக்க‌ற‌துன்னு ராசுக்கு அய்ய‌னோட‌ சேவையும், ப‌திலுக்கு அய்ய‌னுக்கு வெத்த‌லை எடுத்தாந்து குடுக்க‌ற‌து, முதுகு வ‌லிக்க‌ற‌ப்ப‌ மேல‌ ஏறி முதிக்க‌ற‌துன்னு ராசுவோட‌ சேவையும் ந‌ட‌க்கும். லீவுக்கு மகளுக ஊட்டுப் பேரனுக வந்தாலுங்கூட ராசு மவன் வயித்துப் பேரனுங்கற கூடுதல் பாசம் அய்யனுக்கு. எப்பவுமே ராசுவ உட்டுக்கொடுத்து ஒருவார்த்தை பேசாது அய்யன். பெரிய மக ஊட்டுப் பேரன் கொஞ்சம் மூத்தவன்ங்கறதால "இப்பிடியே ராசுவத் தூக்கித் தலைமேல வெச்சுக்கிட்டுருங்க நாங்க இனி இங்க வரவேயில்லை"ன்னு அய்ய‌னோட சமமில்லாத பாசத்தைக் குத்தஞ்சொன்னாலுங்கூட அவங்களுக்கு ஒரு கதைய எடுத்து உட்டுடும் அய்யன். "அந்தக்காலத்துல என்னை மாதிரி ஒரு அய்யந்தான் மகம் பேரனையும்,(மகன் வழிப் பேரன்)மகபேரனையும்(மகள்வழிப் பேரன்) தூக்கிக்கிட்டுக் காட்டுக்குப் போனாராமா, அப்ப மக பேரன் சொன்னானாமா 'அய்யா உங்க மாடு வருது' ன்னு,ஆனா  மகம்பேரன் சொன்னானாமா 'அய்யா நம்ம மாடு வருது' ன்னு. அது காலங்கலாமா அப்படியே ஆயிட்டுது" ன்னு சொல்லித் தன்னோட பக்கத்தை நிலைநாட்டீருவாரு அய்யன். கால‌ம் இப்ப‌டியேவா போகுது? எற‌க்கை மொள‌ச்ச‌ குஞ்சு கூட்டை உட்டுப் ப‌ற‌க்க‌ற‌ மாதிரி ராசுவுக்கு அடுத்த‌டுத்த‌ வ‌குப்புக்குப் போய் மேல்ப்ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் போகையில‌ சோட்டாளுக‌ சாவுகாச‌ம்,(சகவாசம்) சினிமா, பாட்டுன்னு ம‌ன‌சு மாற‌மாற‌ அய்ய‌ங்கூட‌ப் பேச்சுக் கொறைஞ்சுதான் போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ராசு அப்ப‌டி ஆயிட்டாலுங்கூட‌ அய்ய‌ன் ம‌ன‌சுல‌ ராசு எட‌ம் மாற‌வா போறான்? "எங்கூட்டு மைன‌ருக்கு இப்பெல்லாம் சோலி கூடிப்போச்சு, உக்காந்து பேச‌ நேர‌ம் எங்கிருக்குது" ன்னு வாரவ‌ங்க‌, போற‌வ‌ங்க‌கிட்ட‌ப் பெருமை பேசிக்குவாரு. ராசுக்கு அய்ய‌ன்கூட‌ ம‌ட்டுமா பேச்சுக் கொறைஞ்சு போச்சு? தாய் த‌க‌ப்ப‌ங்கூட‌வுமே அப்ப‌டியாக‌ற‌ வ‌ய‌சாப்போச்சு. ஊட்டு நெறையாச் ச‌ன‌ம் இருந்தாலுமே மீசை வர்ற‌ வ‌ய‌சுல‌ ப‌ச‌ங்க‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ மாதிரி ஒட்டாம‌த் திரிய‌ற‌தாச்சு. பெத்த‌ அப்ப‌னும், அம்மாலுங்கூட‌ அதுக்கேத்த‌ அனுச‌ர‌ணையாவா எல்லா ஊட்டுல‌யும் இருந்துட‌றாங்க‌? எங்க‌ கெட்டுப் போயிருவானோன்னு க‌ண்ணுக்குத் தெரியாத‌ க‌டிவாள‌மும் கையுமா ப‌ச‌ங்க‌கிட்ட‌ நிக்க‌ற‌தாச்சு. ராசு ஊட்டுல‌யும் அப்ப‌டித்தான்னு வைங்க‌. தாந்தாம் ப‌டிக்க‌லை, ம‌க‌னாவ‌து ப‌டிக்க‌ட்டும்னு மாட்ட‌ வித்துக் க‌ன்ன‌ வித்துப் பைய‌ன் ப‌டிப்புக்குச் செல‌வு ப‌ண்ண‌த் த‌யாரா இருந்தாலும் ப‌ய‌னோட‌ ரொம்ப‌க் க‌றாருதான் அப்ப‌ங்கார‌ன். அய்ய‌னுக்கு அப்ப‌டியாகுமா என்ன‌? ராசு மேல‌ அதோட‌ பாச‌ம் என்னைக்கும் வ‌த்தாக் கெண‌றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராசு எப்ப‌டியாவ‌து எஞ்சினீரிங் ப‌டிச்சாகோனும்னு ப‌ன்ன‌ண்டாவ‌து பெரிய‌ ப‌ரிச்சைக்கு வெடிய‌ வெடியாப் ப‌டிச்சுக்கிட்டு இருந்தான். எல்லாருந் தூங்குன‌ பொற‌வும் சின்னாசார‌த்துல‌ லைட்ட‌ப் போட்டுக்கிட்டு இரும்புச் சேர்ல‌ உக்காந்து ப‌டிச்சிட்டுக்கிட்டிருப்பான். அப்ப‌ன், அம்மாவெல்லாம் கைகால் அச‌ரிக்கையில‌ (சோர்வுல‌) ப‌டுத்தா எந்திரிக்க‌ மாட்டாங்க‌. வெளிவாச‌ல்ல‌ க‌ட்ட‌ல‌ப் போட்டுப் ப‌டுத்திருக்க‌ற‌ அய்ய‌ந்தான் ரெண்டு மூனு த‌ர‌க்கா ஒன்னுக்குப் போக‌ எந்திரிக்க‌ற‌மாதிரி எந்திரிச்சுட்டு உள்ள‌ எட்டிப் பாத்து "சாம‌ம் ஆகிப்போச்சாட்ட‌ இருக்குது ராசு, மீனே வந்துருச்சு (இது ஒரு குறிப்பிட்ட திசையில் தோன்றும் நட்சத்திரம்), தூங்கு போ, வெடிய‌க்கால‌ நேரமே எழுப்பி உட‌ற‌ம்போ, வெடியால படிச்சாத்தேன் மண்டையிலயும் ஏறும், சும்மாவா சொன்னாங்க பொழைக்கறவன் பொழுதோட தூங்குவான் கூறுகெடறவன் கோழிகோப்புடத் தூங்குவான்னு" இப்படியெல்லாம்  சொல்லிக்கிட்டிருப்பாரு. "அவ‌னெப்ப‌டியோ அவ‌ஞ்ச‌வுரீத்துக்குப் ப‌டிச்சிட்டுப் போறான், நீங்க‌ளுமா போய்ப் ப‌ரீச்சை எழுத‌றீங்க‌? போய்ப் ப‌டுங்க‌, சும்மா தொண்ணந்தொண்ணன்னு, தூங்கறவனயும் தூங்க உடாம‌" இது அய்ய‌னோட‌ ம‌வ‌ன். அய்ய‌ன‌ வார்த்த‌ பேச‌ற‌துக்க‌ள‌வா (திட்ட‌ற‌துக்கு) பெச்சீட்ட‌த் தொற‌ந்துட்டு மூடிக்குவாரு அய்யன் மவன். "சேரிச்சேரி கெழ‌வ‌ம் பேச்சு கிண்ணார‌க்கார‌னுக்கேறுமா?" ன்னு ராச‌ப்பாத்துச் சொல்லுவாரோ இல்லை த‌ன் ம‌வ‌னுக்குச் சொல்லுவாரோ சொல்லீட்டு அய்ய‌னும் போய்த் தூங்கீருவாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராசு எப்ப‌த் தூங்குவானோ தெரியாது, காலைல‌ எந்திரிக்க‌வே முடியாம‌ க‌ண்ணுல‌ ஒரே எரிச்ச‌லா இருக்கும். சுத்தீமு எல்லாரும் பேச‌ற‌து கேட்டாலும் உன்ன‌ஞ் சித்தே ப‌டுத்துக்க‌லாமுன்னு ப‌டுத்திருப்பான்.&lt;br /&gt;பொழுதோட‌ வ‌ராத க‌னிஞ்ச‌ சொல்லா அப்ப‌னுக்குக் காலைல‌ வ‌ர‌ப்போவ‌து? ம‌ன‌சுல‌ பாச‌ம் இருந்தாலும் வார்த்தைல‌ வெண்ணை பூச‌த் தெரிஞ்சா அவ‌ங்க‌ பொழ‌ப்பெல்லாம் ஏன் இப்ப‌டி இருக்க‌ப்போவுது? "எந்திரீடா ராசு, ம‌ணி ஏழாவுது, மேக்க‌ போன‌ ப‌ஸ்சு கெழ‌க்க‌ வார‌துக்குள்ள‌ கெள‌ம்போனும‌ல்ல‌? இப்ப‌டித் தூங்கியாடா நீ போய்ப் ப‌ரீச்சை எழுத‌ப் போறே?" ன்னு வ‌ழ‌க்க‌ம்போல‌ பேசீட்டு வேலைய‌ப் பாக்க‌ப் போயிருவாரு அப்ப‌ன். அய்ய‌ந்த்தான் காலைல‌யும் ராசு கால்மாட்டுல‌ நின்னுக்கிட்டு "ராசு, எந்திரிடா சாமி, சைக்கிள‌த் தொட‌ச்சு வெச்சிருக்க‌றேன், அழுத்திக்கிட்டுப் போனாத்தான‌ கெழ‌க்க‌ வார‌ ப‌ஸ்ச‌ப் புடிக்க‌ச் செரியா இருக்கும்?" னு சொல்லிக்கிட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சு, ந‌ம்ம‌ ராசுவும் காலேஜு முடிச்சு,எஞ்சீனீர் ஆவி, நல்ல வேலையும் கெடைச்சு, வெளிநாட்டுக்கும் வ‌ந்தாச்சு. அய்ய‌ன் என்ன‌ ஆனாருங்க‌றீங்க‌ளா? இன்னமும் க‌த‌ர்க்க‌டைப் பெச்சிட்டு ஒன்ன‌ப் போத்திக்கிட்டு அதேமாதிரி ஒரு க‌ட்ட‌ல்ல‌ ப‌டுத்துக்கிட்டுத்தான் இருக்க‌றாரு. எப்ப‌வாவ‌து ந‌ம்ம‌ ராசுகூட‌ போன்ல‌ ஒரு ப‌ழ‌மை பேசுவாரு. அதுங்கூட‌ அப்ப‌ங்கார‌ரு ப‌க்க‌த்துல‌ மொழிபெய‌ர்ப்பு வேலை செய்யோனும். காது கேக்காத‌ அய்ய‌னுக்கு ராசு சொல்ற‌து புரியுமான்னு தெரியாது. ஆனா அய்ய‌ஞ் சொல்ற‌து எல்லாருக்குமே புரியும், ஏன்னா அவ‌ரு இப்பெல்லாம் ஒன்னையேதான‌ திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்காரு? "என‌க்கென்ன‌ சாமி? காடு(சுடுகாடு) வாவாங்குது, ஊடு போபோங்குது. நீங்கெல்லா ந‌ல்லா இருந்தீங்க‌ன்னாச் ச‌ரி". இப்ப‌டி எத்த‌னை ராசுக்க‌ளோ? எத்த‌னை அய்ய‌ன்க‌ளோ? சீமையுட்டுச் சீமை வாழுற‌ ராசுக்க‌ளையும், செங்காட்டுச் சீமைய‌றிஞ்ச‌ அய்ய‌ன்க‌ளையும் இன்ன‌மும் எணைச்சுக்கிட்டிருக்க‌ற‌து "ஒற‌வு"ங்க‌ற‌ மூனெழுத்துத்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-893254204547677110?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/893254204547677110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=893254204547677110' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/893254204547677110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/893254204547677110'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/08/2.html' title='காடு வாவாங்குது, ஊடு போபோங்குது.......அய்யன் க‌தை 2'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-4361940975980070539</id><published>2009-07-29T23:24:00.001-05:00</published><updated>2009-07-29T23:26:11.078-05:00</updated><title type='text'>"சோத்துக்கு வந்தவந்தான?"......அய்யன்கதை 1</title><content type='html'>நாளைக்கே நம்மள‌ய  "நீங்க இப்படி அடாது மழை பெய்தாலும் விடாது பதிவெழுதித் தமிழ் இலக்கியத்துக்கும் இணையத்துக்கும் எதுவும் வெளங்காமப் போகச் சேவை செய்யனும்னு நெனைக்க மூலகாரண‌மா அமைஞ்சது எது?"  அப்படின்னு யாராச்சும் பேட்டி எடுக்கறாங்கன்னு வைங்க, அதெல்லாம் நடக்கப்போகுதாங்கறீங்களா? அடச் சும்மா ஒரு பேச்சுக்கு வெச்சுக்கவுமே, நெருப்புன்னா வாய் வெந்தா போகுது? நாம என்ன பதில் சொல்லலாம்ங்கறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க அம்மா தமிழாசிரியர், தாத்தா தேவநேயப் பாவாணரோட நண்பர், அப்பா பொதுவாழ்க்கையில இருந்ததாலே எப்பவும் அறிஞர்கள் கூடும் எங்க வீடு, இப்படி இருந்த சூழல்ல பொறந்ததால நான் எட்டு மாசத்துலயே எட்டுத்தொகை பாட ஆரம்பிச்சுட்டன்னாப் பாருங்களே!" ன்னு எடுத்து உடறதுக்கெல்லாம் ஒன்னுமில்லைன்னு வைங்க. கை ஊனி எந்திரிச்சப்ப, கைசூப்பி நடந்தப்ப, காதுகுத்தப்ப, காட்டுல தூங்குனப்பன்னு ஆத்தாமாருகளும், அத்தைமாருகளும் சொன்ன அவங்கவங்க ஊட்டுக் கதைகதே நாம கேட்ட, படிச்ச மொதத் தமிழ்இலக்கியமாப் போச்சு. கம்பன்ல தேனூறுச்சு, இளங்கோவுல மனசூறுச்சு, பின்னால பாரதியில மூளை ஊறுச்சுன்னெல்லாம் நம்ம இலக்கியத் தேடலப் படம் போட்டுக்கிட்டாலும் எல்லாமுக்கும் மூலமா இருந்த கதைசொல்லிக நம்ம ஊருல வெய்யில்லயும், வேக்காட்டுலயும் கருகிக் கெடந்தவங்கதான்ங்கறத மறந்தா மனுசரா நாம?&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கேட்ட கதையில விதத்துக்கொன்னு இருந்தாக்கூட  இப்ப உங்களுக்குச்சொல்லப்போறது "அய்யன்கதை"&lt;br /&gt;மட்டுந்தான். அய்யனை எழுதலாம்னு சொன்னதீமு ஆளாளுக்கு வந்து ஆதரவு கொடுத்த உங்களுக்கு நான் பாத்த அய்யன்களை எழுதறதுக்கும் முன்னால கேட்ட அய்யன் ஒருத்தரச் சொல்லலாம்னு தோணுச்சு. ஒத்த அய்யனா இருந்து இன்னைக்குப் பொட்டுப் பொடுசுகளோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு வாரிசுகள் வரைக்கும் இருக்கற ஊட்டுக் கதை இது. அய்யனோட மருமக, மருமகளுக்கும் மருமகன்னு பலபேரு சொல்ல, பல்லு உழுந்து மொளச்சப்ப இருந்து பலமொறை அந்த அய்யனோட கதையக் கேட்டாச்சு. அதனாலயோ என்னமோ நான் கண்ணுத் தொறந்து பூமியப் பாக்கும் முன்னாலயே போய்ச் சேந்துட்ட அந்த அய்யன், போட்டோவெல்லாம் புடுச்சு வைக்கப்படலைன்னாலும் எம் மனசுலயும் பதிஞ்சுதான் கெடக்கறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது சாஞ்சு மசமசன்னு ஆயிருச்சு. காட்டுல இருந்து வந்து கைகால் கழுவீட்டு,நல்ல நாயம் பேசும்போது ஊடு இருட்டாக் கெடக்கக்கூடாதுன்னு ஊட்டுப் பொம்பளைக தீபம் பத்தீட்டாங்களான்னு எட்டிப் பாத்துட்டு வெளித்திண்ணையில உக்காந்து மச்சுனங்கிட்டச் சொல்லுச்சு பெரியூட்டு அய்யன்,&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கு நாளு நல்லா இருக்குமாட்ட இருக்குதுங்க, பழையசோத்து நேரம் போய் உப்புக் கெணத்து சோசியங்கிட்ட முகூர்த்தத்தக் குறிச்சுக்கிட்டு வரலாம்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"சேரிப் போய்ட்டு வந்துட்டாப் போகுதுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லா போவேண்டீதில்ல, தீபங் கெட்டுப் போச்சு, சயனஞ் செரியில்ல" சொல்லிக்கிட்டே வந்த பொன்னாத்தாளுக்குத்தே கல்யாணம் பேசிக்கிட்டிருந்தாங்க அவங்கய்யனும் மாமனும். தீபமுங்கூடத் தானாக் கெடலை, ஊதிக் கெடுத்துட்டு வந்ததே நம்ம பொன்னாத்தாதான். ஏன்னா பொண்ணுப் புள்ள பொன்னாத்தாளுக்கு ஊட்டுப் பெருசுக அதைய சாமீப்ப மாப்பளைக்குக் கட்டி வெக்கறது புடிக்கலை. இந்த சாமீப்ப மாப்பளைதான் என் மனசுல பதிஞ்சு கெடக்குற நான் இன்னைக்கு உங்களுக்குச் சொல்லப்போற அய்யன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமீப்பய்யன் பொன்னாத்தாளுக்கு அத்தை மவன். அத்தை தூரத்து ஊருக்கு வாக்கப்பட்டுப் போயி மொத மவனா சாமீப்பய்யன் பொறந்தபோதே பெத்துபோட்டுட்டு பிரசவத்துல போய்ச் சேந்திருச்சு. கொழந்தைக்குத் தகப்பன் வேற கல்யாணம் பண்ணிக்க,பொறந்தவளோட மவனைத் தன் மவனா வளத்திக்கலாமுன்னு ஒரு பாசத்துல மாமங்காரரு கூட்டிக்கிட்டு வந்துட்டாரு. கூட்டியாந்ததுக்கு ஒன்னும் கெட்டுப்போகலை. சாமீப்பய்யனும் மாமன் மேலயும், அவரு குடும்பத்து மேலயும் உயிராத்தாங் கெடந்திருக்காரு. மாமனுக்கும் பையன் இல்லாதிருக்க‌ ஊட்டுக்குச் சொந்தப்பயனாட்டமா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருக்காரு. பொன்னாத்தாளுக்கு அக்கா ஒன்னு இருந்திருக்கு, அதுக்கும் தம்பி மாதிரி சாமீப்பன்னா பாசந்தான். ஆனா நெறைய வயசு வித்தியாசமாப் போச்சு, அதுனால அக்காவ வேற மாப்பளை பாத்து கட்டி அனுப்பிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னாத்தாளச் சாமிப்பனுக்கே கட்டி வெச்சுட்டுக் கண்ணை மூடோனும்ங்கறதுதான் மாமங்காரரோட ஆசை. ஆனா பொன்னாத்தா போக்கு வேற மாதிரி இருந்துருக்கு. சிறுசுல இருந்தே சாமீப்பய்யன்கிட்டச் சண்டை போடறதும், வெளையாட்டூச் சண்டையிலகூட‌&lt;br /&gt;"நீ எங்கூட்டுக்கு மொத்தச் சோத்துக்கு வந்தவந்தான?"ன்னு வெடுக்கு வெடுக்குனு பேசறதுமா இருந்துருக்கு. ஆனாச் சாமீப்பய்யன் அதையெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டதில்லை, கன்னுக்குட்டி எட்டி ஒதைச்சாலும் மாட்டுக்கொசரம் பொறுத்துக்கற மாதிரி&lt;br /&gt;பொன்னாத்தாகிட்டப் பொறுத்தேதான் போயிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எதோ சின்னப்புள்ளைக சண்டைன்னு நிக்காம கல்யாணப் பேச்சு எடுக்கும்போதும் பொன்னாத்தா பூந்து வெளையாடியிருக்குது. "இத்தன பண்ணையத்த வெச்சுக்கிட்டு ஒன்னுமில்லாம சோத்துக்கு வந்து இருந்தவனுக்குக் கட்டி வெக்கறீங்களா? நான் தெக்காலூரு மணிக்குட்டியத்தான் கட்டிக்குவேன்" ன்னு ஒரு நூறு வருசத்துக்கு முன்னாடியே அந்தக் கரட்டாங்காட்டுல இருந்துக்கிட்டு "பெண்ணுரிமை" பேசியிருக்குது பொன்னாத்த ஆத்தா. ஆனா பெருசுக தம் பேச்சக் கேக்காம மறுக்கா மறுக்கா கல்யாணத்து நாயத்த எடுத்தா நம்ம பொன்னாத்தாளுக்குப் புடிக்கறதில்லை. அதுனால நடக்கறதுதான் இந்த சயன வெளையாட்டு. பெரியவங்க பேசும்போது தீபத்தை நிறுத்தறது, எதையாவது ஒடைக்கறது, செஞ்சுட்டு ஓடிவந்து சயனஞ் செரியில்ல பேச்சை நிறுத்துங்கன்னு சொல்லிப்பாக்கறது, அப்படியாவது தனக்கு மணிக்குட்டி மாப்பளை கெடைக்க மாட்டாரான்னு ஏக்கம் பொன்னாத்தாளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே நடக்கறதப் பாத்துக்கிட்டு இருந்துட்டு ஒருநாளு சாமீப்ப அய்யன் சொல்லீருக்காரு "பொன்னாத்தாளுக்கு இஷ்டமில்லீன்னா உட்டுருங்க‌ மாமா, மணிக்குட்டிக்கே கட்டி வெச்சுருங்க, நான் அவ பசங்கள வளத்திக்கிட்டு இப்பிடியே இருந்துக்கறேன்" அப்படீன்னு. இதைக் கேட்ட பொறகு "இவன விட ஒனக்கு எந்த மவராசன் மாப்பளை கெடைப்பான்? நீ ஒன்னுமே பண்ண வேண்டீதில்லை, தல‌மேல வெச்சுத் தாங்குவாஞ் சாமீப்பன்" னு பொன்னாத்தாளை ஒரே அமுக்கா அமுக்கீட்டாங்க எல்லாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்கெல்லாம் சொன்னதிலயும் ஒன்னும் கொறையில்லை. பொன்னாத்தாளைப் பூப்போலத்தான் பாத்துக்கிட்டாராமா சாமீப்ப அய்யன். நாலு பசங்க, ரெண்டு பொம்பளைப் புள்ளைக பொறந்து எல்லாத்தையும் நல்லா வள‌த்திக் கல்யாணங் காச்சி மூச்சு வந்த மருமக்கமாருககிட்டயும் பாசமா இருந்து செத்துப் போயிருக்குது அய்யன். அய்யனோட பொறுமைக்கு ஒரு உதாரணம் சொல்வாங்க அய்யன் கதை சொன்னவங்க. பொன்னாத்தா ஆத்தா வாய்தான் நெறையாப் பேசுமாமா. ஆனா வேய்க்கானம் பத்தாது. மழைபேஞ்ச காத்தால ஒழவோட்டிக்கிட்டு இருக்கற சாமீப்பய்யனுக்குப் பழைய சோறு கொண்டுபோகோனும் ஆத்தா. அப்ப எல்லாம் சோளச்சோறு, கம்மஞ்சோறூதான உணவு? ஆக்கிக் குண்டாவுல போட்டுச் சும்மாடு கூட்டித் தலையில வெச்சுக் கொண்டுபோகுமாமா. போற வழியில தடத்துல சாணி கெடந்தா ஆத்தா சும்மா போகாது. சாணி தடத்துல கெடந்தா வீணாப்போவுது, எடுத்துப் பக்கத்தால காட்டுக்குள்ள வீசுனா மண்ணுக்கு ஒரமாவும்னு சோத்தை வெச்சுப்போட்டுச் சாணிய எடுத்து வீசிட்டுக் கையைப் பக்கத்து ஊத்துத் தண்ணியில போயிக் கழுவிக்கிட்டு வருமாம். வரதுக்குள்ளே தடத்துல வெச்சுருந்த சோத்த நாய் எதாவது போச்சுன்னா தட்டியுட்டுத் தின்னுக்கிட்டிருக்குமாம். அப்பறம் வெறுங்குண்டாவைத் தூக்கீட்டுப் போய் அய்யங்கிட்ட "சோறுதான் போயிருச்சு, ஆனாச் சாணியப் பத்தரமாக் காட்டுக்குள்ள போட்டுட்டு வந்துட்டேன்" ன்னு சொல்லுமாம். பொழுது கெளம்பப் பூட்டுன ஏரை எளமத்தியானம் வரை ஓட்டீட்டுப் பசியோட கெடந்தாலும் பொண்டாட்டியச் சோத்தை நாயிக்கு உட்டுட்டு வந்துட்டாளேன்னு ஒரு சொல்லும் கடிஞ்சு பேசமாட்டாராம் அய்யன். "போனாப் போவுது ஊட்டுக்குப் போயி ஆக்கி வை" ன்னு சொல்லீட்டு வேப்பமரத்துல குச்சிய ஒடுச்சுப் பல்ல வெள‌க்கீட்டுப் பனைமரமேறரவுங்க எறக்கி வெச்சிட்டுப் போன தெளுவுத் தண்ணியவே மறுக்காவும் குடிச்சிட்டு காட்டுக்கு மாட்டை அவுத்துட்டு ஓட்டிக்கிட்டுப் போவாராம். "இப்பிடிப் புருசனத்தான பொன்னாத்தா கட்டிக்க மாட்டேன்னாளாமா" ன்னு ஊருக்குள்ள பேசிக்குவாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமீப்பய்யனோட வாழ்வுக்கு நான் மரியாதை செலுத்தற‌துக்கு இன்னொரு காரணம். நாலு பசங்களுக்குள்ள சின்ன வயசுகள்ல எதாச்சும் சண்டை வந்தா அவங்க‌ பேசி முடிக்க வரைக்கும் அமைதியா இருந்துட்டுக் கடைசீல அய்யன் சொல்லுவாராமா "எப்புடியோ எல்லா ஒரே வயித்துல வந்து பொறந்திட்டீங்கடா, ஒரு ஆகாவழிக் கெரகத்துக்கு அடிச்சுக்கறதுக்கு முன்னால இன்னொருக்காவா நாம இப்படி ஒன்னா வந்து பொற‌க்கப்போறோம்னு நெனச்சுப் பாருங்க, இந்தக் கெரகமெல்லாம் பெருசாத் தெரியாது" அப்படீன்னு. சரியாத்தான் சொல்லீருக்காரு சாமீப்ப அய்யன். ஆனா நமக்கெல்லாம் மண்டையில ஏறனுமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-4361940975980070539?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/4361940975980070539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=4361940975980070539' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4361940975980070539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/4361940975980070539'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/07/1.html' title='&quot;சோத்துக்கு வந்தவந்தான?&quot;......அய்யன்கதை 1'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-2301633005136585179</id><published>2009-07-26T23:39:00.004-05:00</published><updated>2009-07-26T23:54:26.081-05:00</updated><title type='text'>குழந்தைகள் பைத்திய‌ங்க‌ள் க‌ட‌வுள்க‌ள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_IlwcTx9Q628/SgQ5__rmhoI/AAAAAAAAD4I/Bx12lMG1igE/s400/mentalMask.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 374px;" src="http://4.bp.blogspot.com/_IlwcTx9Q628/SgQ5__rmhoI/AAAAAAAAD4I/Bx12lMG1igE/s400/mentalMask.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்றாட சோதனைகள் மனதோடுதான். மாடு தண்ணீர் குடிக்கும் நீளச் செவ்வகத் தொட்டி ஒன்று ஊரில் எப்போதும் பாசியேறிக் கிடக்கும். அதிலே நிறையக் கொரத்துக்குட்டிகள்(குழந்தைத் தவளைகள்) இருக்கும். நல்ல வெயில் பொழுதில் தொட்டியை யாரும் சலனம் செய்யாத நேரத்தில் அக்குட்டிகள் தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்தபடி எதையோ ஆழ்ந்து அனுபவித்துக் கொன்டிருக்கும். மாடோ, மனிதரோ சிறு அதிர்வு தரும் தருணத்தில் பாய்ந்து உள்ளோடிப் பாசியின் அடியில் ஒளிந்துகொள்ளும். அக்கொரத்துக் குட்டிகளின் தன்மையினை மனம் பலநேரங்களில் கொண்டிருப்பதைத் தள்ளியிருந்து அவதானிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகளுக்குள் பொருந்த எத்தனிக்கிற வாழ்வில் எந்திரகதியான எந்த விடயத்திலும் வேறுவழியின்றி உடலும், மூளையும்தான் பொருந்துகிறதே தவிர மனமல்ல. அப்படியான நேரங்களில் அது பாசிகளுக்கடியில் தன்னைப் பத்திரமாய் மூடிக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூட்டிக் கிடக்கிற மனதைச் சாவியிட்டுத் திறப்பவை சிலதான். அந்தச் சாவிகளில் ஒன்றை நமக்காகச் சதாசர்வகாலமும் தம் கைகளில் சுமந்தபடி அலைந்துகொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து கவனிக்கிறேன் நான். ஒரு கூட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் அரட்டையடிக்க ஆள் கிடைத்ததேவென நிம்மதியான வெளிதேடுபவர்களல்லாத பெண்களில் நானும் ஒருத்தி.&lt;br /&gt;வழமையாய்ச் சந்திக்கிற, வழமையாய் ஒரு  போலிப்புன்னகையை உதிர்க்கிற, தன் அத்துனை அழுக்குகளையும் வழக்கம்போலவே வாசனை திரவியங்களுக்குள் புதைத்துக் கொண்டு வருகிற கூட்டங்களை விட்டுக் குழந்தைகளின் கூட்டத்திற்குள் புகுந்துகொள்வது எப்போதும் சுகமானது. &lt;br /&gt;&lt;br /&gt;வாழும் நகரத்தில் குழந்தைகள் கூடும் இடங்களும், அவர்களுக்கான செயல்களும் என் பிரியத்திற்குரியவை. நீன்ட இடைவெளிக்குப் பிறகு Katie ன் கதை சொல்லும் நேரத்திற்குப் போயிருந்தேன். சுற்றியலைந்துவிட்டு மீண்டும் யாருக்கும் தெரியாத தன் கூட்டிற்குள்  வந்துவிட்டதன் உற்சாகம் மனதுக்கு. நுரைகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பரப்பை மேல் நகர்த்தி ஒரு துள்ளலுடன் பொங்கிச் சிரிக்கும் பாலின் நிறத்தில் பூரிக்கத் தொடங்குகிறது உள்ளே ஏதோ ஒன்று. சுற்றிச் சில பெண்கள், சில ஆண்கள், சில குழந்தைகள், பின் மேடையில் கதை சொல்ல Katie. எல்லாக் குழந்தைகளையும் இருக்கைகளில் அமரவைத்து ஒரு ஒழுங்கைப் புகுத்திக் கதை சொல்ல ஆரம்பித்தார். தனக்கு மான்கொம்பு, யானைமூக்கு, புலிவால் என்று மாற்றி மாற்றிப் பொருத்திக்கொள்ளும் குழந்தை ஒன்றைப் பற்றிய எதோ வேடிக்கையான கதை அது. ஐந்தே மணித்துளிகளில் ஒழுங்கைக் கலைத்துச் சுதந்திரமானார்கள் கதை கேட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல ஒருவர் எழுந்துபோய் Katie க்கு முன் அமர்ந்து அவர் முகத்துக்கு நேரே தன் காலைத் தூக்கி "செருப்பு, பார் செருப்பு" என்றார் ஒருவர். ஜார்ஜ் புஷ்ஷுக்கும், மன்மோகன்சிங்குக்கும், ப. சிதம்பரத்துக்கும் காட்டப்பட்ட ஷு  நினைவில் வந்தது எனக்கு. "ஆமாம், எனக்கும் உன்னைப்போலவே உன் செருப்பு பிடித்திருக்கிறது" என்று சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார் Katie. வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த தன் பையை மெல்லப் பிரித்து அதற்குள்ளிருந்த சின்ன நாய்க் குட்டிப் பொம்மையை எடுத்து வாஞ்சையோடு இடுப்பில் ஏந்தி " நாய்க் குட்டி, நாய்க்குட்டி" என்று அதை வருடியபடி கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் காட்டிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் இன்னொருவர். எல்லாக் கதவுகளும், சன்னல்களும் இழுத்து மூடப்பட்ட ஒரு தெருவில் நிலா தன் வெளிச்சத்தைச் சுமந்து அலைவது போல் இருந்தது அது. என்னமோ நினைத்துக்கொண்டு அதுவரை Katie க்குக் கொடுத்திருந்த முகத்தைத் திரும்பப் பெற்று முதுகு காட்டி அமர்ந்து எனக்கே எனக்கென்று ஒரு புன்னகை சிந்தினார் மற்றொருவர். இன்று தனக்குக் கிடைக்கவேண்டிய புதையல் தவறாது கிடைத்ததென்றது மனது. இது எதுவுமே தன்னைப் பாதிக்காத அத்தருணத்தில் கீழே படுத்து அண்ணாந்து கூரைபார்த்து அதில் கண்ட அவருக்கு மட்டுமே புரிந்த‌ ஒன்றுக்கு அவராய்ச் சிரித்துச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் இன்னுமொருவர். புத்தன் அரண்மனையை விட்டுப் பிரிந்ததும் இப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்றது மனது. இவர்களில் யாரின் கனவையும் கலைக்காமல் கதை சொல்லி முடித்தார் Katie செடிகளுக்கு வலிக்காமல் மலர் கொய்வதான மென்மையுடன். அவர்களுக்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையை நான் உங்க‌ளுக்குச் சொல்லிவிட‌லாம். ஆனால் அவ‌ர்க‌ள் சொல்லிய‌ க‌தைக‌ளை முடியுமா? எத்த‌னை முறை முய‌ன்றாலும் என் வ‌ழியாக‌ வ‌ரும் அவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் என் க‌தைக‌ளாக‌ மாறிப்போகிற‌ பிற‌ழ்த‌லே நிக‌ழ்கிற‌து. அவ‌ர்க‌ளின் க‌தைக‌ளை அவ‌ர்க‌ள‌ன்றி யார் சொன்னாலும் அது அவர்களின் கதைகளாகவன்றிச் சொன்ன‌வ‌ரின் கதைகளாக‌வே சுய‌ம் இழ‌க்கின்ற‌ன‌. என்றாலும் சொல்வ‌தை நிறுத்துப‌வ‌ர்க‌ளா நாம்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அவ‌ர்க‌ள் சொல்லிய‌ க‌தைக‌ளை என் க‌தைக‌ளாக‌ மாற்றும் அவ்வேலையைச் செய்ய‌வே செய்கிறேன். நெடுநெடுவென்று வ‌ள‌ர்ந்து க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளைச் சும‌க்கும் கூன‌ர்க‌ளாய் அடைத்த‌ பைக‌ளுக்குள் வாழ்வைச் சுருட்டிக்கொண்ட‌ மானுட‌ம் ம‌த்தியில் குழ‌ந்தைக‌ள் எவ்வித‌த்திலும் க‌ள‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ த‌ம் ம‌ன‌தோடு ஒரு குறிப்பிட்ட‌ வ‌ய‌துவ‌ரை சுத‌ந்திர‌மாய்க் கொண்டாட்ட‌மாய் வாழ்வைக் க‌ழிக்கிறார்க‌ள். மதங்களை நம்புகிறவர்கள் அப்போது அவர்களை‌க் கடவுள்கள் என்கிறார்கள். அவ‌ர்க‌ளின் அதே சுத‌ந்திர‌, கொண்டாட்ட‌ ம‌ன‌நிலையில் வ‌ய‌துக‌ட‌ந்தும் த‌ம் வாழ்வை அமைத்துக்கொண்ட‌வ‌ர்க‌ளைப் பார்த்துத் தெய்வ‌ங்க‌ளை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளும் "பைத்திய‌ங்க‌ள்" என்கிறார்க‌ள். வ‌ர‌ங்க‌ளுக்காய்க் க‌ட‌வுள்க‌ளின் வியாபார‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் காத்திருக்கும் மூட‌ருக்குத் தமது க‌ட‌வுள்க‌ள் மூத்திர‌ நாற்ற‌ம‌டிக்கும் ஒரு பொதுக் க‌ழிப்பிட‌த்தின் காரை பெய‌ர்ந்த‌ சுவ‌ற்றோடு ஒட்டி உற‌ங்கிக்கொண்டிருப்ப‌தும், நமது குப்பைத்தொட்டி ஒன்றில் ப‌ன்றிக‌ளோடும், நாய்க‌ளோடும் எச்சில் இலையில் ப‌ருக்கை தேடித் த‌ட‌விக் கொண்டிருப்ப‌தும், அந்த‌ ர‌யில் நிலைய‌த்தின் எதிரிலான பாழ‌டைந்த‌  க‌ட்டிட‌ம் ஒன்றில் உதிர‌ம் பெருகச் சிசு ஒன்றைப் பிர‌ச‌வித்துக் கொண்டிருப்ப‌தும் தெரியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-2301633005136585179?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/2301633005136585179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=2301633005136585179' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2301633005136585179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2301633005136585179'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/07/blog-post_26.html' title='குழந்தைகள் பைத்திய‌ங்க‌ள் க‌ட‌வுள்க‌ள்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IlwcTx9Q628/SgQ5__rmhoI/AAAAAAAAD4I/Bx12lMG1igE/s72-c/mentalMask.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-6231718316703417679</id><published>2009-07-16T17:38:00.002-05:00</published><updated>2009-07-16T17:45:55.348-05:00</updated><title type='text'>அய்ய‌னை எழுத‌லாமா?</title><content type='html'>&lt;a href="http://www.perrymarshall.com/wp-content/uploads/travelogue/india/oldman1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 621px; height: 501px;" src="http://www.perrymarshall.com/wp-content/uploads/travelogue/india/oldman1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மூத்த பதிவர் செல்வராஜ் மறுக்காவும் எழுத வந்துருக்காருன்னு ஒரெட்டுப் போய்ப் பாத்துட்டு வரலாம்னு அவர் பதிவுப் பக்கமாப் போனப்ப இந்த அமெரிக்காவுல வெள்ளக்காரங்க வயசானாலுங்கூட எப்படி வெரசலா எட்டி நடந்து, ஓடி ஒடம்புக்குப் பயிற்சி பண்றாங்கன்னு அழகா எழுதீருந்தாரு. அதுல கொழைந்தங்க ஒருபக்கமா ஓடுனா "அய்யனும் ஆத்தாளும்" அவங்களுக்கிணையா ஓடறாங்கன்னு ஒரு வரி சொல்லீருந்தாரு.யாரோ எங்கையோ எப்பவோ க‌டையில‌ நாள்க‌ண‌க்கா கெட‌ந்து அதையும் ஆசைக்கு வாங்கி ஒரு துண்டு ஒடைச்சு வாயில‌ போட‌ற‌ப்ப‌ ஊருல‌ நோம்பி த‌வ‌றாம‌ புதுசாப் ப‌ண்ணித‌ர்ற‌ அம்மாவோட‌ அன்பு நெறைஞ்ச‌ மைசூர்பா ஞாப‌க‌ம் வ‌ருமே, அதுமாதிரி இங்க‌ எப்ப‌வும் முக்கால்வாசி நேர‌த்தை இங்கிலீசு பேசியே ஓட்ட‌ற‌து பொழ‌ப்பா வாச்சிருக்க‌ற‌ப்ப‌ எப்ப‌வாவ‌‌து நம்மளோட ஒரு சின்ன‌ சொல் கெடைச்சாலும் அது வாழ்வோட‌ ஆர‌ம்ப‌த்து இனிமைக‌ளுக்குள்ளே த‌ள்ளிவிடுது.&lt;br /&gt;அப்ப‌டித்தான் செல்வ‌ராஜோட‌ "அய்ய‌னும் ஆத்தாளும்"&lt;br /&gt;ஊர் ஞாப‌க‌த்த‌க் கொண்டாந்து சேத்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்ய‌ன்" ங்க‌ற‌ சொல்லு கொங்குப் ப‌குதியில பொதுவா"அப்பா"ங்க‌ற‌ பொருள‌க் குறிக்கும். ஆனா இன்னொரு வ‌கையில‌ பாத்தா ஊட்டுல‌ இருக்க‌ற‌ வ‌ய‌சான‌ ஆணை அந்த‌ ஊட்டுச் ச‌ன‌ங்க‌, வ‌ர்ற‌வ‌ங்க‌, போற‌வ‌ங்க‌ன்னு எல்லாருமே "அய்ய‌ன்" னு கூப்புடுவாங்க‌. அப்பாற‌ய்ய‌ன், அப்புச்சி எல்லாம் த‌ந்தை, தாய் வ‌ழி உற‌வுமுறைச் சொல்லுன்னாலும் நெறைய‌ ஊடுக‌ள்ல வயசான ஆம்பளைகளை பொதுவா "அய்ய‌ன்" னு சொல்ற‌ ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து இந்த‌ இட‌த்துல "இருக்குது" ன்னு போட‌லாமா போட‌க்கூடாதான்னு ஒரு கொழ‌ப்ப‌ம். ஏன்னா இப்ப‌ இருக்க‌ற‌ சின்ன‌ப் பேத்துப் பிதுறுக‌ எல்லாம் "தாத்தா பாட்டி" ன்னு கூப்ட‌ற‌துக்கு மாறீட்ட‌ மாதிரித் தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ந‌ம்ம  சின்னப் புள்ளையா இருந்த கால‌த்துப் பேத்தி வாழ்க்கையில‌ (20 வ‌ருச‌ம் முன்னாடி)நெறைய‌ அய்ய‌ன்க‌ளும் கூட‌ இருந்தாங்க‌. ஊருக்கொரு வெநாயங் கோயில் மாதிரி ஊட்டுக்கொரு அய்ய‌ன் இல்லாட்டி ஆத்தா இல்லாட்டி ரெண்டுபேருமே இருந்தாங்க‌. அய்ய‌ன் ஆத்தா ம‌னுச‌ங்க‌ளுக்கு த‌லை பூளைப்பூவாட்ட‌மா பெரும்பாலும் ந‌ரைக்க‌  ஆர‌ம்பிச்சிரும். ம‌ன‌சும் அந்த‌ப் பூ நெற‌த்துல‌தான் இருக்கும். த‌லையையே டை போட்டு ம‌றைச்சுக்காத‌வ‌ங்க‌ ம‌ன‌சுக்கு என்ன‌ தெரை போட‌ப்போறாங்க?. எதார்த்த‌மான‌ பேச்சும் செய‌லும் அவ‌ங்க‌ளோட‌து. அவ‌ங்க‌ ஊட்டு, ஒற‌வுப் புள்ளை, ப‌ச‌ங்க‌ள‌ ம‌ட்டும‌ல்ல‌ ஊருக்குள்ள‌ எல்லாச் சின்ன‌ஞ்சிறுசுக‌ மேலையும் ஒரே மாதிரிப் பாச‌ந்தான், அக்க‌றைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெய்யிலுக்குத் துண்டைத் த‌லையில‌ போட்டுக்கிட்டுக் கைக்குக் க‌வை ஊனிக்கிட்டு ந‌ட‌ந்து போகையில‌ எதுக்கால‌ த‌ண்ணிக் கொட‌த்தைத் தூக்கிக்கிட்டு சுப்போ, ர‌த்தினாளோ வ‌ந்தா "ஏத்தா ந‌ட்ட‌ ம‌த்தியான‌த்துல‌ கொடத்த‌த் தூக்கீட்டு? சாய‌ந்த‌ர‌மா வெய்ய‌த் தாழ‌ப் போலாம‌ல்ல‌?" ன்னு கேட்டுக்கிட்டு,ப‌க்க‌த்தூருல‌ போயி மாட்டுக்குத் த‌வுடு வாங்கி சைக்கிள்ல‌ கொண்டார‌ சின்ன‌க்குட்டிய‌ப் பாத்து "பேர‌ன் ந‌ல்லாருக்கறான‌ல்ல‌ அப்புனு?" அப்ப‌டீன்னு வெசாரிச்சுக்கிட்டு, எதுக்கால‌ வ‌ர்ற‌ இன்னொரு அய்ய‌ன‌ப் பாத்து "மான‌ம் உருவ‌ங் க‌ட்டியிருக்க‌ற‌த‌ப் பாத்தா இன்னிக்கு ம‌ழை ஏமாத்தாது போல‌ இருக்குதுங்க‌ மாப்ளே" ன்னு பேசிக்கிட்டு ந‌ம்ம‌ அய்ய‌ன்க‌ள் அந்த‌ப் புழுதி ரோட்டுல‌ ந‌ட‌ந்து போற‌த‌ நென‌ச்சேன். அப்ப‌டிச் சித்திர‌மா ம‌ன‌சுல‌ உழுந்து கெட‌க்குற‌ அய்ய‌ன்க‌ள‌ ஒவ்வொருத்த‌ரா எழுதி வெச்சுக்க‌லாமான்னு தோணுச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பேச்சு வழக்கெல்லாங்கூட நாக‌ரீக‌மா மாறிக்கிட்டு வ‌ருது. என்ன‌ நாக‌ரீக‌மோ? என்ன‌மோ? நாக‌ரீக‌ம்ங்க‌ற‌துக்கு என்ன‌ அள‌வுகோலுன்னும் தெரிய‌லை. அமெரிக்கா வ‌ந்தாலும், ஆஸ்திரேலியாவுக்குப் போனாலும் "சாதி" உண‌ர்வையெல்லாம் உடாமப் பத்தரமா மூட்டை கட்டி மனசுல ஊறப்போட்டுக்கிட்டே இருந்தாலும் ஊர்ப் பேச்சு வ‌ழ‌க்கெல்லாம் கொஞ்ச‌ம் ம‌ற‌க்க‌த்தான் செய்யுது நம்ம‌ ம‌க்க‌ளுக்கு. இங்க‌யே கொங்குப் ப‌குதி ம‌க்க‌ளா ஒரே இட‌த்துல‌ நெறைய‌ப் பேரைப் பாத்தாலுமே கூட‌ அவ‌ங்க‌ ஒருத்த‌ர‌ ஒருத்த‌ர் பாத்துக்க‌ற‌ப்ப‌ ச‌ராங்க‌மா ஊர்மொழி ஒன்னும் பெருசா வ‌ர்ற‌தில்லை போல‌ சில‌ருக்கு. ஊர் மொழின்னு சொன்னா வார்த்தைக்கு வார்த்தை "ங்க‌" போட்டுப் பேச‌ற‌ அடையாள‌ம‌ல்ல‌. ப‌ழ‌மைக்குள்ளையும், பேச்சுக்குள்ளையும் புதைஞ்சு கெட‌க்குற‌ பாட்டனும், முப்பாட்ட‌னும் புழ‌ங்கிய‌ சொற்க‌ள். ஒன்னுமில்லை, அன்னைக்கொரு நாளு எல்லோருமாக் கூடியிருந்த‌ எட‌த்துல உள்ள போனதும் கொங்குக்கார‌ரு ஒருத்த‌ர‌ப் பாத்து "இப்பத்தா வ‌ந்தீங்க‌ளா?" னு சாதார‌ண‌மான‌ ஒரு வாக்கிய‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்துன‌துக்கே அவ‌ரு ரொம்ப‌ உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு "இதையெல்லாம் கேட்டு எவ்வள‌வு நாள் ஆச்சுப் போங்க‌" னு சொல்லிக்கிட்டு இருந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மகிட்டயுமே வேலையில்லாத‌ப்ப‌ யோசிச்சுப் பாத்தா எத்த‌னையோ சொற்க‌ள் தொலைஞ்சுக்கிட்டே போற‌ மாதிரித் தெரியுது. ச‌ரி செல்வ‌ராஜ் எடுத்துக்கொடுத்த‌ "அய்ய‌ன்" ஐ சாக்கா வெச்சு ஒரு "அய்ய‌ன்" தொட‌ர் எழுத‌லாம்னு. "அய்ய‌ன்" ஐ அவ‌ருக்கொச‌ர‌ம் ம‌ட்டுமில்லாம‌ என் ம‌ன‌சுல‌ ஆழ‌ப் புதைஞ்சுபோன‌ அந்த‌ வாழ்க்கைய‌ ஒரு த‌ர‌ம் திருப்பிப் பாத்துக்க‌வும், அதுக்குள்ள‌ பொக்கிச‌மா ம‌றைஞ்சு நிக்க‌ற‌ "குமுனி", 'க‌ண்ணுவ‌லிப் பூவு" ம‌ழை பேஞ்ச‌ காத்தால‌ ஊறித் திரிஞ்ச‌ "மொட்டைப் பாப்பாத்தி", "தாரை", "த‌ப்ப‌ட்டை", "கொம்பு" இப்ப‌டியான‌ வார்த்தைக‌ளை, அதுக்குப் பின்னான‌ ஞாப‌க‌ங்க‌ளை மீட்டுக்க‌வும் எழுத‌லாம்னு யோச‌னை. "அது ச‌ரி நீதானே? ‌ எழுதுன‌ பொற‌வு ந‌ம்ப‌லாம்" ங்கறீங்க‌ளா?" அப்ப‌டியும் வெச்சுக்க‌லாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-6231718316703417679?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/6231718316703417679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=6231718316703417679' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6231718316703417679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6231718316703417679'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/07/blog-post_16.html' title='அய்ய‌னை எழுத‌லாமா?'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-7157164164687767687</id><published>2009-07-10T16:37:00.002-05:00</published><updated>2009-07-10T16:46:36.548-05:00</updated><title type='text'>சமூக உணர்வு</title><content type='html'>&lt;a href="http://metyouth.ca/markhauch/wp-content/uploads/2009/05/loneliness-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 450px; height: 300px;" src="http://metyouth.ca/markhauch/wp-content/uploads/2009/05/loneliness-2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மம் முளைவிட்டிருந்தபோதுதான்&lt;br /&gt;அவனைக் கல்லால் அடித்துத் தெறித்த‌&lt;br /&gt;குருதியைக் கண்களால் குடித்திருந்தேன்&lt;br /&gt;இரவில் சீதை ஒருவளை வேசியாக்கி&lt;br /&gt;பகலில் குன்றேறி ஏகபத்தினிவிரதம்&lt;br /&gt;உரைத்தவனைக் கல்லால் அடிப்பதே&lt;br /&gt;நீதியென்று ராமன் கிருஷ்ணன் சிவன்&lt;br /&gt;சீனிவாசன் எல்லோருக்கும் சொல்லியும் வைத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்றோடு பதினேழு முடிந்ததென்று&lt;br /&gt;அம்மா சொன்ன திகதியில்கூட‌&lt;br /&gt;உள்ளூர் தபாலலுவலகத்தில்&lt;br /&gt;உதவித்தொகை கேட்டு நின்ற கிழவியை விட்டு&lt;br /&gt;பொண்டாட்டியோடு தொலைபேசியில்&lt;br /&gt;கொஞ்சிக்கொண்டிருந்த அலுவலனை&lt;br /&gt;சட்டை பிடிக்கப்போனேன்&lt;br /&gt;எனக்கான "ரௌடி" பெயரை&lt;br /&gt;ஊருக்குள் முன்மொழிந்தவன் அவனாகத்தான் இருக்கவேண்டும்&lt;br /&gt;நான் புளிய‌ம‌ர‌த்துக் க‌ல்லுக்க‌டைப்ப‌க்க‌மாய் ந‌ட‌ந்துபோகையில்&lt;br /&gt;குடிகார‌ன்க‌ளும் அவ‌ச‌ர‌மாய் வ‌ரிசையமைத்தார்கள்&lt;br /&gt;அஞ்சு பைசா சில்ல‌ரை பாக்கிக்கு ந‌ட‌த்துன‌ரோடு&lt;br /&gt;பேர் இல்லாத‌துக்கு ஓட்டுச்சாவ‌டியாட்க‌ளோடு&lt;br /&gt;எதிரில் வ‌ந்த‌ எம் எல் ஏவோடு&lt;br /&gt;யாருக்காக‌வேனும் எப்போதும்&lt;br /&gt;ச‌ண்டையிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழெட்டு வேலை, ஊர் மாற்றீ&lt;br /&gt;இன்று அந்த முனீஸ்வர‌ன் கோயிலருகே &lt;br /&gt;ஒரு பைத்திய‌த்தை நாலுபேர்&lt;br /&gt;அடித்துக்கொண்டிருக்க‌ நான்&lt;br /&gt;வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறேன்&lt;br /&gt;சாலையையும் அனைத்தையும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-7157164164687767687?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/7157164164687767687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=7157164164687767687' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/7157164164687767687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/7157164164687767687'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/07/blog-post.html' title='சமூக உணர்வு'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8424048779164083342</id><published>2009-06-25T01:17:00.004-05:00</published><updated>2009-06-25T01:35:06.574-05:00</updated><title type='text'>சீனாவிலும் பெண்கள் இப்படித்தான்... ஜெயந்தி சங்கரின் நூலும் என் எண்ண இடைச்செருகல்களும்</title><content type='html'>&lt;a href="http://en.gamers.com/_file/news/1087/20080814014245dboF.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 445px; height: 597px;" src="http://en.gamers.com/_file/news/1087/20080814014245dboF.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் வழமைபோல் கோடையைச் சூடிக்கொண்டுவிட்டன. இம்மாதங்களில் மட்டும் பறந்து &lt;br /&gt;திரியும் குருவிகள் சிலவும் வருடம்போலவே வந்துவந்து சன்னலுக்கருகில் சத்தமெழுப்பியே &lt;br /&gt;போகின்றன. எல்லாம் இருந்தும் இந்தக் கோடை பசுமையைக் கொண்டாடும் மனநிலையை &lt;br /&gt;வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. சிலமாதங்களாய்ப் பதைபதைப்புடனும், இன்னபிற &lt;br /&gt;கையாலாகத் தனங்களோடும் செய்திகளை மட்டும் வாசித்துக் கடைசியில் இன்னும் &lt;br /&gt;மோசமான உணர்வுகளுக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கும் தமிழர்களில் ஒருத்தியாக நானும். &lt;br /&gt;எப்போதாவது தொலைதூர ஈழத்து நண்பர்கள், தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி &lt;br /&gt;அழைப்புகளில் கூட என்ன பேசுவதெனத் தெரியாத தடுமாற்றங்களே எஞ்சுகின்றன. . &lt;br /&gt;இலக்கியம், கவிதை, ஈரம், நேசம், மனிதாபிமானம், உயிராபிமானம், லொட்டு, லொசுக்கு&lt;br /&gt;இன்னபிறவெல்லாம் எழுதவும், படிக்கவும் சுவைகூட்டுகின்றனவேயொழிய நடைமுறையில் &lt;br /&gt;எவ்வளவுதூரம் சாதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்து உலகம் முழுமையும் வெறுமையால் &lt;br /&gt;சூழப்பட்டதான காட்சியைச் சில கணங்களில் விரித்துப் பின் தன்னுள் சுருங்குகிறது. &lt;br /&gt;இருந்தும் எழுதவே செய்கிறோம். ஏனென்றால் எழுத்து சில சமயம் ஆத்மதிருப்தியைத் &lt;br /&gt;தருகிறது. உள்ளே உருண்டுபுரளும் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கிறது. எழுத்தை &lt;br /&gt;அருந்திப் பழகியவருக்கு அது ஒரு போதையாகக்கூடப் போய்விடுகிறது. ஒருசிலநேரம் நம் &lt;br /&gt;இருத்தலுக்கான அச்சுறுத்தல்களுக்கு ஒரு எதிர்ப்பாகவும் எழுத்தை ஏந்தலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக் குறித்து மேற்சொன்ன எண்ணங்களெல்லாம் இருந்தாலும் நாளைத் &lt;br /&gt;தொடங்குகிறபோது வாசிக்கிற செய்திகளும் பிறகு அவை தருகிற உணர்வுகளின் &lt;br /&gt;அலைக்கழிப்பிலும் உழலும் மனதை வைத்துக்கொண்டு எழுதும் எதிலும் உருப்படியாகச் &lt;br /&gt;சொல்லமுடிந்ததும் ஒன்றுமில்லையென்றே தோன்றுகிறது. இந்த ஒழுங்கற்ற நாட்களுக்கு &lt;br /&gt;நடுவே புத்தகம் படிக்கலாமென்ற எண்ணம் தோன்றியது. கி.மு, கி.பி மாதிரி புத்தக &lt;br /&gt;நேசத்தின் அடர்த்தியைக் க.மு (கணினிக்கு வரும் முன்), க.பி (கணினிக்கு வந்த பின்) என்ற கால வரையறை கொண்டே அளக்க வேண்டியிருக்கிறது. க.பி அந்த நேசத்தை ஒரு &lt;br /&gt;அடர்ந்த இருட்டுக்குள் தள்ளிவிட்டது போலவே இருக்கிறது. ஊரிலிருந்து உறவினர்களால் &lt;br /&gt;அன்போடு கொடுக்கப்பட்ட வடக வகைகளையெல்லாம்கூட இரக்கமின்றிப் புறக்கணித்துப் &lt;br /&gt;பெட்டிநிறைய எடுத்துவந்த புத்தகங்கள் இங்கே தூசியோடு பேசிக்கொண்டு வருந்துவதைப் &lt;br /&gt;பார்க்கும்போது நிச்சயமாய் ஒரு சுய சுத்திகரிப்பு செய்தாகவேண்டுமென்றே படுகிறது. &lt;br /&gt;வலிந்து நாளிடமிருந்து நேரத்தைப் பிடுங்கிக்கொண்டு புத்தகமொன்று தேடியபோது ஜெயந்தி &lt;br /&gt;சங்கரின் "பெருஞ்சுவருக்குப் பின்னே" கைகளில் அகப்பட்டது. அது வெளியிடப்பட்டதும் &lt;br /&gt;ஜெயந்தியால் அனுப்பிவைக்கப்பட்டு இரு வருடங்களுக்கு முன்பே ஒருமுறை &lt;br /&gt;வாசித்துவிட்டிருந்தேன். என்றாலும் மீண்டும் வாசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் 2003 வாக்கிலேயே குடிபுகுந்தவர்களுக்கு ஜெயந்தி சங்கரை நன்கு &lt;br /&gt;பரிச்சயமிருக்கலாம். அப்போதிருந்த மிகச்சில பெண்பதிவர்களில் அவரும் ஒருவர். &lt;br /&gt;சிறுகதைகள், குறுநாவல், நாவல், கட்டுரைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என இதுவரை பல &lt;br /&gt;நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் படைப்புகளில் என் மனதுக்கு மிக நெருக்கமாக &lt;br /&gt;உணர்ந்தது "பெருஞ்சுவருக்குப் பின்னே" நூல். சிங்கப்பூர்வாசியான ஜெயந்திக்கு அங்கே &lt;br /&gt;சீனர்களின் மொழி, வாழ்வியல், வரலாறு குறித்த ஆர்வமும், தேடலும் ஏற்பட்டதே &lt;br /&gt;இந்நூலுக்கு வித்திட்டிருக்கிறது. இந்தநூல் முழுதும் சீனவரலாற்றில் பெண்களின் நிலை &lt;br /&gt;குறித்த ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோற்றங்கள், தோல்நிறம், மொழி, இடம், இனம் மாறினாலும் 'பெண்" என்னும் சொல்லின் &lt;br /&gt;வரையறை எந்த ஒரு வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. எல்லா இடங்களிலும் &lt;br /&gt;அவளுக்கான வரையறை  "ஆணுக்குக் கட்டுப்பட்டு, ஆனுக்காக வாழ்" என்பதே. &lt;br /&gt;கட்டப்பட்டிருந்த நூல்களும், அடைக்கப்பட்டிருந்த சிறைகளும் வண்ணங்களால் &lt;br /&gt;வேறுபட்டிருந்தாலும் "அடிமைத் தத்துவம்" காக்கப்பட்டே வந்திருக்கிறது. சீனப் பெண்கள் &lt;br /&gt;மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியுமா என்ன? நீண்டு நிற்கும் பெருஞ்சுவர் சீனாவுக்கான &lt;br /&gt;அடையாளம். அந்தப் பெருஞ்சுவருக்குப் பின்னான பெண்களின் இருண்ட வாழ்வு குறித்துப் &lt;br /&gt;பேசுகிறது இந்நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனப்பெண் சிறு அறிமுகம் என்பது தொடங்கி,  மதங்களால் உருவாக்கப்பட்ட பெண் , &lt;br /&gt;பெண்களுக்கான சமூகப்பாடங்கள், மரணித்த பாதங்கள் இலக்கியத்தில், அரசியலில், &lt;br /&gt;கல்வியில், தற்காலத்தில் சீனப்பெண்களின் பரிமாணங்கள், புலம்பெயர்நாடுகளில் அவர்களின்&lt;br /&gt;வாழ்வியல், சாதனைகளில் சீனப்பெண்கள் எனக் கிட்டத்தட்ட 40 தலைப்புகளில் மிகுந்த &lt;br /&gt;நுணுக்கங்களோடும், உண்மைகளோடும், அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"திறமையற்ற பெண்தான் நற்குணமுடையவள்", "மகள்களை வளர்ப்பதைவிட வாத்துக்களை&lt;br /&gt;வளர்ப்பது மேல்" போன்ற சீனப்பழமொழிகளிலும், "பெண்ணாயிருப்பது எத்தனை &lt;br /&gt;வருந்தத்தக்கது!! பூமியில் வேறெதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை, ஆண்கள் வாயிற்கதவில் &lt;br /&gt;சாய்ந்துநிற்பது சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்ததுபோல், நான்கு கடல்களையும் &lt;br /&gt;வீரத்துடன் எதிர்கொள்வான், ஆயிரம் மைலகளுக்கு காற்றையும் தூசியையும்கூட, &lt;br /&gt;பெண்பிறந்தால் யாருக்கும் பிடிக்காது" என்று தொடங்கும் சீனப்பழங்கவிதையொன்றிலும் &lt;br /&gt;ஆரம்பித்த்டிருக்கிறார் ஜெயந்தி சீனப்பெண்களுக்கான அறிமுகத்தை. அங்கும் &lt;br /&gt;தந்தைவழிச்சமூகம் ஆரம்பித்த காலத்தேதான் பென்ணடிமைத்தனம் தன் வேர்களைத் திறம்பட &lt;br /&gt;ஊன்ற ஆரம்பித்திருக்கிறது. தாவோவும், பௌத்தமும் கொண்டிருந்த பெண்மீதான &lt;br /&gt;அணுகுமுறை மற்றும் முடியாட்சிக்கால நிலை என எங்கும் பெண்ணுக்கு இருண்டகாலமே. &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் போற்றும் தத்துவஞானி கன்பூசியஸ¤க்கும்கூடப் பெண் கடைநிலைதான் என்பது &lt;br /&gt;வருந்தத்தக்கதெனினும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனென்றால் இங்கே பிதாமகன்கள் என்று &lt;br /&gt;பேசப்படுகிற பல கொம்பர்களுக்கும்கூடப் பெண் அவர்களுக்கான ஒரு சேவகி மட்டுமே &lt;br /&gt;என்பது வரலாற்று உண்மை.ஆண் கன்பூசியஸை விட்டுப் பெண்கன்பூசியஸ் என்று கொண்டாடப்பட்ட சீனப் பெண் அறிஞர் பான் ஜாவ் பெண்களுக்கு என்ன சொன்னார் என்று பார்த்தாலுமே நம்முடைய "தையல் சொல் கேளேல்"  பாணியாக இருக்கிறது. அச்சம், மடம், நாணப் பாடங்களைத்தான் பான் ஜாவும் எடுத்துத் தொலைக்க வேண்டிய சிந்தனை அவலத்தை அச்சமூகம் ஊட்டி வளர்த்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்காக வார்க்கப்பட்ட பெண்களைச் சீனச் சமூகத்திலும் கண்டறிந்து பல்வேறு &lt;br /&gt;பழக்கவழக்கங்கள், வரதட்சணை, குடும்ப நிகழ்வுகள் எனப்பலவற்றையும் விட்டுவிடாது &lt;br /&gt;விளக்கியிருக்கிறார் ஜெய்ந்தி. என்னை மிகவும் பாதித்த அங்கத்தைய பழக்கம் ஒன்று &lt;br /&gt;"மரணித்த பாதங்கள்" என்ற தலைப்பில் கட்டுரையாக்கப்பட்டிருக்கிறது. "பெண்ணின் உடலும் &lt;br /&gt;ஆணுடையதே" என்ற சமன்பாட்டைப் பலசமூகங்களும் நிறுவியே வந்திருக்கிறது. &lt;br /&gt;பழஞ்சீனச்சமூகத்தில் பெண்ணின் பாதங்கள் ஆணுக்கு இச்சையைத் தூண்டுவதாகவும், &lt;br /&gt;அவன் அழகின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் அவன் எதிர்பார்க்கும் அளவுகளில் சிறியதாக &lt;br /&gt;இருக்கவேண்டுமாம். அதற்காகப் பெண்கள் பாதங்களை இறுக்கி, மடக்கிக் &lt;br /&gt;கட்டிக்கொள்வார்களாம் அதன் வளர்ச்சியைத் தடுக்க. இதுவேறு ஒரு சடங்காக &lt;br /&gt;நடத்தப்படுமாம். முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்பட்டுப் பின் எலும்பையும், தசையையும் மென்மையாக்க மூலிகை காய்ச்சிய சுடுநீரில் காலை ஊறவைத்துக் கடைசியில் &lt;br /&gt;கட்டைவிரலை மட்டும் விட்டு மீதி விரல்களையெல்லாம் உள்ளே தள்ளி இறுக்கிக் &lt;br /&gt;கட்டிவிடுவார்களாம். அப்படிக் கட்டிய பாதங்களோடே சிலவருடங்கள் நடந்தால் பாத &lt;br /&gt;வளர்ச்சி தடுக்கப்பட்டுச் சிறியதாகவே இருக்குமாம். இவ்வளவு பெரிய வன்முறை 20ம் &lt;br /&gt;நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்துவந்துள்ளது என்பது உபகுறிப்பு. இப்படியெல்லாம் &lt;br /&gt;ஒருவனுக்காகச் சிரமப்பட்டுச் சிறியபாதங்கள் கொண்டு கல்யாணம் கட்டித்தான் &lt;br /&gt;தொலைக்கவேண்டுமா என்றால் "செத்தபின் அவளின் கல்லறையைப் பராமரிக்க கணவனோ, &lt;br /&gt;வாரிசுகளோ இல்லாதுபோனால் அவள் மோட்சம் அடைய முடியாது" என்பது இன்னொரு &lt;br /&gt;எழவெடுத்த நம்பிக்கையாம். உண்மையில் இந்தக்கட்டுரையை இரண்டாவது முறையாக &lt;br /&gt;வாசிக்கும்போதும் நான் உணர்ச்சிவயப்பட்டேன். நம்மை மாதிரி ஆட்கள் அங்கே பிறந்து &lt;br /&gt;தொலைந்திருந்தால் நிச்சயமாக மோட்சமே கிடைத்திருக்காதே என்ற எண்ணமும் &lt;br /&gt;வந்துபோனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரும் இடிகளுக்கு நடுவிலும் சின்ன மழையொன்று சிதறி விழுவதைப்போல் &lt;br /&gt;இத்தனை இடர்ப்பாடுகள் நிறைந்த சமூக அமைப்பிலும் தடைகளைத்  தாண்டிச் சாதித்த &lt;br /&gt;பெண்களும் உண்டுதான். அப்படி வெளிப்பட்ட முதல் சீனப்பெண் விமானி உள்ளிட்ட &lt;br /&gt;இன்னும் சில முதல்பெண் வகையராக்களையும், சமீபத்திய சட்ட, சமூக மாற்றங்களையும் &lt;br /&gt;கூடக் கோடிட்டுக் காட்டிச் சில நம்பிக்கைகளையும் விதைத்து முடிகிறது நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்நூல் சொல்லியவை ஏராளம். அவ்வகையில் இதை ஒரு படிக்கவேண்டிய நூல் &lt;br /&gt;என்பேன். புத்தகம் குறித்து முதல்முறை வாசித்தபோதே தனிப்பட்ட முறையில் என் &lt;br /&gt;நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன் எனினும் அது குறித்து இங்கே எழுத நினைக்கையில் சில&lt;br /&gt;தயக்கங்கள் இருந்தன. அதில் முக்கியமானது ஜெயந்தி என் நண்பர் என்பது. எனது &lt;br /&gt;கருத்துத் தளங்கள் சிலவோடு ஜெயந்திக்கு இடைவெளிகள் இருக்கலாம், என்றாலும் &lt;br /&gt;இணையத்தில் நான் நெருங்கிப்பேசும் சுகமான சொற்ப நட்புகளில் அவர் இருக்கிரார். &lt;br /&gt;நண்பர்களின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழுதுவதில் சில அகவயப்பாட்டுச் சிக்கல்கள் &lt;br /&gt;உள்ளன. அதில் ஒன்று வெறும் சொரிதலாய் முடிந்துவிடக்கூடும் என்பது. ஆனால் &lt;br /&gt;இரண்டாவது முறையாகவும் வாசித்தபின்பு ஜெயந்தியை மறந்து அந்தப்பிரதி தனக்குள் &lt;br /&gt;மட்டும் என்னை வைத்திருந்தது. எனவே எழுத நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் ஜெயந்திக்கு இந்தப்பிரதியின் வாசகியாக மட்டும் சொல்ல நினைப்பது &lt;br /&gt;"சிந்திக்கிற, எழுத விரும்புகிற எல்லாப்பெண்களும் தாம் நினைக்கும் தூரம்வரை &lt;br /&gt;வந்துசேர்ந்துவிடுவதில்லை. இடையில் வீடு இழுத்துவிடுகிற, சமூகச் சேறு விழுங்கிவிடுகிற &lt;br /&gt;சோகங்கள் உண்டு. எல்லாம் தாண்டி வந்தபின்னும் எத்தனைபேருக்கு உண்மையான சமூக &lt;br /&gt;அக்கறை இருக்கமுடியும் என்பதும் சொல்வதற்கில்லை. விகடனிலும், குமுதத்திலும் ஒரு &lt;br /&gt;காதல் அல்லது சாதல் கதை வந்த கையோடு அந்த வெளிச்சத்திலேயே தன் ஆயுளைக் &lt;br /&gt;கரைத்துக்கொள்கிறவர்களும் உண்டு. அப்படியின்றி எழுதக் கிடைத்த வாய்ப்பை &lt;br /&gt;சமூகநேசத்தின்பாலும் செலுத்த முடிவது சிறப்பானது. நீங்கள் பெருஞ்சுவருக்குப் பின்னே &lt;br /&gt;எழுத நினைத்ததில் அப்படியொரு நேசம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே என் கணிப்பு. &lt;br /&gt;அதை நீங்கள் தொடரவேண்டும். இரண்டாவது நானறிந்தவரை தற்கால சமூக நிகழ்வுகளில் &lt;br /&gt;அது பெண் சம்பந்தப்பட்டதே எனினும் ஒரு எழுத்தாளராக அல்லது பெண் எழுத்தாளராக&lt;br /&gt;உங்களின் குரலை நான் கேட்டதில்லை. கேட்க விரும்புகிறேன். சீனப் பெருஞ்சுவரையும் &lt;br /&gt;தாண்டி விடயங்கள் சேகரிக்கும் ஜெயந்தியின் எழுத்து மனம் மற்ற தேவையான &lt;br /&gt;நேரங்களிலும், இடங்களிலும்கூடத் தன் மௌனம் உடைத்து வெளிவரவேண்டும் அதன் &lt;br /&gt;சாதக பாதகங்கள் பற்றிய பிரக்ஞைகள் இன்றி." நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8424048779164083342?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8424048779164083342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8424048779164083342' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8424048779164083342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8424048779164083342'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/06/blog-post_25.html' title='சீனாவிலும் பெண்கள் இப்படித்தான்... ஜெயந்தி சங்கரின் நூலும் என் எண்ண இடைச்செருகல்களும்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-1883916296660178982</id><published>2009-06-22T06:54:00.000-05:00</published><updated>2009-06-22T07:08:02.822-05:00</updated><title type='text'>மயானம்</title><content type='html'>அந்த பூமி பளிங்கு போல் சுத்தமாகிவிடவில்லை&lt;br /&gt;ஆனால் இங்கிருந்த பெரிய குப்பைத்தொட்டிகளின் தேவை அங்கு குறைந்திருந்தன&lt;br /&gt;சிந்திக்கிடந்த இரத்தங்களிலிருந்து இனிய மணம் கமழ்ந்துகொண்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கத்தைய வாசனைதிரவியங்களும் அவற்றின் வியாபாரங்களும் &lt;br /&gt;பார்க்கக்கிடைக்கவில்லை என்றாலும்&lt;br /&gt;அந்தச் சுடுகாட்டில் செடிகள் பூத்துக்குலுங்கின&lt;br /&gt;உண்மையின் கானம் ஒலித்துக்கொண்டிருந்தது&lt;br /&gt;அன்பானவர்கள் உள்ளம் உருக்கி முத்தமிட்டுக்கொண்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அங்கங்கு கத்திகள், ஈட்டிகள், கொடும்வாள்கள்&lt;br /&gt;இறைந்து கிடந்தன&lt;br /&gt;அவற்றிலிருந்து இங்கில்லாத அதிசயமாய் இரக்கம் கசிந்துகொண்டிருந்தது&lt;br /&gt;வீழந்துகிடந்த பிணங்கள் எதுவும் மறைக்கப்படவில்லை&lt;br /&gt;பாதுகாக்கப்படவில்லை, அவை அழுகவுமில்லை&lt;br /&gt;தங்கள் மரணத்தின் மகிழ்ச்சியை அவை&lt;br /&gt;கொண்டாடுவதாகத் தோன்றின&lt;br /&gt;பெண்ணை வரைந்துகொண்டிருந்த தூரிகை ஒன்றுகூட&lt;br /&gt;அவள் கண்களிலிருந்து ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுள்கள் மட்டும் கொலைசெய்யப்பட்ட பூமிக்குப் போய்வந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-1883916296660178982?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/1883916296660178982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=1883916296660178982' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/1883916296660178982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/1883916296660178982'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/06/blog-post_22.html' title='மயானம்'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-5978740687357229930</id><published>2009-06-20T00:50:00.002-05:00</published><updated>2009-06-20T00:56:19.848-05:00</updated><title type='text'>சந்திப்புகளற்ற வருகை</title><content type='html'>&lt;a href="http://www.weiland.net/assets/content//images/Buzzard.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 427px;" src="http://www.weiland.net/assets/content//images/Buzzard.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நீ வந்திருந்தாய். &lt;br /&gt;உன் முன்னே முழுக்க நானிருந்தும் &lt;br /&gt;சுவற்றில், கதவுகளில், &lt;br /&gt;மேலே கூரையில் ஓடிக்கொண்டிருந்த சிலந்தியில்&lt;br /&gt;நான் துடைக்க மறந்திருந்த பூச்சாடியில் &lt;br /&gt;எதையோ தேடிக்கொண்டிருந்தாய். &lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒரு எழுத்துக்காரன்&lt;br /&gt;பிரம்மா தேவதைப் பெண்களுக்கு&lt;br /&gt;பொருத்தமான அவயங்கள் படைக்க எடுத்துக்கொள்ளும்&lt;br /&gt;மெனக்கெடல்களைவிடவும் உன் படைப்புகளில்&lt;br /&gt;சொற்களைச் செருக நீ பிரயத்தனப்படுவதாகவும்&lt;br /&gt;அதனால்தான் உன் படைப்புகள் தேவதைகளைவிடவும்&lt;br /&gt;வனப்புடையவையென்றும்&lt;br /&gt;உன் துதிபாடி ஒருவன் எங்கோ ஒரு மேடையில்&lt;br /&gt;எதையோ குடித்தவனாய் உளறிக்கொண்டிருந்தான்&lt;br /&gt;என் எழுத்துக்களை என் மனம்திறந்து &lt;br /&gt;எப்போதேனும் வாசித்திருக்கிறாயா நீ?&lt;br /&gt;அல்லது எனக்கும் எழுதவரும் என்பதை யோசித்தாவது?&lt;br /&gt;&lt;br /&gt;நீ பயனங்கள் போயிருந்த எனக்கான நாட்களில்&lt;br /&gt;உலகம் சந்தித்த துக்கங்கள், மகிழ்ச்சிகள்&lt;br /&gt;நானும் அறிந்தேன்தான் ஆனாலுமென்ன&lt;br /&gt;ஆயிரம் மைல்கள் தாண்டிய உன் நண்பனோடே நீ விவாதி&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;"மனிதர்கள் கற்களாய் மிதிபட்டிருந்த பரப்பொன்றில்&lt;br /&gt;அவன் ஒரு சிற்பியாய் சனித்திருந்தான்&lt;br /&gt;கற்களுக்குள் சிற்பக்கனவுகள் குடிபுகுந்தன&lt;br /&gt;சிற்பியை இழந்த பிறகோ&lt;br /&gt;சிற்பங்களும் கற்களாகின"&lt;br /&gt;கவிதையும் எழுதி எங்கேனும் பிரசுரிக்கப்பார்&lt;br /&gt;அதைப்படித்தழுத கண்ணீரால் தன் விழிகள் சிவந்ததென&lt;br /&gt;இன்னொருவன் வியந்தோதுவான் வீணாக்காதே&lt;br /&gt;அதிலிருந்தும் மை எடுத்துக்கொள் மீண்டும் எழுத&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளின் நலம் விசாரித்து&lt;br /&gt;உண்டு உறங்கியாயிற்று&lt;br /&gt;உட்காராதே தோய்த்த உடுப்பணிந்து உடனே கிளம்பு&lt;br /&gt;கூட்டம் காத்திருக்கும்&lt;br /&gt;உனக்கான பட்டமொன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;கையசைத்து நீ வெளிக்கிளம்பிய பின்பே&lt;br /&gt;வெளிப்பட முடியும்&lt;br /&gt;ஒவ்வொருமுறை வீட்டிற்குவந்தும்&lt;br /&gt;நீ சந்திக்காது விட்டுச்செல்கிற&lt;br /&gt;என்னிலிருந்து நானும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-5978740687357229930?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/5978740687357229930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=5978740687357229930' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/5978740687357229930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/5978740687357229930'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/06/blog-post.html' title='சந்திப்புகளற்ற வருகை'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8381094304466403186</id><published>2009-05-13T02:02:00.002-05:00</published><updated>2009-05-13T02:08:30.650-05:00</updated><title type='text'>ஈழம்.....வெறும் சத்தமிட்டுப் பின் சாகப்பிறந்தவர்களா நாம்?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_RCjqHtwxduI/SdIAPSCORoI/AAAAAAAAANA/3IR49Ks-sy8/s400/eagle.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://4.bp.blogspot.com/_RCjqHtwxduI/SdIAPSCORoI/AAAAAAAAANA/3IR49Ks-sy8/s400/eagle.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம்..... ஏதோ ஒரு பழம் கூவி விற்கும் வியாபாரம் போல் திரும்பும் திசையெல்லாம் &lt;br /&gt;எதிரொலிக்கிறது இந்தச் சொல். ஆனால் அங்கே மக்கள் இன்னமும் காலில் நசுங்கும் &lt;br /&gt;பழங்களாய் சதைகள் தெறிக்கச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பலநாட்களாய் மனதில் &lt;br /&gt;மோதும் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்கும் முயற்சி வெற்றியைத் தந்ததில்லை. &lt;br /&gt;ஆனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த நண்பர்களின் இடுகைகளை வாசித்தே வந்தேன்.&lt;br /&gt;எங்கும் பின்னூட்டம் இடக்கூடத் தெம்பு இல்லாமலே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல &lt;br /&gt;பசிக்கிறதோ இல்லையோ மூன்று வேளை உணவு, இடைக்கிடை தேநீர் அதற்கும் ஒரு தீனி &lt;br /&gt;என உண்டு உறங்கிப் பின் தின்றவை செரிக்க என்னைச் சுற்றிய சாலைகளில் &lt;br /&gt;ஓடிக்கொண்டிருக்கும் தமிழர்களின், (மனிதர்களின் என்றும் போட்டுக்கொள்ளலாம்) &lt;br /&gt;கூட்டத்தில் முழுக்க அப்படியில்லாவிட்டாலும், முக்கால் வீதம் அந்த அடையாளங்களில் &lt;br /&gt;எதும் குறைச்சலில்லாமல் அனுபவித்துத் திரிகிற நாம் அவர்களின் அவலங்களுக்கு மருந்து &lt;br /&gt;சொல்வது அருகதையுடையதுதானா என்று எழும்பும் கேள்வியும் என்னை எழுதவிடாமல் &lt;br /&gt;அடக்கியே வைத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுத் தமிழ்சசியின் பதிவில் பின்னூட்டமிட்டது எல்லாவற்றையும் தாண்டி உந்தித் தள்ளிய &lt;br /&gt;ஏதோவொரு காரனம்தான். ஈழம் குறித்த தொடர் இடுகைகளை  தமிழ்வலைப்பரப்பில் &lt;br /&gt;தொடர்ந்து எழுதிய சிலரில் அவரும் ஒருவர். அது எனக்கெல்லாம் தந்த புரிதல்களும் &lt;br /&gt;அதிகம். அப்படியானவர்தான் நேற்று 'போதுமடா ஈழப்போராட்டம்" என்று ஈழவிடுதலைக்கான &lt;br /&gt;போர் இனியும் சாத்தியமில்லை, அங்கிருக்கிற மக்கள் அமைதியாக வாழ மட்டும் ஏதேனும் &lt;br /&gt;செய்யவேண்டும் என்கிற பொருளில் அதற்கான காரணங்களை விளக்கிப் பதிவு &lt;br /&gt;செய்திருந்தார். அவ்விடுகைக்கு வந்த விமர்சனங்கள் பலவும் அவரை, உண்மை நிலையைப் &lt;br /&gt;புரிந்துகொள்ளாததால் வந்தவை என்று இன்று தன் நிலையை மீண்டும் விளக்கி ஒரு இடுகை &lt;br /&gt;இட்டிருக்கிறார். தான் எப்படி எந்த ஒரு உணர்வின் மிகுதியிலும் இன்றித் தெளிவாகவே &lt;br /&gt;அப்பதிவை இட்டதாய்ச் சொல்கிறாரோ அதேபோல் அங்கே அவரை &lt;br /&gt;விமர்சித்திருப்பவர்களும்கூட(ஒருசில உணர்ச்சிக் குவியல்கள் தவிர்த்து) அப்படியான ஒரு &lt;br /&gt;நிலையிலேதான் பின்னூட்டங்களை எழுதியிருக்க வேண்டும் என்பதையும் சசி &lt;br /&gt;ஏற்றுக்கொள்ள வேண்டும். வானதி உள்ளிட்டவர்களின் மறுமொழியில் உள்ள குறிப்புகள் &lt;br /&gt;சசியின் ஈழக்காதலைக் கேள்விக்கு உட்படுத்துபவை அல்ல, இப்போதைய அவரின் &lt;br /&gt;நிலைப்பாட்டின் மீதான ஆதங்கமே என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தை எழுதும்போதெல்லாம் சிங்களப் பேரினவாதத்தை அதற்குத் துணைபோனோரை &lt;br /&gt;எதிர்த்துக் கேள்வி கேட்டதோடு மட்டுமே நிறுத்திக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் &lt;br /&gt;விழுங்கி அங்கே விடுதலைக்கென்று போராடிக்கொண்டிருந்த ஒற்றை இயக்கமான &lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தவறுகளை, தலைமையின் தவறுகளையும் &lt;br /&gt;அப்போதைக்கப்போதே சுட்டிக்காட்டவும், அந்தப்பாதை எப்படியானதொரு அழிவில் &lt;br /&gt;கொண்டுபோய் நிறுத்தும் என்பதை எச்சரிக்கவும் நம்மில் எத்தனை பேர் தயாராக &lt;br /&gt;இருந்தோம்? அப்படி எச்சரித்த சிலரைக்கூட நாம் எப்படி எதிர்கொண்டோம்? &lt;br /&gt;உள்நோக்கத்தோடு விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டி தமிழின உணர்வுக்கு எதிராகச் &lt;br /&gt;சதிராடியவர்களை விடுவோம், நம்மைப்போலவே ஈழவிடுதலை விரும்புபவர்களேயானாலும் &lt;br /&gt;அவர்கள் புலிகளை விமர்சித்தால் அதை முன்னெடுத்து அலசத்தான் நாம் எவ்வளவுதூரம் &lt;br /&gt;ஆர்வம் கொண்டிருந்தோம்? அப்படியான நேரங்களில் எல்லாம் ஒரு புள்ளியைத் தெரிந்தே &lt;br /&gt;விவாதிப்பது தவிர்த்து வந்துவிட்டு இன்று சாவின் விளிம்பில், கால்நூற்றாண்டு காலம் &lt;br /&gt;எதற்காகக் கனவு கண்டோமோ அவையே தகர்கின்றனவே என்ற கவலையில், தூக்கி &lt;br /&gt;வளர்த்தவர்கள், துணையாய் இருப்பதாய்ச் சொன்னவர்கள் எனப் பலராலும் கைவிடப்பட்டுத் &lt;br /&gt;தன் காயங்களோடும், கடைசி மூச்சோடும்கூட,  விடாது துரத்தும் இராணுவத்தை எதிர்த்துத் &lt;br /&gt;துவளத் துவளப் போராடிக்கொண்டிருப்பவனைப் பார்த்து "போதும், உன்னாலும்தான் மக்கள் &lt;br /&gt;சாகிறார்கள். உன் போராட்டத்தை மூட்டை கட்டு, விடுதலையும் வேண்டாம், ஒன்றும் &lt;br /&gt;வேண்டாம்" என நாம் ஏதோ ஒரு சலிப்பில் சொல்லிக் கடப்பது எவ்வளவு தவறானது? &lt;br /&gt;இப்படிச் சொல்வதற்குப் பதிலாய் சர்வதேச சமூகத்தை, ஐ.நா சபையை, மனித உரிமை &lt;br /&gt;அமைப்புகளைப் போர்ப் பகுதிக்குள் அனுமதித்து மக்களை அவர்கள் விடுதலைப்புலிகளின் &lt;br /&gt;கட்டுப்பாட்டிலிருந்தாலும் மீட்டுக்கொண்டு வரச்சொல்லி முடிந்தவாறெல்லாம் நாமும் &lt;br /&gt;வீதிகளில் இறங்கிப் போராடலாம். மாபெரும் மக்கள் துணையோடு அதைத் தீவிரமாகச் &lt;br /&gt;சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் செய்து பார்க்கலாம். விடுதலைப்புலிகள் இயக்க &lt;br /&gt;அரசியல் பொறுப்பாளர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் சர்வதேசப் &lt;br /&gt;பார்வையாளர்களை வந்து பார்க்குமாறு. ஆனால் தன் பரிவாரம் தவிர ஒரு ஈ, எறும்பைக்கூட உள்ளே விடாமல் மக்களையும் புலிகள் என்றே வேட்டையாடி வருகிறது ஒரு கொடும் அரசாங்கம். இதில் எந்த நம்பத் தகுந்த வட்டாரங்களைச் சசி மேற்கோள் காட்டுகிறார் &lt;br /&gt;என்பது புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையை விட்டுவிட்டு மக்களின் அமைதிக்கான அரசியல் போராட்டம் நடத்தலாம் &lt;br /&gt;என்கிறார் சசி. விடுதலையற்ற அமைதியான வாழ்வென்ற ஒன்றைச் சிங்கள அரசாங்கம் &lt;br /&gt;அங்கே தமிழனுக்கு வழங்கப்போகிறதா இனிமேலேனும்? விலங்குகளைவிடக் கேவலமாக  &lt;br /&gt;மனிதர்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்துக்கொண்டு  சோறோ, தண்ணியோ, &lt;br /&gt;மருந்தோகூட ஒழுங்காகத் தராமல் வெளியிலும் விடாமல் சித்ரவதை செய்துவரும் ஒரு &lt;br /&gt;அரசாங்கம், இதற்கு முந்தைய ஆயுதம் தவிர்த்த, விடுதலைப்புலிகள் தவிர்த்த வேறெந்த &lt;br /&gt;அரசியல் முன்னெடுப்புகளிலும்கூடத் தமிழர்கள் என்னும் தம் குடிமக்கள் நலன் குறித்து &lt;br /&gt;எந்தவொரு அக்கறையும் காட்டாத ஒரு அரசாங்கம், அவர்களின் ரத்தம் குடித்தும், அவர்தம் &lt;br /&gt;பெண்களைச் சிதைத்தும் தன் பசியாறிய ஒரு அரசாங்கம் அவர்களுக்கு அமைதிக்கான &lt;br /&gt;வாழ்வை நாளை ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம் வழங்கிவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த கடிதச் சங்கிலியில் ஒரு தோழி அனுப்பிய கடிதத்தில் இலக்குவன் என்பவர் &lt;br /&gt;எழுதிய "வழிதவறிய மீன்கள் சந்தித்துக்கொண்டன மணல்வெளியில், இரண்டிடமும் கடல் &lt;br /&gt;பற்றிய கதைகள் இருந்தன, கடல் இல்லை" இதுதான் எங்கள் நிலை எனத் தன் &lt;br /&gt;சோகத்தைச் சுட்டியிருந்தார். உலகம் முழுவதுமாய் திசைக்கொன்றாய் துரத்தப்பட்டுத் தன் &lt;br /&gt;உறவுகள் இழந்து, நாடிழந்து நிற்கும் அத்தனை ஈழத் தமிழ் அகதிகளைப் பற்றியும் &lt;br /&gt;போர்நிறுத்தக் காலத்தில்கூட கவலைப்பட்டோ, விசனப்பட்டோ இராத ஒரு திமிரான &lt;br /&gt;அரசாங்கம், தானே ஒருபக்கமாய் உடன்படிக்கையை மீறி இராணுவ நடவடிக்கையை &lt;br /&gt;அவிழ்த்துவிட்ட ஒரு அரசாங்கம் விடுதலை தவிர்த்த வழியில் எந்த ஒரு அமைதியை &lt;br /&gt;வழங்கிவிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;இ¢து சம்பந்தமான விளக்கமான கோர்வையான கட்டுரையை எழுதும் மனநிலை இப்போது &lt;br /&gt;இல்லையென்பதால் இதைச் சரியாகத் தொடங்கிச் சொல்லவிரும்பியதை முறையாக &lt;br /&gt;வெளிப்படுத்தியிருக்கிறேனா எனத் தெரியவில்லை. என்றாலும் இதில் முடிவாகச் சொல்ல &lt;br /&gt;நினைப்பது இதுதான். &lt;br /&gt;&lt;br /&gt; ஈழத் தமிழினத்திற்கான அமைதியான வாழ்வென்பது விடுதலையாக மட்டுமே இருக்க &lt;br /&gt;முடியும். அதற்கான பாதையைத் தொடங்கி வைத்தவர்கள், பயணித்தவர்கள் பலியாகிப் &lt;br /&gt;போயிருக்கலாம். இதோ தம்மைத் தவிர்த்த வேறெந்த போராளிக்குழுக்களையும் &lt;br /&gt;துப்பாக்கிக்குத் தின்னக்கொடுத்து தன் பாதையை அமைத்துக்கொண்ட இன்றுவரை &lt;br /&gt;விடுதலைக்காகவே போராடியும்வருகிற விடுதலைப்புலிகளே அழிந்தாலும் சரி, நாளையோ &lt;br /&gt;பிறகோ அங்கே மீண்டும் விடுதலைக்கான குரல் ஒலிக்கத்தான் போகிறது. சிங்கள அரசின் &lt;br /&gt;தோட்டா நீளமுடியாத இடமொன்றில் இன்று தம் உயிரைச் சேமித்து வைத்திருக்கிற ஈழத் &lt;br /&gt;தமிழ்ப்பெண்களின் கருப்பைகள் அக்குரலைப் பிரசவிக்கும். அந்த விடுதலையின் மீது &lt;br /&gt;உண்மையான நேசம் கொண்ட நாம் செய்யவேண்டியது அதைச் சரியான முறையில் &lt;br /&gt;முன்னெடுத்துச் செல்வது. இன்று சொல்கிறோமே, செத்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து &lt;br /&gt;"அவன் தவறுகளாலே அவன் சாகிறான்" என்று. அதை அவனின் இறுதிச்சடங்கு வரை &lt;br /&gt;அடைகாத்து வைக்காமல் அவன் செய்வது தவறென்றவுடனே அப்போதே தயக்கமின்றிச் &lt;br /&gt;சொல்வது. அதன் மூலம் அந்த விடுதலையின் குரல் சரியான பாதையில் பயணிக்கச் &lt;br /&gt;செய்வது. அது மட்டுமல்ல கருணாநிதிகளின் ஊர்வலங்களில் நெடுமாறன்கள் &lt;br /&gt;தூக்கிவீசப்படுவதையெல்லாம் மௌனமாகச் சீரணித்திருந்துவிட்டுக் கடைசியில் &lt;br /&gt;கருணாநிதிகளைத் துரோகிகள் எனக் கண்டுகொண்டதாய்க் காலம் கடந்து யோசிக்காமல் &lt;br /&gt;ஆரம்பத்திலிருந்தே எழுத்திலோ, பேச்சிலோ நெடுமாறன்களைச் சுமந்து சென்று மக்களிடம் &lt;br /&gt;அடையாளப்படுத்துவது. அதன் மூலமெல்லாமும் தமிழ் மொழி, இன இருப்பைக் காப்பது. &lt;br /&gt;இவைதான் நமக்கான கடமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோழி முட்டையிடுகிறது. எல்லா முட்டைகளும் அடைகாக்க அதற்கு வந்து &lt;br /&gt;சேர்ந்துவிடுவதில்லை. எடுத்தவன் வறுத்துவிடுகிறான், மறைவாக எங்கேனும் புதர்களில் &lt;br /&gt;வைக்கையில் பாம்புக்குப் போகும் முட்டைகளும் உண்டு. இழந்தவை போகக் &lt;br /&gt;கிடைத்தவைகளின் மேல்தான் அது அடைகாக்கிறது. இரை, தண்ணி மறந்து &lt;br /&gt;அடைகாத்தாலும் எல்லாம் குஞ்சுகளாகவும் கிடைத்துவிடுவதில்லை. பொரிக்காமல் &lt;br /&gt;அழுகியவை, வெளிவருகையிலே செத்தவை எனத் தாண்டித் தன்னோடு கால் ஊன்றி &lt;br /&gt;நடக்கும் குஞ்சுகள் சிலதான். பாம்புகளின் தொல்லை முட்டைகளோடு மட்டுமில்லை, &lt;br /&gt;குஞ்சுகளோடும்தான். பாம்புகளைப் போலவே பூனைகளும் சிலசமயம், நாய்கள் சிலசமயம் &lt;br /&gt;என எல்லாம்கூடக் குஞ்சுகளுக்கு எமந்தான். தரையில் மட்டுமில்லை ஆபத்து குஞ்சுகளுக்கு. &lt;br /&gt;அவை வான் வழியாகவும் வந்தே தீரும். வட்டமிடும் கழுகளின் கண்களில் புதைந்திருக்கிறது &lt;br /&gt;குஞ்சுகளின் கொடுமையான சாவு. இழந்தவை போகத் தங்கியிருப்பது ஒற்றைக் &lt;br /&gt;குஞ்சென்றாலும் கழுகுகள் வந்து அதைக் கவ்விக்கொள்ள அமைதியாய் வெறும் &lt;br /&gt;தண்ணிக்கும், இரைக்குமாய் தன்னை அடக்கிக் கொள்வதில்லை கோழி  பறக்கத் &lt;br /&gt;துணைசெய்யாத சிறகை வைத்தும் கழுகுக்கு எதிராய் எம்பிக் குதிக்கிறது கோழி. தன் &lt;br /&gt;இருப்பு உள்ளவரை மீண்டும் தன் குஞ்சுகளுக்காய்த் தவமிருக்கவும் செய்யும். அதிகாரங்கள் &lt;br /&gt;கழுகென்றால் நாம் கோழிகள்தான். நம் போராட்டங்கள் முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"மக்களைவிடப் புலிகள் பெரிதல்ல, புலிகளிடமிருந்து மக்கள் விடுபடட்டும்" என்கிறார் &lt;br /&gt;தமிழ்சசி.  புலிகள் யாரும் புலிகளாகப் பிறந்தவர்களில்லை, ஆயிரமாயிரமாய் எம் மக்களே &lt;br /&gt;புலியானார்கள், ஆக்கவும் பட்டார்கள். அவர்களில் இருக்கும் பிழைகளையும் தாண்டி நான் &lt;br /&gt;அவர்களுக்கு இப்போதும் என் வணக்கத்தைச் செலுத்தவே செய்கிறேன். ஏனெனில் அவர்கள் &lt;br /&gt;இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிற போரில் மக்கள் மாண்டதற்குக் காரணம் மட்டுமல்ல, &lt;br /&gt;கால் நூற்றாண்டாய் மக்களுக்காகவே மாண்டவர்கள். இப்போதும் மாண்டுகொண்டிருப்பவர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8381094304466403186?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8381094304466403186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8381094304466403186' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8381094304466403186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8381094304466403186'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/05/blog-post.html' title='ஈழம்.....வெறும் சத்தமிட்டுப் பின் சாகப்பிறந்தவர்களா நாம்?'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RCjqHtwxduI/SdIAPSCORoI/AAAAAAAAANA/3IR49Ks-sy8/s72-c/eagle.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-6824297790518738165</id><published>2009-04-28T01:25:00.002-05:00</published><updated>2009-04-28T01:33:54.116-05:00</updated><title type='text'>தொண்டர்களை என்ன செய்வது?</title><content type='html'>&lt;a href="http://images.clipartof.com/small/26965-Clipart-Illustration-Of-A-White-Character-Leader-Standing-Apart-From-His-Followers.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 450px; height: 225px;" src="http://images.clipartof.com/small/26965-Clipart-Illustration-Of-A-White-Character-Leader-Standing-Apart-From-His-Followers.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்ற உணர்வு, கையறுநிலை இவற்றிலிருந்து விடுபட இயலாநிலைகளும் &lt;br /&gt;கூடவே அன்றாடப் பிழைப்புகள் பிடரி அழுத்த சுயநலமிகளாகச் &lt;br /&gt;செயலாற்றத் தள்ளப்படுகிற வாழ்வென்னும் அவலமும் கூடி உருவாக்கும் &lt;br /&gt;மன உணர்வுச் சிக்கல்களோடே அவற்றிலிருந்து விலக எத்தனிப்பதாய், &lt;br /&gt;மீண்டும் அதிலேயே வீழ்வதுமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது நிகழ்காலம். &lt;br /&gt;ஈழம் நம்மில் பலருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அப்படியானது.&lt;br /&gt;இது சம்பந்தமான எண்ணங்களையும், அவதானிப்பிலிருந்து தோன்றுகிற &lt;br /&gt;புரிதல்களையும் எழுதுவதென்பது ரோசாவசந்த் சொல்லியிருப்பதுபோல் &lt;br /&gt;பலமுறைகள் முயன்றாலும் எனக்கும் முடியாததாகவே போயிருக்கிறது. &lt;br /&gt;இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே சொலவடை என்றும் &lt;br /&gt;இன்னபிறவென்றும் எதையாவது வெட்கமில்லாமல் இடையில் &lt;br /&gt;எழுதிக்கொண்டு திரிந்திருக்கிறேன் என்பதே என்மீதான &lt;br /&gt;சுயவிமர்சனமும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ கண்ணுக்கு முன்னே கற்றவை, கேட்டவை, நம்பியவை எல்லாமே &lt;br /&gt;பொய்த்துப்போய்க் கொண்டிருக்கின்றன. மனிதன் ஒரு நாகரீகமடைந்த &lt;br /&gt;சமூகஉயிரி என்று படித்ததே எவ்வளவு பொய்? வன்முறையைத் தடுக்க &lt;br /&gt;ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை சட்டங்கள்? பேச்சில், எழுத்தில், வீட்டில், &lt;br /&gt;வேலையிடத்தில் எல்லாம் வன்முறையைத் தடுப்பது பற்றிச் சர்வதேச &lt;br /&gt;அளவில் சட்டங்கள் செய்யப்பட்டாயிற்று. இத்தனையும் நடந்திருக்கிற &lt;br /&gt;இதே நூற்றாண்டில்தான் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான &lt;br /&gt;மனிதர்களைத் திட்டமிட்டுக் கொன்றுகொண்டிருக்கும் ஒரு நாட்டின் &lt;br /&gt;பாதுகாப்புச் செயலர் சொல்கிறார் "அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் &lt;br /&gt;தேவையில்லாமல் எங்கள் நாட்டுப் பிரச்சினையில் தலையிடவேண்டாம்" &lt;br /&gt;என்று. தன் கழுத்துவரைக்கும் குடித்து நிரப்பியிருக்கும் மக்களின் &lt;br /&gt;இரத்தவாடையோடு அதன் அதிபர் விளக்குகிறார்,"நாங்கள் செய்திருப்பது &lt;br /&gt;போர் நிறுத்தம் அல்ல, குண்டுகளைப் பயன்படுத்த மாட்டோம் &lt;br /&gt;அவ்வளவுதான்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கொலைகாரர்களையாவது கொலைகாரர்கள் என்று அடையாளம் &lt;br /&gt;கண்டுகொள்ளும் வண்ணம் தங்கள் கோரப்பற்கள் தெரியவே நிற்கிறார்கள்.&lt;br /&gt;மற்றவர்களின் நாடகங்கள் இன்னும் கொடுமையானவையாக &lt;br /&gt;இருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன் போரில் மக்கள் சாவது &lt;br /&gt;இயல்பென இருந்துவிட்டு இப்போது "நாளைக்கு எனக்கு ஓட்டுப் &lt;br /&gt;போட்டால் நாளை மறுநாளே தனி ஈழத்தை அமைத்து விடுவேன்" என்று &lt;br /&gt;புரட்சியை முழங்கும் தலைவிகள், இந்தத் தலைவியருக்குப் பிரதமராகும் &lt;br /&gt;தகுதி நிச்சயம் உண்டென்று திடீர்ச்சான்றிதழ் வழங்கும் டாக்டர்கள், &lt;br /&gt;தொலைதூரம்வரை சமத்துவக் கனவு காண்பதாய்ச் சொல்லிவிட்டு &lt;br /&gt;தொடும்தூரத்து இனக்கொலையில் கட்சியைத் தாண்டிப் &lt;br /&gt;பேசமுடியாதவர்கள், ஒரு இனத்தின் உரிமைக்கான கால்நூற்றாண்டுப் &lt;br /&gt;போரை மிகச் சுலபமாக அது "அதிகாரத்திற்கான போர்" என்று &lt;br /&gt;சொல்லிவிட்டு மற்றநேரங்களில் மனிதநேயம் பேசுபவர்கள் என இங்கே &lt;br /&gt;தினம் தினம் புதிய காட்சிகள். அதில் ஒன்றுதான் இன்று(ம்) கலைஞர் &lt;br /&gt;நிகழ்த்திக் காட்டியிருக்கும் உண்ணாவிரத நாடகம். தன் தமிழ் இன &lt;br /&gt;உணர்வென்னும் முகமூடி கழன்று விழ ஈழ விடயத்தில் கலைஞர் &lt;br /&gt;செய்ததுரோகத்திற்குத் தண்டனையாக மக்கள் அவர்கட்சியைக் &lt;br /&gt;குறைந்தபட்சம் வரும் தேர்தலில் தோற்றுப்போகவைக்கலாம். ஆனால் &lt;br /&gt;காலத்திற்கும் இப்படியான தலைவர்களின் பின்னால் சிந்திக்க மறந்தோ &lt;br /&gt;மறுத்தோ அணிவகுத்து நிற்கும் தொண்டர்களை என்ன செய்வது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-6824297790518738165?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/6824297790518738165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=6824297790518738165' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6824297790518738165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/6824297790518738165'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/04/blog-post_28.html' title='தொண்டர்களை என்ன செய்வது?'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8615638367134238318</id><published>2009-04-11T17:30:00.001-05:00</published><updated>2009-04-11T17:46:23.117-05:00</updated><title type='text'>அவன் சென்றபின் பெய்த மழை</title><content type='html'>&lt;a href="http://edsphotoblog.com/wp-content/photos/450px/0722_queen_elizabeth_rose_flower.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 450px; height: 323px;" src="http://edsphotoblog.com/wp-content/photos/450px/0722_queen_elizabeth_rose_flower.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்&lt;br /&gt;ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து&lt;br /&gt;இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன&lt;br /&gt;&lt;br /&gt;வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும் &lt;br /&gt;அழகாயிருந்தது.&lt;br /&gt;தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக&lt;br /&gt;பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்&lt;br /&gt;அங்கே சுதந்திரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின்மொழி இதயமெங்கும்&lt;br /&gt;கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்&lt;br /&gt;அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று&lt;br /&gt;தானுமொரு வனம்விரும்பி என்றான்&lt;br /&gt;வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்&lt;br /&gt;மொழிக்காதலனுமென்றான்&lt;br /&gt;நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை&lt;br /&gt;அவனுக்குச் சொல்லலானேன்&lt;br /&gt;பூக்களில் தேன் சொரிந்திருந்தும்&lt;br /&gt;அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன&lt;br /&gt;&lt;br /&gt;தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான&lt;br /&gt;வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை&lt;br /&gt;நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது&lt;br /&gt;தலையைச் சிலுப்பிக்கொண்டே&lt;br /&gt;"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்&lt;br /&gt;அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"&lt;br /&gt;தன் அபிமான நடிகன்கூட&lt;br /&gt;ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்&lt;br /&gt;பறவைகள் அக்கணம்&lt;br /&gt;வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்&lt;br /&gt;கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்&lt;br /&gt;நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்&lt;br /&gt;உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட&lt;br /&gt;பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்&lt;br /&gt;கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்&lt;br /&gt;சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்&lt;br /&gt;முகில்களோ, மான்களோ எதுவும்&lt;br /&gt;தட்டுப்படாத வெறுமை சூழந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடனான உரையாடலில் &lt;br /&gt;என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்&lt;br /&gt;அவன் பேசிக்கொண்டிருந்தான்&lt;br /&gt;தான் இச்சமூகத்துக்கு &lt;br /&gt;ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்&lt;br /&gt;கலைரசிகர்கள்&lt;br /&gt;வனம்வாழ்வது தகாதென்றான்&lt;br /&gt;இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்&lt;br /&gt;தானொரு தலைவனாவதற்கு&lt;br /&gt;ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்&lt;br /&gt;தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்&lt;br /&gt;தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்&lt;br /&gt;இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்&lt;br /&gt;பதிலுக்கு நச்சரித்தபோது நான்&lt;br /&gt;நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்&lt;br /&gt;அவன்  கோபம் கொப்பளிக்க என்னை&lt;br /&gt;ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்&lt;br /&gt;ஒரு நீள இரவு கடந்து&lt;br /&gt;விழித்துக்கொள்கையில்&lt;br /&gt;மழைபெய்திருந்தது&lt;br /&gt;மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன&lt;br /&gt;என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8615638367134238318?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8615638367134238318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8615638367134238318' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8615638367134238318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8615638367134238318'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/04/blog-post_11.html' title='அவன் சென்றபின் பெய்த மழை'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8096782611172309644</id><published>2009-04-07T00:25:00.002-05:00</published><updated>2009-04-07T00:35:23.474-05:00</updated><title type='text'>நானா இப்படி?</title><content type='html'>சொலவடைப் பதிவென்பதால் சொலவடை சொல்லியே ஆரம்பிக்கலாம். "குடிக்கத் தண்ணி &lt;br /&gt;கேட்டா நீ குளிப்பாட்டத் தண்ணி கொண்டுவருவே" என்று சிறுவயதிலேயே சொலவடையில் &lt;br /&gt;திட்டு வாங்கிய ஆள் நான். &lt;br /&gt;&lt;br /&gt;வெய்யிலில் காட்டில் அலைந்துவிட்டு வரும் வீட்டு மனிதர்கள் யாரேனும் "பாப்பா தாகமா &lt;br /&gt;இருக்குது உள்ள போயி ஒரு சொம்பு தண்ணி கொண்டு வா"  என்று சொல்வார்கள். &lt;br /&gt;நாமும் சரியென்று எழுந்து செல்வதுதான். ஆனால் வெளித்திண்ணையில் வாங்கிய சொற்கள் &lt;br /&gt;கீழே படிகளில் இறங்கி உள்நடைக்குள் செல்லும்போதே கொஞ்சம் தேய்ந்து, பார்வை &lt;br /&gt;அங்கே சுவற்றில் சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிளில் நிலைகுத்தி அதில் குரங்குப் &lt;br /&gt;பெடல்(பெரிய சைக்கிளை ஆரம்பத்தில் ஓட்டிப் பழகும் முறைக்குப் பெயர் குரங்குப் பெடல்) &lt;br /&gt;போட்டுப் பார்க்கவைக்கும். சிலநிமிடம் கழித்து மீண்டும் தண்ணி கொண்டுவரவேண்டிய &lt;br /&gt;ஞாபகம் வந்தவுடன் நடைதாண்டி உள்திண்ணையும் ஏறியாகிவிடும். ஆனால் அங்கே &lt;br /&gt;ஒருமூலையில் வைக்கப்பட்டிருக்கும் குடத்து நீர் என்னவோ செய்யும். உள்ளே கையைவிட்டு&lt;br /&gt;ஒரு கை அள்ளிக் குடத்தின் விளிம்பு மீது விட்டு அது சொட்டுச் சொட்டாய் வடிவது &lt;br /&gt;பார்ப்பதில் ஒரு 2 நிமிடம். "பாப்பாஆஆ..." அதற்குள் வெளித்திண்ணையில் திரும்பவும் &lt;br /&gt;பிறக்கும் சொல் சமையலைறைச் சன்னல் வழி வந்து செவிகளைத் தாக்கும்.   &lt;br /&gt;சமையலறைக்குள் இப்போதுதான் கால் நுழைகிறதென்றாலும் "தண்ணி மோந்தாச்சுங்க....". &lt;br /&gt;இதெல்லாம் சொல்ல அந்த வயதிலும் எப்படியோ கற்றாயிற்று.  சொம்பைக் கையில் &lt;br /&gt;எடுத்துக் குடிக்கிற தண்ணி இருக்கும் சால்ப்பானைக்குள் விட்டு எடுத்துத் திரும்பினால் &lt;br /&gt;அங்கே குழம்புக்கு அம்மா வேகவைத்துத் தட்டில் தொலிச்சு (தோலுரித்து என்பதன் மரூஉ)&lt;br /&gt;வைத்திருக்கும் உருளைக்கிழங்கு தன்னைக் கொஞ்சம் உடைத்து வாயில் &lt;br /&gt;போட்டுக்கொள்ளச் சொல்லும். அதையும் முடித்து ஒருவழியாய்ச் சொம்புத் தன்ணியோடு &lt;br /&gt;வெளித்திண்ணைக்கு வருகையில் வரவேற்பதுதான்  "நீயெல்லா குடிக்கத் தண்ணி கேட்டா &lt;br /&gt;குளிப்பாட்டத்தான் கொண்டுவந்து தருவே, சின்னப்புள்ள இப்படியா வேலை செய்யறது? ஒரு &lt;br /&gt;ஓட்டமுட்டாத் தண்ணி வராதா?" எனும் சொலவடைத் திட்டு. அப்பொழுதும் &lt;br /&gt;திட்டுக்கெல்லாம் சுருங்காத மனம் சொலவடையின் பின்னால்தான் போய்க்கொண்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உயிர்போகும் தாகத்தில் ஒருவன் தண்ணீர் கேட்டால் அதை எவ்வளவு விரைவாகச் &lt;br /&gt;செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்தால் நல்லது. அப்படியில்லாமல்  தண்ணீர் &lt;br /&gt;கொண்டுவரப்போகும் வழியில் பலசோலிகளைப் பார்த்துவிட்டு ஆடியசைந்து வந்தால் &lt;br /&gt;அதற்குள் தண்ணீர் கேட்டவன் உயிர் பிரிந்து அவன் உடல் குளிப்பாட்டவே எடுத்து &lt;br /&gt;வைக்கப்பட்டு விடும். பிறகு கொண்டுவந்த தண்ணீரை குளிப்பாட்டத்தான் ஊற்ற வேண்டும் &lt;br /&gt;என்பது இதன் நேரடியான பொருள் என்றாலும் சோம்பேறிகள் பலருக்கும் பல &lt;br /&gt;சூழ்நிலைகளிலும் இதே சொலவடையைப் பொருத்தியும் பார்க்கலாம். நான் பதிவெழுதும் &lt;br /&gt;லட்சணத்திற்கும்கூட இது பொருந்திவருவதாகவே உள்ளது. அவ்வளவு வேகம்.....பார்ப்பது, &lt;br /&gt;படிப்பது, உணர்வது என்று அந்தந்த நிமிடங்களில் எழுதுவதற்கு எண்ணற்ற சிந்தனைகள் &lt;br /&gt;ஓடினாலும் மாய்ந்து உட்கார்ந்து ஒரு பதிவு எழுதி முடிப்பதென்பது எனக்கு இமாலய &lt;br /&gt;சாதனைதான். இந்த மடச் சோம்பேறியை நட்சத்திரமாக்கினாலாவது ஒரு வாரத்திற்கேனும் &lt;br /&gt;தொடர்ந்து எழுதித் தொலைக்குமா எனில் அதுவும் இல்லை. ஏழு நாட்களுக்கு 5 பதிவுகள் &lt;br /&gt;எழுதிய சா(சோ)தனை நட்சத்திரப் பதிவர் என்பது எனது வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருந்துவிட்டு இப்போது ஒரு நாளுக்குள் இரண்டு பதிவுகள் இடுகிறேனே? நானா &lt;br /&gt;இப்படி? என்று எனக்கே ஆச்சரியம் கொப்பளித்தாலும் இதற்கான தூண்டுதலை &lt;br /&gt;எண்ணுகையில் சிலருக்கு நன்றி சொல்லவேண்டும். நான் எழுதுவதை(யும்) இந்தச் &lt;br /&gt;சிலவருடங்களாகப் படித்தும், எழுதவராதபோது "வந்து எழுது" என உரிமையோடு இழுத்தும் &lt;br /&gt;வருகிற வலையுலக நண்பர்கள். பிறகு இங்கு ஏற்படும் தற்காலிக, தொடர் நிகழ்வுகள் &lt;br /&gt;சிலவும் எழுத்துக்கான உத்வேகத்தை வழங்கிவிடுகின்றன. இப்போது எனக்கு அப்படியான &lt;br /&gt;நிகழ்வுகள் சிலதைச் சொல்ல வேண்டுமென்றால் நான் காணாது போயிருந்த பலமாத &lt;br /&gt;இடைவெளியில் வலையுலகுக்கு வந்து எழுதத் துவங்கியிருக்கும் பல புதிய நண்பர்களால் &lt;br /&gt;இங்கு ஏற்பட்டிருக்கும் புதிய நீரோட்டத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  பதி, &lt;br /&gt;தமிழன் கறுப்பி, யாத்ரா, அமிர்தவர்ஷினி அம்மா, தீபா, எழுத்தாளர்கள் மாதவராஜ், &lt;br /&gt;ச.தமிழ்ச்செல்வன் சந்தனமுல்லை, மிஸஸ். டவுட், உமாஷக்தி என்று மெதுமெதுவாக நான்&lt;br /&gt;அறியத் துவங்கியிருக்கும் அப்புதிய நீரோட்டத்துக்காரர்களின் பெயர்ப்பட்டியல் இன்னும் &lt;br /&gt;நீளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீராத பக்கங்களில் சடசடவெனக் கொட்டுகிறது மழை. எப்போது நிற்குமெனத் &lt;br /&gt;தோன்றாமல் இன்னும் பெய்யட்டும் இந்த மழையென்னும்படியான பல்வேறு திசைகளிலும் &lt;br /&gt;நிகழ்கிறது அங்கே பதிவுப் பாய்ச்சல். தமிழ்வீதியில் நிற்கும் ச. தமிழ்ச்செல்வன் இங்கும் &lt;br /&gt;தான் உணர்ந்த வாழ்வின் பக்கங்களை அவற்றை வாசித்திருக்காதவர்களுக்கும் இயல்பாக, &lt;br /&gt;மிக இயல்பாகச் சொல்லிச் சென்றுகொண்டிருக்கிறார். இவர்கள் எடுத்துக்கொள்ளும் &lt;br /&gt;பேசுபொருள்கள் அவற்றை இன்னும் அறிந்துகொள்ளூம் ஆர்வத்தை, அவைகுறித்து &lt;br /&gt;உரையாடும் உந்துதலை, தொலைத்த நல்லதொன்றைத் திரும்பக் கண்டுபிடிக்கும் தேடலை &lt;br /&gt;எனப் பல கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியபடி கடக்கின்றன. எல்லோருடனும் &lt;br /&gt;ஏதாவதொரு புள்ளியில் ஏற்படும் கருத்து முரண்கள் இவர்களோடும் ஏற்படுகின்றன &lt;br /&gt;எனும்போதும் இப்போதைக்கு அவர்கள் எழுதும் வேகத்துக்குக் கூட ஓடிப் படிப்பதே &lt;br /&gt;எனக்கு மூச்சுவாங்கும் நிலையாக இருப்பதால் வெறும் மௌனப் பின் தொடர்தலே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்கள் இருவரும் எழுதியிருக்கும் சொலவடைகளின் பதிவுகளை வாசித்த பின்பு &lt;br /&gt;அப்படிச் சும்மா நகரமுடியவில்லை.  இறங்க மறுத்து மனதில் ஏறிக் கூடவே &lt;br /&gt;வந்துகொண்டிருக்கிறது "சொலவடைகளை  அரிசின்னு அள்ளுவாரும் இல்லை, உம்மின்னு &lt;br /&gt;ஊதுவாரும் இல்லை" எனும் ச. தமிழ்ச்செல்வனின் வாசகம். அது  நாள்பூராவும்&lt;br /&gt;தொந்தரவு செய்துகொண்டேவும் இருந்தது. பூகோளத்தின் இன்னொரு மூலையில் இன்று &lt;br /&gt;அன்றாட வாழ்வோடு புரண்டுகொண்டிருந்தாலும் எனக்குத் தொட்டிலிட்ட பூமியின் &lt;br /&gt;சுகந்தத்தைச் சுமந்து திரியும் சொலவடைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கவைத்தது. &lt;br /&gt; நாளின் பெரும்பகுதியை எவனோ ஒருவனின் மொழியில் கழித்துத் திரும்பிய அசதி இந்தச் &lt;br /&gt;சொலவடைகள் என்னும் என் மூதாதையர் சொல்லித்தந்த முதல்மொழி பற்றிய நினைவுகளில்&lt;br /&gt;தீர்கிறது.  அதனால் கிடைத்த சுறுசுறுப்பே ஒரு பதிவு போட்ட ஒருநாளுக்குள்  இன்னொரு &lt;br /&gt;பதிவையும் எழுத இந்த மடச்சோம்பேறியையும் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;சொலவடைகளை வெறும் சொலவடைகளாகப் பார்க்காமல் அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் &lt;br /&gt;சூட்சுமங்களையும் பார்க்கத் தெரிகிறது இப்போதைய மூளைக்கு. அவற்றில் என் &lt;br /&gt;மூதாதையருக்குள்ளிருந்த நல்லவை, நல்லவையல்லாதவை என்பதையும் பிரித்தறிய முடிகிறது. யோசித்து நினைவுபடுத்திக்கொண்டவற்றை இங்கே இப்போதைக்கு வெறுமனே தொகுத்து வைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கரிசல் காட்டுச் சொலவடைகள் பல சிற்சில சொல்மாற்றங்களுடன் கொங்குநாட்டிலும் &lt;br /&gt;பயன்படுத்தப்பட்டுக் கேட்டிருக்கிறேன். நான் இங்கே எழுதும் கொங்குநாட்டில் &lt;br /&gt;பயன்படுத்தப்படும் இச்சொலவடைகள் வேறு பகுதிகளிலும் இருக்கலாமெனவும் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. கலைப்பாரு கலைச்சாக் கல்லுங் கரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தாய்மடியில தங்கமே இருந்தாலும் தன் மடியில தவிடு இருந்தாத் திங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சித்தப்பன் பொழச்சா என்ன சிறுநெருஞ்சி பூத்தா என்ன?&lt;br /&gt;   பெரியப்பன் பொழச்சா என்ன பெருநெருஞ்சி பூத்தா என்ன?&lt;br /&gt;   நம்மப்பன் பொழச்சாத்தான் நமக்கெல்லாங்க் கொண்டாட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;4. கொடும கொடுமன்னு கோயலுக்குப் போனா&lt;br /&gt;   அங்க ரெண்டு கொடும எனக்கு முன்னால நிக்குது&lt;br /&gt;&lt;br /&gt;5. கும்படப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பல&lt;br /&gt;&lt;br /&gt;6. பொழைக்கறவன் பொழுதோட தூங்குவான்&lt;br /&gt;   கூறுகெடறவன் கோழிகூப்படத் தூங்குவான்&lt;br /&gt;&lt;br /&gt;7. அப்பனே அடிமட்டையப் புடிச்சுக்கிட்டுத் தொங்கறான்&lt;br /&gt;   மவன் குருத்தோலை கேட்டானாமா&lt;br /&gt;&lt;br /&gt;8.  அண்ணந்தம்பிக்குள்ள என்ன  ஆட்டுக்கறியில அடிச்சுக்குவானுக கோழிக்கறியில  &lt;br /&gt;    கூடிக்குவானுக&lt;br /&gt;&lt;br /&gt;9.  ஆடறமாட்டை ஆடிக்கறக்கணும் பாடற மாட்டை பாடிக்கறக்கனும் (இது &lt;br /&gt;சொலவடையா பழமொழியா எனக் குழப்பம் உள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;10. குடிகாரம் பேச்சு பொழுதோட ஒண்ணு பொழுது விடிஞ்சா ஒண்ணு&lt;br /&gt;&lt;br /&gt;11. பன்னிகூடச் சேந்தா பசுவும் என்னத்தையோ திங்கும்பாங்களே&lt;br /&gt;&lt;br /&gt;12.  அவம் பேச்சைக் கொண்டுபோயி தண்ணீல எழுதி வை&lt;br /&gt;&lt;br /&gt;13. இருக்கறத உட்டுப்போட்டு பறக்கறதுக்கு ஏண்டா ஆசப்படறே?&lt;br /&gt;&lt;br /&gt;14. தாயத் தண்ணிக் கெணத்துல பாத்தாப் புள்ளைய ஊட்டுல பாக்கத் தேவையில்லே&lt;br /&gt;&lt;br /&gt;15. தாசி வெச்ச ஊடொன்னு தாதரா மொளச்ச காடொன்னு ரெண்டுமே உருப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;16.  ஒரு பொண்டாட்டிக்காரனுக்கு உரியில சோறு பல பொண்டாட்டிக்காரனுக்குத்   &lt;br /&gt;     தெருவுலதாஞ்ச் சோறு.&lt;br /&gt;&lt;br /&gt;17. ஆனா இந்தமடம் ஆகாட்டிச் சந்த மடம்&lt;br /&gt;&lt;br /&gt;18. இருக்கறவனுக்கு ஒரு ஊடு இல்லாதவனுக்குப் பல ஊடு&lt;br /&gt;&lt;br /&gt;19. விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சங் கட்டுனா எப்படியிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;20. நாயைக் குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும் அடேங்கற புத்தி போகாது&lt;br /&gt;&lt;br /&gt;21. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;22. பொய்யப் பொருதறாப்பல சொன்னா நெசம் நின்னுக்கிட்டு முழிக்குமாம்&lt;br /&gt;&lt;br /&gt;23. பூனைவாலைப் புடிச்சா கொஞ்சந்தூரம் போகலாம் ஆனைவாலைப் புடிச்சா &lt;br /&gt;    ஆத்தேட்டியே தாண்டலாம்&lt;br /&gt;&lt;br /&gt;24. ஒள்ளுக்கு ஒருபக்கந்தே இடி மத்தாளத்துக்கு ரெண்டுபக்கமு இடி&lt;br /&gt;&lt;br /&gt;25. மாமியா ஒடச்சா மண்பானை மருமக ஒடச்சா பொன்பானை&lt;br /&gt;&lt;br /&gt;26. பசிஏப்பக்காரனும் புளிஏப்பக்காரனும் ஒன்னாக முடியுமா&lt;br /&gt;&lt;br /&gt;27. அவனே ஒரு சோத்துக்குச் செத்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;28. அதேங்க்கொழுக்கட்டை சப்புன்னு இருக்குது ஒருகாசுக்குங்கூட வெல்லமில்லையாமா&lt;br /&gt;&lt;br /&gt;29. எவனோ புதுவட்டலக் கண்டு ஏழுவட்டல் சோறுதின்னானாமா&lt;br /&gt;&lt;br /&gt;30. அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவா&lt;br /&gt;&lt;br /&gt;31. கூரையேறிக்கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்&lt;br /&gt;&lt;br /&gt;32. கண்ணுல பட்டாக் கரிக்குமா புருவத்துல பட்டாக் கரிக்குமா&lt;br /&gt;&lt;br /&gt;33.  காடு வாவாங்குது ஊடு போபோங்குது&lt;br /&gt;&lt;br /&gt;34. ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய மெரட்டுன கதையா இருக்குது&lt;br /&gt;&lt;br /&gt;35. தேனெடுத்தவன் கைய நக்காம இருப்பானா&lt;br /&gt;&lt;br /&gt;36. ஒள்ளுக்குள்ள தலைய வெச்சாச்சு இனி ஒலக்கை வருதேன்னா ஆகுமா&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறியவை பொதுவாக மக்களின் வாழ்வியலைக் கூறுகின்றன. ஆனால் பின்வரும் &lt;br /&gt;சொலவடைகள் வேறுபல கண்ணோட்டங்களையும், நம் சமூகத்தின் புரையோடிய புண்களின் &lt;br /&gt;உண்மைகளையுணரவேண்டிய கட்டாயத்தையும் வேண்டிநிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஊருக்கு எளச்சவன்  புள்ளாரு கோயல் ஆண்டி&lt;br /&gt;&lt;br /&gt;2. பொழப்புக் கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலையச் செரச்சானாம்&lt;br /&gt;&lt;br /&gt;3. வகைதெரியா வண்ணாங்கூடப் போனா வெடிய வெடிய வெள்ளாவிக்குத் தீ &lt;br /&gt;   எரிக்கோணும்&lt;br /&gt;&lt;br /&gt;4.  செட்டி நட்டம் குடிபடைக்குள்ள&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆணை அடிச்சு வளக்கோணும் பொண்ணைப் போத்தி வளக்கோணும்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இவ்வளவுதான். இனி இந்தச் சொலவடைகளை ஒவ்வொன்றும் &lt;br /&gt;பயன்படுத்தப்படும் காட்சிக்களனை வட்டார மொழியிலேயே எழுதிவைத்தாலும் நன்றாகத்தான் &lt;br /&gt;இருக்கும். அதற்கான மனத்தூண்டல் அமைகிற ஒரு நாளில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சொலவடைப்பதிவை எழுதத்தூண்டிய தீராத பக்கங்கள் மற்றும் தமிழ்வீதிக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8096782611172309644?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8096782611172309644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8096782611172309644' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8096782611172309644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/8096782611172309644'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/04/blog-post_07.html' title='நானா இப்படி?'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-2260438707520522951</id><published>2009-04-05T23:51:00.002-05:00</published><updated>2009-04-06T00:05:54.945-05:00</updated><title type='text'>துளித்துளியாய்....</title><content type='html'>&lt;a href="http://www.sulekha.com/mstore/scarlett/albums/default/rain-drop.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 248px;" src="http://www.sulekha.com/mstore/scarlett/albums/default/rain-drop.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலில் தீர்த்தம் வாங்கிச் சிலிர்த்து நிற்கும்&lt;br /&gt;மாலையணிந்த ஆடு பனித்துச் சுரக்கிறது&lt;br /&gt;கண்களிலிருந்து நீரை&lt;br /&gt;தேர்தலுக்கு முந்தைய மக்களை நினைத்து&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கியடிக்கும் கூட்டத்தில்&lt;br /&gt;நெடிதுயர்ந்த கால்களுக்கு நடுவே &lt;br /&gt;தேடிநடந்துவந்து சிரித்துவிட்டுப் போகிறது&lt;br /&gt;சண்டையிட்டுப் பிரிந்தவளின் குழந்தை&lt;br /&gt;***********&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் நடக்காத தெருவிலும்&lt;br /&gt;ஒருவரும் விழிக்காத இரவிலும்&lt;br /&gt;நடப்பதற்கும் பேசுவதற்கும்&lt;br /&gt;என்னமோ இருக்கத்தான் செய்கின்றன&lt;br /&gt;அந்த ஊதல் காற்றுக்கும்&lt;br /&gt;ஊளையிடும் தெருநாய்க்கும்&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தின் உயரடுக்கு மாடிகளின்&lt;br /&gt;ஆறாவது தளத்தில் அன்றைய மாலையில்&lt;br /&gt;பலகாரம் ருசித்தபடியே&lt;br /&gt;சூடான தேநீரும் அருந்தி&lt;br /&gt;அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்&lt;br /&gt;பக்கத்துவீட்டின் மரணச் செய்தியை&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்றவனின் சன்னல் கம்பிகளில்&lt;br /&gt;எச்சங்களால் எழுதிவைத்திருக்கின்றன&lt;br /&gt;அங்கு வந்துபோகின்ற குருவிகள்&lt;br /&gt;தமது நிறைந்த அன்பையும் நேசத்தையும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-2260438707520522951?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/2260438707520522951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=2260438707520522951' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2260438707520522951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19366730/posts/default/2260438707520522951'/><link rel='alternate' type='text/html' href='http://selvanayaki.blogspot.com/2009/04/blog-post.html' title='துளித்துளியாய்....'/><author><name>செல்வநாயகி</name><uri>http://www.blogger.com/profile/12264808156192147870</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19366730.post-8560409544338303201</id><published>2009-03-25T23:37:00.002-05:00</published><updated>2009-03-26T00:02:27.779-05:00</updated><title type='text'>ஒரு மாலைக்குறிப்பு</title><content type='html'>&lt;a href="http://www.presentationrentals.net/images/Pictures/Appleton_wi__fox_river_lock.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 219px;" src="http://www.presentationrentals.net/images/Pictures/Appleton_wi__fox_river_lock.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒரு நாட்குறிப்புன்னு எழுதிவைக்கமுடியாது. ஒரு நாளின் மாலையின் ஒரு சம்பவங்கறதால ஒரு மாலைக்குறிப்புன்னு போட்டுக்கறேன். இன்னைக்கு மனசு லேசா ஆனமாதிரி இருக்கு. லேசா ஆவறதுன்னா கனமில்லாம இருக்கறதுதானே? அதாவது வேறெதையும் சுமக்காம காலியா, இண்டு இடுக்குன்னு அங்கங்க எதையும் சொருகி வெச்சுக்காம ஒரு சொட்டு நீர் விழுந்தாக்கூட அது பரவற வட்டத்தையும் உற்றுக் கவனிக்க முடிகிற சுத்தமான வெளி போல.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி இருக்கு? நான் அங்க போய் வந்ததுதான் காரணமா இருக்கும். அங்க போறது எனக்குப் பிடிச்சிருக்கு. இந்தச் சின்ன ஊர்ல எனக்குத் திரும்பத் திரும்பப் போகத் தோன்றும் சில இடங்கள்ல அதுவும் ஒன்னு. அங்க எது என்னைய ஈர்க்குது? சொல்லத் தெரியலை. பாவாடை சட்டை போட்டுக்கிட்டு அம்மாவோடு இடுப்பு உசரம் இருந்தப்ப ஊர்ல அடிக்கடி &lt;br /&gt;நான் போய் உட்கார்ந்து அனுபவிச்ச மொட்டப்பாறையும், சும்மா வெறுமனே போய் நின்னுட்டு வரத் தோணுமே அந்தப் பெரிய புளியமரத்து நெழலும் ஏன் என்னை ஈர்த்துதோ அது போலத்தான் இந்த ஊர்ல அந்த மியூசியமும் போறப்பெல்லாம் எனக்குள்ள ஒரு பிடிபடாத அமைதியை, நெகிழ்வைத் தருது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா அண்ணாந்து பாக்கவைக்கிற அந்தக் கட்டடத்தோட உசரம் என்னைய ஒன்னும் செய்யறதில்லை. அதுக்கு எதுத்தாப்போல  நிலத்தோட நிலமா  படுத்துக் கிடக்கற ஆறுதான் என் மனசைக் கழுவிக்கிட்டு ஓடறது மாதிரி இருக்கு. ஒரு பெரிய பனைமரத்தோட அவ்வளவு உயரத்துக்கும் மேல சலசலக்கற அதோட ஓலைகள் என்ன சொல்லிவிடப் போகின்றன &lt;br /&gt;கீழே உழுதுபோட்ட புழுதிமேல தலைவெச்சுக் கண்ணை மூடிக் காலை மடக்கிக் காதை ஆட்டிக்கிட்டே படுத்திருக்கிற அந்தப் புதிதாய்ப் பிறந்த செம்மறிக் குட்டியைவிட? இந்த ஆறும் எனக்குக் கதை சொல்லிய செம்மறிக் குட்டி போலப் பாத்துக்கிட்டே இருக்கலாம். இந்தச் சின்ன ஊருக்கு எந்தப் பக்கமும் சுத்திச் சுத்தி ஓடுது இந்த ஆறு. நரி ஆறுன்னு பேர் சொல்றாங்க (fox river) நம்ம ஆற்றுப் பேர்கள் மாதிரி பவானி, காவிரி, அமராவதின்னு பேர்ல ஒரு அழகில்லை. ஆனாலுமென்ன? ஆறு ஆறாத்தான் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கும் ரொம்பநேரம் ஆற்றையேதான் பாத்துக்கிட்டு இருந்தேன். எனக்கு ரொம்பப் பக்கத்துல ஒரு சோடி மனிதர்கள் சிரிச்சுச் சிரிச்சு எதையோ பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு வயசான அம்மா ஒரு குழந்தையின் கைபிடிச்சு நடந்தாங்க. ஆனா  ஆறு பாக்கறப்ப எனக்கு யாரும் வேண்டாம் நான்கூட(நன்றி நகுலன் உங்களைக் கொஞ்சம் காப்பியடிச்சுக்கிட்டேன்) எந்த இசையமைப்பாளரும் தேவையில்லாம ஒரு அழகான இசையைப் பிரசவிச்சுக்கிட்டே இருக்குது ஆறு. களுக் களுக்னு தாளம் பிசகாத அதோட இசையோட, மேலே வெள்ளை நுரை போர்த்திக் கிட்டு, போறப்பவே உடைஞ்சிக்கிட்டுப் போற அதோட மொட்டிலிகளை(நீர்க்குமிழ்னு சொல்லணுமோ) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து நின்றேன். போதும்னு தோன்றினப்ப மியூசித்துக்குள்ள போயாச்சு. அதோட கதவுகளுக்கு என் விரல்களும், அங்கிருக்கிற பொருள்களுக்கு என் கண்களும் பரிச்சயமானவை. அடிக்கடி போயிக்கிட்டே இருக்கமே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதோட கலை அறை (ஆர்ட் ஸ்டுடியோ) எனக்கு ஒவ்வொரு முறையும் புதுசுதான். காரணம் அங்க மாட்டி(மாற்றி) வைக்கப்பட்டிருக்கற புதிதான ஓவியங்கள், கலை வேலைப்பாடுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் புதிது புதிதாச் சந்திக்கற அங்கே வேலை செய்யும் கலைஞர்களும்தான். விதவிதமான கலைவேலைப்பாடுகளை மக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அதைச் செய்து காட்டுவதும், அதைப் பற்றிப் பேசுவதும்தான் அங்கிருக்கிற கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணின்னு நினைக்கிறேன். ஒவ்வொரு முறை ஒவ்வொருத்தர்கிட்டப் பேசும்போதும் ஒவ்வொரு அனுபவம். இன்னிக்கு அங்கே லீ (Lee) இருந்தாங்க. ஒரு spinning wheel (நம்ம ராட்டை மாதிரி) வெச்சு பட்டுப் &lt;br /&gt;பொதியை நூலா மாத்திக்கிட்டு இருந்தாங்க. பிறகு அந்த நூலைத் தன்னோட கலை வேலைப்பாட்டுக்குப் பயன்படுத்துவாங்களாம். அங்கேயே அவங்க செஞ்சிருந்த fiber மரம் ஒன்னு இருந்தது. கிளைகள் நூலாலையும், தொங்குன சில இலைகள் தாமிரத் தகட்டாலையும் செய்யப்பட்டு ஒரு பறவையும் மரத்துல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;லீ  பேச ஆரம்பிச்சாங்க. ஆனா மத்தவங்கள்ல இருந்து முழுக்க வேறுபட்டு இருந்தது அவங்க பேச்சு. தன்னோட கலை வேலைக்கு வேண்டிய சில பொருள்களை இந்தியாவிலிருந்தும் வாங்குவதாகச் சொன்னதோடு அதுக்குப் பிறகு அவங்க கலை தாண்டித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. ரொம்பநாள் முன்னாடி ஜெர்மனிலிருந்து தன் தாத்தாவோடு இங்கே &lt;br /&gt;குடியேறியது, இரண்டாம் உலக்ப் போரில் வேலை செய்யத் தன் தாத்தா போனது, அதுக்குப் பிரதிபலனா நிரந்தரக் குடியுரிமை விரைவாக் கிடைச்சது எல்லாம் சொல்லிப் பூர்வீகம் பேசுனாங்க. பிறகு எந்தப் புள்ளியில் தலைப்பு மாறியதெனத் தெரியவில்லை, பள்ளிக்கூடங்களையும் அரசியல் விட்டுவைக்கவில்லை, அங்கே இருக்கிற அதிகாரப் போக்குகளுக்கு நடுவே ஒரு கலைஞர் சுதந்திரமா வேலை பாக்கறது &lt;br /&gt;சுலபமில்லைன்னாங்க. அவங்க ஒரு விசயத்தைப் பேசிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு விசயத்துக்குத் தாவுன மாதிரி இருந்தது. ஆனாலும் ஒரு தொடர்பும் இருந்தது. மதங்களும் ஒரு கட்டமைக்கப்பட்ட அதிகாரம் போலத்தான்ன்னு சொன்னாங்க. அதுனாலதான் அவங்கவங்க எல்லைய விரிவாக்கறதுக்காக இன்னொருத்தர் மேல அதைத் திணித்தல் &lt;br /&gt;நடக்குதுன்னாங்க. இந்த ஊருக்கு வரதுக்கு முன்னால இருந்த இன்னொரு ஊருல அவங்களுக்கு ஓவியம் வரைய நிறைய விசயம் கிடைச்சுதுன்னாங்க. இங்கே ஏனோ தனது ஓவிய மனது தேடுவது எதுவும் கிடைப்பதில்லைன்னாங்க. ஆறு இருக்கேன்னு சொல்லத் தோணிச்சு. ஆனா ஆறே என்றாலும் லீயின் ஆறு வேறாக இருக்கலாமெனத் தோன்றியபோதில் சொல்வது தவிர்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;லீயின் சொற்கள் கோடுகளைப் பொருட்படுத்தாமல் தனக்குரிய பாதைகளில் ஒரு நவீன ஓவியத்தின் புள்ளிகளெனச் சுற்றிக்கொண்டிருந்தன. திடீரெனக் கடிகாரம் பார்த்ததும் லீ அம்மாவா மறியிருந்தார். தன் மகன் வந்து காத்திருப்பான்னு  சொல்லிக் கிளம்ப ஆயத்தமானாங்க. அவர் வீட்டுக்குப் போவதாய்ச் சொன்னார். நான் வெளியில் வந்துவிட்டேன். அவர் என்னோடும் வந்துகொண்டிருப்பது அவருக்குத் தெரியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19366730-8560409544338303201?l=selvanayaki.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://selvanayaki.blogspot.com/feeds/8560409544338303201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19366730&amp;postID=8560409544338303201' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1
